எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !
புதிய தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 ஏப்ரல், 2012

உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை: அமைச்சர்


சென்னை: ""பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என்று, அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

சட்டசபையில் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) எழுப்பிய பிரச்னைக்கு பதிலளித்து, உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழுவின் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ், பாரதியார் பல்கலைக்கழகத்தில், 35 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க, 20 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பின் ஏற்படக் கூடிய செலவை, மாநில அரசே ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, "தினமலர்' நாளிதழில் கடந்த ஆண்டு ஜனவரி 27ம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டது. விண்ணப்பித்தவர்களின் பட்டியல் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். பின், 24 பேர் மட்டுமே பணியில் சேர்ந்தனர். இந்த நியமனங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை, ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. "பாரதியார் பல்கலைக் கழகம், நியமனத்தின் போது விதிகளை முழுமையாகக் கடைபிடித்துள்ளது. முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, ஆசிரியர் சங்கத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர். தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் பணியில் சேரவில்லை. மீதமுள்ள 23 பேரும், கடந்த 1ம் தேதி முதல் பணியில் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

ஞாயிறு, 11 மார்ச், 2012

இடைத்தேர்தல் நடைபெறும் சங்கரன்கோவிலில் கிராம கிராமமாக சென்ற டாக்டர் கிருஷ்ணசாமி!





அதிமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கூட்டணி வைத்திருந்தது டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி. தற்போது புதிய தமிழகம் கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவுள்ளது.

புதிய தமிழகம் கட்சிக்கென்று சங்கரன்கோவில் தொகுதியில் கனிசமான வாக்கு வங்கி உள்ளது. இதனிடையே இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்துவதா அல்லது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பதா என்பன போன்ற கேள்விகளை மக்களிடம் கலந்து ஆலோசிபதற்காக 24.02.2012 அன்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள ஈச்சந்தா நடுவக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்றார்.

அங்கே அவரது ஆதரவாளர்களையும், மக்களையும் சந்தித்த அவர், தேர்தல் பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தார். அப்போது அவர்கள், தலைவர் (கிருஷ்ணசாமி) எடுக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றனர்.

[Hide Description] வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம் [Restore Description] 1/1 சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம்
1/1
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

Home வன்னிக்கோ னேந்தலில் சரத்குமார் - கிருஷ்ணசாமி பிரச்சாரம்

வன்னிக்கோனேந்தலில் சரத்குமார் எம்எல்ஏ, டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ பிரச்சாரம்
1/1
சங்கரன்கோவில்.மார்ச்.11 - சங்கரன்கோவில் தொகுதி வன்னிக்கோனேந்தல் , தேவர்குளம் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். சில மணி நேர இடைவெளியில் இரு தலைவர்கள் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தது அப்பகுதி தொண்டர்கள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமி கூறும் போது தமிழகத்தை ஏமாற்றியவர் இன்னமும் ஏமாற்றி கொண்டிருப்பவர் கருணாநிதி. அவரின் பேச்சை மக்கள் நிச்சயம் நம்பவேண்டாம். மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா தான். அவரின் வேட்பாளர் முத்து செல்விக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டினார். பின்னர் பிரச்சாரத்திற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எதிர்கால சந்ததிகளை பற்றி சிந்திக்கும் ஒரே தலைவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா தான். அவரால் தான் எந்த நேரமும் மக்களுக்கு என்ன தேவையோ அதை தேவையான நேரத்தில் கொடுக்க முடியும். அதனால் தான் பள்ளி மாணவ மாணவியர்க்கு இலவச சைக்கிள் மற்றும் உலகிலேயே முன்னோடி திட்டமான இலவச லேப்டாப் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். ஆனால் எதிர்காலத்ததை பற்றி சிந்தனை கொஞ்சம் கூட இல்லாமல் தன் குடும்பத்ததை பற்றிய சிந்தனை மட்;டுமே செய்பவர் கருணாநிதி. அதனால் தான் இந்த கரண்ட் தட்டுப்பாடு. அதுவும் விரைவில் தீர்ந்து விடும் என்று பேசினார். இந்த பிரச்சாரங்களை தேவர்குளம் வன்னிக்கோனேந்தல் பகுதி தேர்தல் பொறுப்பாளரும், திருவாருர் மாவட்ட செயலாளரும் தமிழக உணவுத்துறை அமைச்சருமான காமராஜ் ஏற்பாடு செய்திருந்தார். அவருடன் திருவாருர் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மேலநீலித நல்லுார் ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் குணசீலன், ஊராட்சி செயலாளர்கள் வன்னிக்கோனேந்தல் வெளியப்பதேவர், அடைக்கலாபுரம் செல்வராஜ், தொழிற்சங்க துணை செயலாளர் செல்வராஜ், குருக்கள்பட்டி செயலாளர் பிச்சைபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இருந்தனர். தலைவர்களின் இந்த பிரச்சாரங்களை காண ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் திரண்டிருந்ததை கண்டதுமே அதிமுகவின் தேர்தல் எழுச்சி வெட்ட வெளிச்சாமானது.

ஞாயிறு, 4 மார்ச், 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு புதிய தமிழகம் ஆதரவு


சென்னை: பரமக்குடி உயிர்ப்பலிகள் நடந்த சில மாதங்களுக்குள் மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி.
வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.


இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேரில் சந்தித்து, வரும் 18ம் தேதி நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்விக்கு தங்கள் கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முதல்வர் ஜெயலலிதா தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின் போது கழக பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடியில் தலித்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பரிதாபமாக இறந்தனர். அப்போது ஜெயலலிதா அரசை அராஜகம் மிகுந்த அரசு என வர்ணித்து கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் கிருஷ்ணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 3 மார்ச், 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு புதிய தமிழகம் ஆதரவு


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, அவரது இல்லத்தில் நேற்று பிற்பகல் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து, 18.3.2012 அன்று நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.முத்துச்செல்விக்கு தங்களது கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது, கழக பொருளாளரும், நிதித்துறை அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல்: முதல்வரை சந்தித்தப்பின் கிருஷ்ணசாமி பேட்டி

1/1
சென்னை, மார்ச்.- 3 - சங்கரன் கோயில் சட்டபேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்த விபரம் வருமாறு:- புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. சென்னையில் நேற்று தமிழக முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவைஇன்று (நேற்று) அவரது இல்லத்தில் சந்தித்து பேசினேன் அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க, வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவுஅளிக்கிறது என்பதை அவரிடத்திலே கூறினேன். முன்னதாக பரமக்குடி துப்பாக்கி சம்பவம்சம்மந்தமாக எங்களது கோரிக்கைகளை முதல்வரிடம் எடுத்துரைத்தோம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதிஅளித்துள்ளார். இதையடுத்து எங்கள் கட்சி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் நிருபர்கள்கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக முன்பு அறிவித்தீர்களே.? பதில்:அன்று இருந்த சூழ்நிலையில் அந்த முடிவை மேற்கொண்டோம் தற்போது சங்கரன்கோவில் அ.தி.மு.க. தேர்தல் பணி குழுவில் எங்களை இணைத்துகொண்டு புதிய தமிழகம் கட்சித் தொண்டர்கள் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவார்கள், இவ்வாறு டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

சனி, 25 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது: டாக்டர் கிருஷ்ணசாமி






சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

புதிய தமிழக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினேன். அங்கு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் வசதி, மயான வசதி போன்ற வசதிகள் இல்லை. கூட்டணி குறித்து விவாதம் செய்தோம்.

ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிகாரம் செலுத்தும் நிலை கடந்த சில ஆட்சிகளில் உள்ளது. அதே நிலை இந்த ஆட்சியில் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அங்கு 32 அமைச்சர்கள் முகாம் இட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை திரும்ப அழைக்க வேண்டும்.

நெல்லை பொறுப்பாளர்கள் தவிர பிற மாவட்ட பொறுப்பாளர்களை திரும்ப அழைப்பதன் மூலம் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் நடந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் அ.தி.மு.க. பெரிய வெற்றி பெற்றுள்ளது.

எனவே இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது. தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஓரிரு நாளில் அரசியல் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்வோம்.

சென்னையில் நடந்த என்கவுன்டர் சம்பவம் ஏற்புடையதல்ல. 90 சதுரஅடி வீட்டில் இருந்து அவர்கள் தப்பி இருக்க முடியாது. அவர்களை கைது செய்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் போட்டியில்லை: கிருஷ்ணசாமி

மதுரை: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், சங்கரன்கோவில் தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். தொகுதியில் 32 அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சிறந்தது அல்ல. அவர்களை அங்கிருந்து திருப்பியழைக்க வேண்டும் என கூறினா

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்


நெல்லை: சங்கரன்கோவிலில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி ஆதரவு கேட்டால், நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுவரையில் எந்த கட்சியினரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். பிப்.25ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
 கூட்டணி குறித்து அதிமுக பேசினால், ஆடித்தபசு விழாவில் எங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி, தியாகி இமானுவேல்சேகரனுக்கு அரசு விழா, பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  வழக்குப்பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைப்போம். பரமக்குடியில் பலியான குடும்பங்களை பார்க்க முடியாதவாறு எனக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது  மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், இன்பராஜ், கண்மணிமாவீரன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ்,  இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், மாணவரணி செயலாளர் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - கிருஷ்ணசாமி பேட்டி

v



நெல்லை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமெனில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கி கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மின்வெட்டு குறையவில்லை. அண்மை காலமாக சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி போலீசார் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள் என விசாரித்து இருக்கலாம்.

இந்திய அரசியல் சட்டப்படி நீதித்துறை அனுமதியில்லாமல் யாருடைய உயிரையும் பறிக்க முடியாது. 5 பேரையும் சுட்டுக் கொன்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாளை சித்தா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது தவறு. அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க அவர்களை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

தேர்தல் விதிமீறல் : கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு





சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று குருவிகுளம் ஒன்றியம் பழைய அப்பனேரி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறை மீறி அந்த கிராமத்தில் கட்சிக்கொடி ஏற்றியதோடு தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டாராம். இது தேர்தல் விதிமுறை மீறிய செயல் என கூறி டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகிய இருவர் மீது திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப்பதிவு செய்தார்.

சங்கரன்கோவிலில் போட்டியா? கிருஷ்ணசாமி பதில்





சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாளை மதுரையில் நடக்கும் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என இக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நெல்லையில் மேலும் அவர் கூறுகையில்; தி.மு.க., ஆட்சியில் உள்ள குறைபாடுகள் அ.தி.மு.க., நீக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் நடந்த என்கவுன்டர் தவறானது. இந்த சம்பவத்தில் சந்தேகம் எழுகிறது என்றார்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வாக்குவாதமாக மாறியது கிருஷ்ணசாமி பேச்சு




சென்னை:""டாஸ்மாக், "பார்'களை ஒடுக்கப்பட்டவர்கள் நடத்த, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என, கிருஷ்ணசாமி வலியுறுத்தியதால், சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசு - பா.ம.க: அனைத்து குற்றங்களுக்கும் குடி தான் காரணம். டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மதுவிலக்கு அமல் கொள்கையில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதன் தீமைகளை முதல்வர் நன்கு அறிந்துள்ளார். இந்தியாவில், குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும், மதுவிலக்கு அமலில் இல்லை. தீவு போல, தமிழகத்தில் மட்டும் அமல்படுத்துவது, நடைமுறையில் சாத்தியமில்லை.

கள்ளச்சாராய மற்றும் சமூக விரோதிகளை ஊக்குவிக்கவே, இதை வலியுறுத்துகின்றனர். இதன் பின்னணியில் கள்ளச்சாராய வியாபாரிகள் உள்ளனரோ என்ற சந்தேகம் உள்ளது. மதுக்கடைகளை மூடினால், அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பணம், சமூக விரோதிகளுக்கு சென்றுவிடும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: பா.ம.க., நிறுவனர் வீடு இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் தான் புதுச்சேரி உள்ளது. அங்கு பிராந்தி கடை, கள்ளுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடையடைப்பு போராட்டம் நடத்தும் தைரியம் உள்ளதா?
கலையரசு: எங்கள் தைரியத்தை வெளிப்படுத்த தயாராகவே உள்ளோம்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. எங்கள் மாவட்டத்தில், ஒரு டாஸ்மாக் பார் கூட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வசம் கிடையாது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட, "பார்' கோருகிறாரா அல்லது உ தவி செய்ய கோருகிறாரா? "பார்'கள், எவ்வித ஜாதி அல்லது மத அடிப்படையில் கொடுப்பதில்லை. அது ஒரு தொழில். டாஸ்மாக் என்பது வியாபார நிறுவனம். விதிப்படி தான், "பார்'கள் ஒதுக்கப்படும்.

கிருஷ்ணசாமி: கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் கூறுகிறேன். குடிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

நத்தம் விஸ்வநாதன்: போகிற போக்கை பார்த்தால், குடிக்கும் ஜாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் சரி. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர்களும் ஏலத்தில் கலந்து கொண்டு, "பார்' எடுக்கலாம்.

கிருஷ்ணசாமி: போட்டி, ஏலம் நடப்பதில்லை. ஒதுக்கீடு தான் செய்கிறீர்கள். இடஒதுக்கீடு வழங்குவது போல, இதையும் செய்ய பரிசீலிக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவருக்கு அலுவலகமும், அரசு ஊழியர்களும் உதவியாக உள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு உதவியாளர்கள் இல்லை. எம்.எல்.ஏ., அலுவலகத்தை கூட நாங்கள் போய் தான் திறக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: எம்.பி.,க்களுக்கும் அதே நிலை தான். ஊராட்சித் தலைவருக்கு 1,500 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு பல சலுகைகள் உள்ளன.

கிருஷ்ணசாமி: எப்படி அலுவலர் இன்றி செயல்படுவது. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கி, அதில் ஒரு அதிகாரியை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.
நத்தம் விஸ்வநாதன்: எம்.எல்.ஏ.,க்களின் ஒட்டுமொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றாலும், அதில் உதவியாளர் வைத்துக் கொள்வதற்கான தொகையும் தான் அடக்கம்

திங்கள், 30 ஜனவரி, 2012

ஆளுநர் உரையில் எந்த புதிய செய்திகளுமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி

ஆளுநர் உரையில் எந்த புதிய செய்திகளுமே இல்லை: டாக்டர் கிருஷ்ணசாமி




தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (30.01.2012) ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் எம்எல்ஏ டாக்டர் கிருஷ்ணசாமி,

இன்று ஆளுநர் ரோசய்யா அவர்களின் உரையில், தமிழ்நாட்டில் இந்த ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்கள் ஆகின்ற நிலையிலும் தொடரும் மின்வெட்டு, தானே புயலால் ஏற்பட்ட பாதிப்பு, கூடங்குளம் அணுமின் நிலையம், முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை போன்றவற்றிற்கு ஒரு தீர்வு காணக் கூடிய வகையில் எந்த புதிய செய்திகளுமே இதில் இல்லை என்றார்.

சனி, 28 ஜனவரி, 2012

கோவில்பட்டி நெல்லைக்கு 16 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அரசு பஸ் மீண்டும் இயக்கம்


சனி, 21 ஜனவரி, 2012

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணை தேவை: கிருஷ்ணசாமி

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: சி.பி.ஐ விசாரணை தேவை: கிருஷ்ணசாமி


சென்னை, ஜன. 20: பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.  இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  2001-க்குப் பிறகு தமிழகம், குறிப்பாக தென் மாவட்டங்கள் சமூக நல்லிணக்கத்தோடு அமைதிப் பூங்காவாக இருந்தது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியனை சமூக விரோதிகள் படுகொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். கடந்த 6 மாத அதிமுக ஆட்சியில் பல அதிகார மையங்கள் இருந்தன. அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, இனி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை சீராகும்.  கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் "தானே' புயலால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு ரூ. 20 ஆயிரம், நெல் பயிரிட்டிருந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 15 ஆயிரம், முந்திரி, பலா, தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.  சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் கிருஷ்ணசாமி.

பசுபதி பாண்டியன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் ?


புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் உண்மையான குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலை கவலை அளிப்பதாக உள்ளது. முதல்வர் நடவடிக்கை எடுத்து சரி செய்வார் என்று நம்புகிறேன் என அவர் கூறினார்.

பசுபதி பாண்டியன் கொலை உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்




சென்னை : பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை. வீடு இழந்தோருக்கு ரூ.2,500 தமிழக அரசு வழங்குகிறது.

அதை வைத்து வீடு கட்ட முடியாது. எனவே, அவர்களுக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். பலா, முந்திரி தோப்பு வைத்திருந்த விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தென்தமிழகத்தில் 2001ம் ஆண்டுக்கு பிறகு எல்லா சமுதாய மக்களும் ஒற்றுமையாக இருந்தனர். அதை சீர்குலைக்கும் வகையில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு கிருஷ்ணசாமி கூறினார்.

வெள்ளி, 13 ஜனவரி, 2012

தென் மாவட்ட மக்கள் இணக்கமாக உள்ள நிலையில் விஷமிகள் சதிக்கு இளைஞர்கள் பலியாக வேண்டாம்: டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் பேட்டி:

Jan 12, 2012 Views: 12
பசுபதி பாண்டியனின் உடல் அடக்கம் செய்த நிகழ்ச்சிக்கு புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் பசுபதி பாண்டியனின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி செய்ய வேண்டும் அவருடைய குழந்தைகளுக்கு அரசு கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் நடந்த வன்முறை தென் மாவட்ட மக்கள் எல்லோரும் சமுதாய இணக்கமான சூழ்நிலையில் உள்ளனர். பகைமையை வளர்க்க விஷமிகள் வந்து திட்டமிட்டு சதி செயலில் ஈடுபடுவதால் தேவேந்திர குல இளைஞர்கள் பலியாக வேண்டாம். தலித் இன தலைவர்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்