எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 25 பிப்ரவரி, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது: டாக்டர் கிருஷ்ணசாமி






சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என்று டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

புதிய தமிழக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி,

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள 27 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தினேன். அங்கு அடிப்படை வசதிகள் தீர்க்கப்படவில்லை. குடிநீர் வசதி, மயான வசதி போன்ற வசதிகள் இல்லை. கூட்டணி குறித்து விவாதம் செய்தோம்.

ஆளும் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிகாரம் செலுத்தும் நிலை கடந்த சில ஆட்சிகளில் உள்ளது. அதே நிலை இந்த ஆட்சியில் ஏற்படாமல் நடந்து கொள்ள வேண்டும். அங்கு 32 அமைச்சர்கள் முகாம் இட்டு தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். அவர்களை திரும்ப அழைக்க வேண்டும்.

நெல்லை பொறுப்பாளர்கள் தவிர பிற மாவட்ட பொறுப்பாளர்களை திரும்ப அழைப்பதன் மூலம் பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் நடந்து 9 மாதம் தான் ஆகிறது. அதில் அ.தி.மு.க. பெரிய வெற்றி பெற்றுள்ளது.

எனவே இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அது அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.

எனவே கால விரயம், பொருள் விரயத்தை தவிர்க்க சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது. தேர்தலில் ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஓரிரு நாளில் அரசியல் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்வோம்.

சென்னையில் நடந்த என்கவுன்டர் சம்பவம் ஏற்புடையதல்ல. 90 சதுரஅடி வீட்டில் இருந்து அவர்கள் தப்பி இருக்க முடியாது. அவர்களை கைது செய்திருந்தால் பல உண்மைகள் வெளிவந்திருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் போட்டியில்லை: கிருஷ்ணசாமி

மதுரை: சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், சங்கரன்கோவில் தொகுதியில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும். தொகுதியில் 32 அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சிறந்தது அல்ல. அவர்களை அங்கிருந்து திருப்பியழைக்க வேண்டும் என கூறினா

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

புதிய தமிழகம் விரும்பினால் ஆதரவு ஜான்பாண்டியன் பேட்டி

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்


நெல்லை: சங்கரன்கோவிலில் தமமுக தலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி ஆதரவு கேட்டால், நாங்கள் கொடுக்க தயாராக இருக்கிறோம். இதுவரையில் எந்த கட்சியினரும் தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. எங்களின் கோரிக்கைகளை ஏற்பவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். பிப்.25ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. அதில் எங்கள் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.
 கூட்டணி குறித்து அதிமுக பேசினால், ஆடித்தபசு விழாவில் எங்கள் சமூகத்தினருக்கு மண்டகப்படி, தியாகி இமானுவேல்சேகரனுக்கு அரசு விழா, பரமக்குடி துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது  வழக்குப்பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைப்போம். பரமக்குடியில் பலியான குடும்பங்களை பார்க்க முடியாதவாறு எனக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இதை கண்டித்து இன்று அனைத்து மாவட்ட தலைநகரிலும் தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போட்டியின்போது  மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், இன்பராஜ், கண்மணிமாவீரன், மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ்,  இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், மாணவரணி செயலாளர் அருண் உட்பட பலர் உடனிருந்தனர்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது - கிருஷ்ணசாமி பேட்டி

v



நெல்லை: அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டுமெனில் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள 32 அமைச்சர்களை முதலமைச்சர் ஜெயலலிதா விலக்கி கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

அதிமுக ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் மின்வெட்டு குறையவில்லை. அண்மை காலமாக சட்டம் ஓழுங்கு சீர்குலைந்து விட்டது. கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி போலீசார் 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வேறு எங்கெல்லாம் கொள்ளையடித்தார்கள் என விசாரித்து இருக்கலாம்.

இந்திய அரசியல் சட்டப்படி நீதித்துறை அனுமதியில்லாமல் யாருடைய உயிரையும் பறிக்க முடியாது. 5 பேரையும் சுட்டுக் கொன்றது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பாளை சித்தா கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு உடனடி தீர்வு காண வேண்டும். மாணவர்கள் படிப்பை தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது தவறு. அங்கு ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க அவர்களை விலக்கி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

தேர்தல் விதிமீறல் : கிருஷ்ணசாமி மீது வழக்குப்பதிவு





சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலையொட்டி புதிய தமிழகம் கட்சி நிறுவனத்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று குருவிகுளம் ஒன்றியம் பழைய அப்பனேரி கிராமத்தில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் தேர்தல் விதிமுறை மீறி அந்த கிராமத்தில் கட்சிக்கொடி ஏற்றியதோடு தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டாராம். இது தேர்தல் விதிமுறை மீறிய செயல் என கூறி டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகிய இருவர் மீது திருவேங்கடம் இன்ஸ்பெக்டர் ராஜராஜன் வழக்குப்பதிவு செய்தார்.

சங்கரன்கோவிலில் போட்டியா? கிருஷ்ணசாமி பதில்





சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுமா என்பது குறித்து நாளை மதுரையில் நடக்கும் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என இக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் தெரிவித்தார்.

நெல்லையில் மேலும் அவர் கூறுகையில்; தி.மு.க., ஆட்சியில் உள்ள குறைபாடுகள் அ.தி.மு.க., நீக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. சென்னையில் நடந்த என்கவுன்டர் தவறானது. இந்த சம்பவத்தில் சந்தேகம் எழுகிறது என்றார்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

சங்கரன்கேவிலில் புதிய தமிழகம் போட்டியிடுமா? கிருஷ்ணசாமி ஆலோசனை

சங்கரன்கோவில்: சங்கரன்கேவில் இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி அங்கம் வகித்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டதால் கூட்டணி உடைந்து நொருங்கியது.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக அதிமுக அறிவித்தது. அதன்படியே வேட்பாளராக முத்துச்செல்வியை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. 26 அமைச்சர்கள் அடங்கிய 34 பேர் கொண்ட தேர்தல் பணிககுழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு என வலுவான வாக்கு வங்கி உள்ளதால் அங்கு போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே களத்தில் அதிமுக, திமுக, மதிமுக என வலுவான கட்சிகள் இருக்கும் நிலையில் புதிய தமிழகம் போட்டியிடும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகின்றது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் முடிவு!

நடைபெற இருக்கும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, தொகுதி மக்களின் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும் என அதிமுக கூட்டணியிலுள்ள புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி உட்பட ஒன்பது கட்சிகள் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்தன. உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தனித்துப் போட்டியிட்ட நிலையில் கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளும் அதே நிலைபாட்டை எடுத்தன.

சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஆளும் அ.இ.அதி.மு.க முன்கூட்டியே தனது கட்சியின் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பணிகளை துவங்கியுள்ள நிலையில் கூட்டணியில் அங்கம் பெற்ற மற்ற கட்சிகளும் தங்களது நிலைபாடு குறித்து முடிவெடுக்க ஆலோசனை நட்த்தி வருகிறார்கள்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது. இத்தேர்தலில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு வருகிற 23,24 ஆகிய தேதிகளில் தொகுதிக்கு உட்பட்ட மூன்று ஒன்றியங்களில் உள்ள கிராம்ம் தோறும் சென்று புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொகுதி மக்களின் கருத்தறிய உள்ளேன். அதன்பின் முடிவு அறிவிக்கப்படும்."

மேற்கண்டவாறு டாக்டர் க.கிருஷ்ணசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வாக்குவாதமாக மாறியது கிருஷ்ணசாமி பேச்சு




சென்னை:""டாஸ்மாக், "பார்'களை ஒடுக்கப்பட்டவர்கள் நடத்த, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,'' என, கிருஷ்ணசாமி வலியுறுத்தியதால், சட்டசபையில் வாக்குவாதம் நடந்தது.சட்டசபையில் நடந்த விவாதம்:கலையரசு - பா.ம.க: அனைத்து குற்றங்களுக்கும் குடி தான் காரணம். டாஸ்மாக் கடைகளை ஒழிக்க வேண்டும்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: மதுவிலக்கு அமல் கொள்கையில் மாறுபட்ட கருத்து கிடையாது. இதன் தீமைகளை முதல்வர் நன்கு அறிந்துள்ளார். இந்தியாவில், குஜராத் தவிர அனைத்து மாநிலங்களிலும், மதுவிலக்கு அமலில் இல்லை. தீவு போல, தமிழகத்தில் மட்டும் அமல்படுத்துவது, நடைமுறையில் சாத்தியமில்லை.

கள்ளச்சாராய மற்றும் சமூக விரோதிகளை ஊக்குவிக்கவே, இதை வலியுறுத்துகின்றனர். இதன் பின்னணியில் கள்ளச்சாராய வியாபாரிகள் உள்ளனரோ என்ற சந்தேகம் உள்ளது. மதுக்கடைகளை மூடினால், அரசு கஜானாவுக்கு வர வேண்டிய பணம், சமூக விரோதிகளுக்கு சென்றுவிடும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்: பா.ம.க., நிறுவனர் வீடு இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ., தொலைவில் தான் புதுச்சேரி உள்ளது. அங்கு பிராந்தி கடை, கள்ளுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடையடைப்பு போராட்டம் நடத்தும் தைரியம் உள்ளதா?
கலையரசு: எங்கள் தைரியத்தை வெளிப்படுத்த தயாராகவே உள்ளோம்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. எங்கள் மாவட்டத்தில், ஒரு டாஸ்மாக் பார் கூட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் வசம் கிடையாது.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்: ஆதிதிராவிட மக்கள் பாதிக்கப்பட, "பார்' கோருகிறாரா அல்லது உ தவி செய்ய கோருகிறாரா? "பார்'கள், எவ்வித ஜாதி அல்லது மத அடிப்படையில் கொடுப்பதில்லை. அது ஒரு தொழில். டாஸ்மாக் என்பது வியாபார நிறுவனம். விதிப்படி தான், "பார்'கள் ஒதுக்கப்படும்.

கிருஷ்ணசாமி: கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் கூறுகிறேன். குடிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

நத்தம் விஸ்வநாதன்: போகிற போக்கை பார்த்தால், குடிக்கும் ஜாதியினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்காமல் இருந்தால் சரி. இது நடைமுறையில் சாத்தியமில்லை. அவர்களும் ஏலத்தில் கலந்து கொண்டு, "பார்' எடுக்கலாம்.

கிருஷ்ணசாமி: போட்டி, ஏலம் நடப்பதில்லை. ஒதுக்கீடு தான் செய்கிறீர்கள். இடஒதுக்கீடு வழங்குவது போல, இதையும் செய்ய பரிசீலிக்க வேண்டும். ஊராட்சி தலைவர், ஒன்றியத் தலைவருக்கு அலுவலகமும், அரசு ஊழியர்களும் உதவியாக உள்ளனர். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு உதவியாளர்கள் இல்லை. எம்.எல்.ஏ., அலுவலகத்தை கூட நாங்கள் போய் தான் திறக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: எம்.பி.,க்களுக்கும் அதே நிலை தான். ஊராட்சித் தலைவருக்கு 1,500 ரூபாய் தான் கிடைக்கும். ஆனால், எம்.எல்.ஏ.,க்களுக்கு பல சலுகைகள் உள்ளன.

கிருஷ்ணசாமி: எப்படி அலுவலர் இன்றி செயல்படுவது. கலெக்டர் அலுவலகத்தில் ஒரு அறை ஒதுக்கி, அதில் ஒரு அதிகாரியை ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.
நத்தம் விஸ்வநாதன்: எம்.எல்.ஏ.,க்களின் ஒட்டுமொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாய் என்றாலும், அதில் உதவியாளர் வைத்துக் கொள்வதற்கான தொகையும் தான் அடக்கம்