எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 26 ஜூலை, 2012

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்புக்கு ஆதரவு புதிய தமிழகம் முடிவு



 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னையில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பிரணாப் முகர்ஜிக்கு புதிய தமிழகம் கட்சியில் உள்ள 2 எம்எல்ஏக்களும் வாக்களிப்பது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். பிரணாப்புக்கு வாக்களிப்பதன்கூட்டணியில் எந்த பிளவும் ஏற்படாது.

சங்கரன்கோவில் மற்றும் புதுக்கோட்டையில் நடந்த இடைத்தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா எங்களை தொடர்பு கொண்டு அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், ஜனாதிபதி தேர்தல் குறித்து எங்களிடம் எதுவும் பேசவில்லை. அதனால் சுதந்திரமாக முடிவெடுத்துள்ளோம். ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி, என்னிடம் தொலைபேசியில் நேரடியாக ஆதரவு கேட்டார். சங்மா எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. அதனால் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்தோம்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

தாமிரபரணி ஆற்றங்கரையில் மணிமண்டபம் : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

திருநெல்வேலி : நெல்லை ஆற்றங்கரையில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சித்தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான கிருஷ்ணசாமி கட்சியினருடன் நேற்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நெல்லை, கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 5 லட்சம் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு சட்டரீதியிலான உரிமைகள் அளிக்கப்பட வலியுறுத்தி 99ம் ஆண்டு நெல்லையில் பேரணி நடத்தினோம்.
அப்போது போலீசார் தடியடி நடத்தியதில் ஒரு வயது விக்னேஷ் உட்பட 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகிறோம்.
ஜாதி, மதம், அனைத்தையும் கடந்து ஆற்றில் மூழ்கி இறந்த 17 பேருக்கு நினைவஞ்சலி செலுத்த ஆற்றங்கரையில் இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

தாமிரபரணியில் மூழ்கி இறந்தவர்களுக்கு 13ம் ஆண்டு நினைவு தினத்தில் மலரஞ்சலி



நெல்லை : நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் நினைவு தினத்தையொட்டி அனைத்துக்கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்தனர்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டு தோறும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளால் தாமிரபரணி ஆற்று நீரில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக கொக்கிரகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமையில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அமைதிப் பேரணி நடந்தது. பின்னர் ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலும், திரிணாமுல் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராகவ் மாடசாமி தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பாமக சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் வியனரசு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் ஊர்வமலாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
பா.ஜ., சார்பில் எஸ்சி அணி மாநில செயலாளர் முருகதாஸ் தலைமை யிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவன தலைவர் தொல் திருமாவளவன் தலைமையிலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயபாலன் தலைமையில் கொக்கிர குளம் தாமிரபரணி ஆற்றங்கரை, சந்திப்பு, வண்ணார்பேட்டை பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தாமிரபரணியில் 17 பேர் பலியானதன் 13ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

திருநெல்வேலி: நெல்லை, தாமிரபரணியில் உயிர் நீத்த 17 பேரின் நினைவு தினத்தையொட்டி, பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். கடந்த 1999ல், நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி நடந்த ஊர்வலம், கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது, போலீசார் தடியடி நடத்தினர். அப்போது, தாமிரபரணி ஆற்றில் மூழ்கி, 17 பேர் பலியாகினர். தி.மு.க., ஆட்சியில் நடந்த இந்த சம்பவத்தின் 13வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட், பா.ஜ., மள்ளர் மீட்புகளம், பா.ம.க., ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு கட்சியினருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கி, போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததால், அஞ்சலி நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்தன. ஜான் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தலைவர்களைக் கொண்ட மாஞ்சோலை போராளிகள் நினைவுத் தூண் அமைப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அக்குழுவினர் நெல்லை கலெக்டரைச் சந்தித்து, நினைவுத் தூண் அமைக்க, ஆற்றுப்படுகையில் 10 சென்ட் நிலம் ஒதுக்கித் தருமாறு கேட்டனர்.

திங்கள், 23 ஜூலை, 2012

நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராட்டம் "புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை : ""தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடும் விதத்தில், ஆக., 6ம் தேதி சென்னையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேயிலை தோட்டத் தொழிலாளர் உரிமைக்காக, 1999 ஜூலை 23ல், "புதிய தமிழகம்' தலைமையில், திருநெல்வேலியில் நடந்த பேரணியில், போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி, 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர். அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (இன்று) திருநெல்வேலியில் பேரணி மற்றும் மவுன அஞ்சலி நடக்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த, தமிழக அளவில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, ஆக., 6ம் தேதி சென்னையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறோம். டாஸ்மாக் "பார்' ஒப்பந்த படிவ வினியோகத்தில்,விண்ணப்பங்களை வெளிப்படையாக கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு தருவதாக திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் புகார்கள் வந்துள்ளன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்; அரசு வருமானத்தில் நஷ்டத்தை தரும். தகுதியுடையவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராட்டம் "புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை : ""தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடும் விதத்தில், ஆக., 6ம் தேதி சென்னையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேயிலை தோட்டத் தொழிலாளர் உரிமைக்காக, 1999 ஜூலை 23ல், "புதிய தமிழகம்' தலைமையில், திருநெல்வேலியில் நடந்த பேரணியில், போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி, 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர். அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (இன்று) திருநெல்வேலியில் பேரணி மற்றும் மவுன அஞ்சலி நடக்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த, தமிழக அளவில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, ஆக., 6ம் தேதி சென்னையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறோம். டாஸ்மாக் "பார்' ஒப்பந்த படிவ வினியோகத்தில்,விண்ணப்பங்களை வெளிப்படையாக கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு தருவதாக திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் புகார்கள் வந்துள்ளன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்; அரசு வருமானத்தில் நஷ்டத்தை தரும். தகுதியுடையவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

நீர் ஆதாரங்களை பாதுகாக்க போராட்டம் "புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி அழைப்பு

கோவை : ""தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க, அனைத்து அமைப்புகளும் ஒன்று திரண்டு போராடும் விதத்தில், ஆக., 6ம் தேதி சென்னையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படும்'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி
தெரிவித்தார்.கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தேயிலை தோட்டத் தொழிலாளர் உரிமைக்காக, 1999 ஜூலை 23ல், "புதிய தமிழகம்' தலைமையில், திருநெல்வேலியில் நடந்த பேரணியில், போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகி, 17 பேர் தாமிரபரணி ஆற்றில் இறந்தனர். அவர்களின் 14வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை (இன்று) திருநெல்வேலியில் பேரணி மற்றும் மவுன அஞ்சலி நடக்கிறது. தமிழகத்தின் நீர் ஆதாரங்கள் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளன. நீர் ஆதாரங்களை பாதுகாக்க தொடர்ச்சியான போராட்டங்கள் நடத்த, தமிழக அளவில் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி, ஆக., 6ம் தேதி சென்னையில், ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்துகிறோம். டாஸ்மாக் "பார்' ஒப்பந்த படிவ வினியோகத்தில்,விண்ணப்பங்களை வெளிப்படையாக கொடுக்காமல், குறிப்பிட்ட சிலருக்கு தருவதாக திண்டுக்கல், திருவள்ளூர் மாவட்டங்களில் புகார்கள் வந்துள்ளன. இது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்; அரசு வருமானத்தில் நஷ்டத்தை தரும். தகுதியுடையவர்களுக்கு மட்டும் வாய்ப்பு தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

சனி, 14 ஜூலை, 2012

கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி, ஜூலை.12-

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தூத்துக்குடி வந்தார். அப்போது புதியதமிழகம் கட்சி தலைவரும், ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. வுமான டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் எந்த வளர்ச்சி பணிகளும் செய்யப்படவில்லை என்றும், வீட்டுமனைபட்டா,குடிநீர், முதியோர் உதவித்தொகை தொடர்பாக கொடுக்கப்பட்ட 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.

இதையடுத்து அந்த பிரச்சினை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியளித்தார். அதன்பிறகு அமைச்சரை முற்றுகையிட்டிருந்த பொது மக்கள் கலைந்துசென்றனர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.