எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 28 டிசம்பர், 2016

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்

தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேவேந்திரகுல வேளாளர் வகுப்பினருக்கு மத்திய மாநில அரசுகள் விவசாயத்தில் சிறப்பு நிதிகள் ஒதுக்க வேண்டும் என கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 7ஆம்தேதி முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தபோவதாக தெரிவித்தார்.
மேலும் மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயரை வைக்கவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக