எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 31 அக்டோபர், 2013

பரமக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கைக்கு எதிர்ப்பு: கிருஷ்ணசாமி வெளிநடப்பு...

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.
பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நீதிபதி சம்பத் குழுவின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது..

பரமக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை உண்மைக்கு புறம்பானது. சி.பி.ஐ.விசாரணை நடக்கின்ற போது அவசர அவசரமாக அறிக்கை வெளியிடுவது ஏற்புடையதல்ல. ஏழு உயிர்கள் பலியானதை நியாப்படுத்தி, தவறு செய்த அதிகாரிகளுக்கு வக்காலத்து வாங்குகிறது அறிக்கை. – டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சியினர் வெளிநடப்பு..


பரமக்குடி துப்பாக்கி சூடு அறிக்கைக்கு எதிர்ப்பு கிருஷ்ணசாமி வெளிநடப்பு

சென்னை: பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை நடத்தி ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பயனளிக்கவில்லை. நடவடிக்கைகள் பயனில்லாமல் போனதால் துப்பாக்கிச்சூடுக்கு உத்தரவிடப்பட்டது.


வன்முறையை தடுக்க துப்பாக்கிச்சூடு அவசியமாக இருந்தது என விசாரணை ஆணையம் கருதுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தாமல் இருந்திருந்தால் தென் மாவட்டங்களுக்கு வன்முறை பரவியிருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் இருந்து இன்று வெளிநடப்பு செய்தார்.

பரமக்குடி துப்பாக்கி சூடு-விசாரணை கமிஷன் அறிக்கை!



ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.9.2011 அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 7 உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
தேவேந்திர மக்கள் தலைவரான ஜான் பாண்டியன் 11.9.2011 அன்று பரமக்குடியில் உள்ள தேவேந்திரர் தலைவரான இமானுவேல் சேகரன் சமாதிக்கு செல்வதாக இருந்தார். அப்போது 2 நாட்களுக்கு முன்பு தேவேந்திர வகுப்பைச் சேர்ந்த சிறுவன் பழனிக்குமார், பிற ஜாதியைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.
ஜான் பாண்டியன் பரமக்குடி செல்லும் வழியில் பச்சேரி கிராமத்துக்கு சென்று சிறுவனுடைய இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக இருந்த பயணத் திட்டம் பற்றிய தகவல் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்றது. அவரது வருகை மற்றும் பேச்சு, இரு பிரிவினரிடையே மோதலை அதிகரிக்கும் என்பதால் ஜான் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது இமானுவேல் சேகரனின் சமாதிக்கு சென்று வரும் வண்டிகளின் போக்குவரத்து தடைபட்டது. இந்த சமயத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது டாக்டர் கிருஷ்ணசாமியும் வந்ததால் அங்கு பதட்டம் அதிகமானது. டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் சமாதிக்கு செல்ல அனுமதிக்கப்படும்போது, ஜான் பாண்டியன் அனுமதிக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். சாலை மறியல் தீவிரமானது.
கலவரக்காரர்கள் வண்டியில் இருந்த டாக்டர் கிருஷ்ண சாமியின் ஆதரவாளர்களை வெளியே இழுக்க முற்பட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது அடையாறு துணை கமிஷனர் செந்தில் வேலனின் சட்டையை கலவரக்காரர்களில் ஒருவர் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டார்.
இது காவல் துறையினர் தடியடி நடத்த வழிவகுத்தது. கலவரக்காரர்கள் எல்லா திசைகளிலும் கலைந்து சென்று மீண்டும் கூடி போலீஸ் மீது கற்கள், செருப்புகள், மரக்கட்டைகள் கொண்டு தாக்கினர். இதைப்பார்த்த கமுதி தாசில்தார் சிவக்குமார் அவர்களை கலைந்து செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் ஆணையிட்டார்.
ஆனால் தொடர்ந்து அங்கு தகராறுகள் நடக்க தொடங்கியது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. பொது சொத்துக்ளுக்கு சேதம் ஏற்படுத்தினர். பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் கலவரக்காரர்கள் கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டனர். பரமக்குடி பெண் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தவர்களை பூட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதனால் வேறு வழியின்றி கமுதி வட்டாச்சியர் சிவகுமார் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். இதன்படி துப்பாக்கி சூடு நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்தவும், எதிர் ஜாதியினர் அதிக அளவு வசிக்கும் பகுதிகளுக்கு வன்முறை பரவாமல் தடுக்கவும் இந்த துப்பாக்கி சூடு முற்றிலும் அவசியம் என்று விசாரணை ஆணையம் கருதுகிறது.
துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்திருந்தால் இப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். இது காவல்துறையின் தற்காப்பு குறித்த வழக்காகும். கலவரம் செய்தவர்களின் நடத்தை விலங்கு நடத்தையின் எல்லையை எட்டியதுடன் பண்பாட்டிற்கு முரணாகவும், எல்லை கடந்ததாகவும் உள்ளது. இது முற்றிலும் மன்னிக்கதக்கது அல்ல.
இத்தகைய சூழ்நிலையில் காவல்துறையினர் நடந்து கொண்ட மெச்சத்தக்க முறையை இந்த கமிஷன் பாராட்டுகிறது. துப்பாக்கி சூடு நடத்தும் முன்பு போலீசார் அளவற்ற பொறுமையை கடைபிடித்தனர். மரணம் அடைந்தவர்களை பொறுத்த வரையில் கலவரங்களில் ஈடுபட தவறான வழி நடத்தப்பட்டு பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலையும், இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டதன் மூலம் அரசு அளவில்லா கருணை காட்டியுள்ளது.
காவல்துறை துணை தலைவரில் தொடங்கி கீழ் நிலை பதவிகளில் உள்ளவர்கள் பலர் கடுமையான காயம் அடைந்தனர். இது தொழில் சார்ந்த அபாயமாகும். அவர்களது மருத்துவ செலவை மாநில அரசு முறையாக ஏற்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சமயத்தில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 10–ம் வகுப்பு மாணவன் சத்திய மூர்த்திக்கு காயம் ஏற்பட்டது. அவன் தன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரைக்குமாறு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டான். சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டாம்.
இந்த கலவரத்தின்போது காவல் துறையினர் மிகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் சில காவல்துறையினர் காவல்நிலை உத்தரவுகளுக்கு மாறாக கலவரத்துக்கு பிறகு சூழ்ந்து கொண்டவர்களை அடித்தது மனதுக்கு உகந்ததாக இல்லை என்று ஆணையம் கருதுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் பரமக்குடி மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும், எப்படிபட்ட பாதுகாப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளும் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை மொத்தம் 1500 பக்கங்களுடன் 3 புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கைக்கு எதிர்ப்பு: கிருஷ்ணசாமி வெளிநடப்பு

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

தமிழக அரசே! 7 தேவேந்திரர்களின் உயிர்களை பலிவாங்கிய பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திய சம்பத் கமிஷன் அறிக்கையை கிழித்தெறி"

'2011- பரமக்குடி துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது': சம்பத் கமிஷன்..

2011 ஆம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச்சூடு தவிர்க்க முடியாத சூழலில் நிகழ்ந்ததாக நீதிபதி சம்பத் கமிஷன் கூறியிருக்கிறது.
அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாளன்று போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். அச்சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலித் மக்கள் மீதான அரசு வன்முறை என்று சில தரப்பினரால் அது விமர்சிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனின் அறிக்கை தமிழக சட்ட மன்றத்தில் இன்று செவ்வாய் தாக்கல் செய்யப்பட்டது.
சம்பவ தினத்தன்று, ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சிறுவன் பழனிக்குமார், கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பரமக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் தலைவரான இமானுவேல் சேகரன் சமாதிக்கு செல்லும் வழியில் பச்சேரி கிராமத்துக்கு சென்று கொலையுண்ட சிறுவனுடைய இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக இருந்தது.
ஆனால், அவரது வருகை மற்றும் பேச்சு, இரு பிரிவினரிடையே மோதலை அதிகரிக்கும் என்பதால் ஜான் பாண்டியனையும் அவரது ஆதரவாளர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனர். அதேநேரம் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சமாதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஆத்திரமடைந்த ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியலில் இறங்கினர். அவர்களுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது அடையாறு துணைக் கமிஷனர் செந்தில் வேலனின் சட்டையை கலவரக்காரர்களில் ஒருவர் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டார் என சம்பத் கமிஷனின் அறிக்கை கூறுகிறது.

'காவல்துறையின் செயல் மெச்சத்தக்கது'

காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினைக் கலைக்க முயன்றபோது போலீஸ் மீது கற்கள், செருப்புகள், மரக்கட்டைகள் வீசப்பட்டன. ஒரு கட்டத்தில் பெட்ரோல் குண்டுகளும் எறியப்பட்டன. பரமக்குடி பெண்கள்-போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்.
தடியடி, கண்ணீர் புகை இவற்றுக்குப் பிறகும் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் கமுதி வட்டாச்சியர் சிவகுமார் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டார்.
எனவே வன்முறையை கட்டுப்படுத்தவும், வன்முறை பரவாமல் தடுக்கவும் அத்துப்பாக்கிச் சூடு முற்றிலும் அவசியம் என்று விசாரணை ஆணையம் கருதுவதாக அறிக்கை தெரிவிக்கிறது.
'போலீசார் அளவற்ற பொறுமையை கடைபிடித்தனர். அவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் அப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். கலவரத்தில் இறங்கியவர்கள் எல்லை மீறி நடந்துகொண்டனர், அவர்களது செயல்கள் மன்னிக்கக்கூடியதே அல்ல.அத்தகையதொரு சூழலில் காவல்துறையினர் நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது' என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப அரசு வேலையும், இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சமும் வழங்க உத்தரவிட்டதன் மூலம் தமிழக அரசு அளவில்லா கருணை காட்டியுள்ளதாகவும் சம்பத் கமிஷன் பாராட்டியிருக்கிறது.

பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கை சட்டசபையில் தாக்கல் ..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.9.2011 அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 7 உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் பற்றி விசாரிக்க நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் அறிக்கை சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:–
ஆதிதிராவிடர் தலைவரான ஜான் பாண்டியன் 11.9.2011 அன்று பரமக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் தலைவரான இமானுவேல் சேகரன் சமாதிக்கு செல்வதாக இருந்தார். அப்போது 2 நாட்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த சிறுவன் பழனிக்குமார், பிற ஜாதியைச் சேர்ந்தவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டான்.
ஜான் பாண்டியன் பரமக்குடி செல்லும் வழியில் பச்சேரி கிராமத்துக்கு சென்று சிறுவனுடைய இறப்புக்கு வருத்தம் தெரிவிப்பதாக இருந்த பயணத் திட்டம் பற்றிய தகவல் காவல்துறைக்கு கிடைக்கப் பெற்றது. அவரது வருகை மற்றும் பேச்சு, இரு பிரிவினரிடையே மோதலை அதிகரிக்கும் என்பதால் ஜான் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது இமானுவேல் சேகரனின் சமாதிக்கு சென்று வரும் வண்டிகளின் போக்குவரத்து தடைபட்டது. இந்த சமயத்தில் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது டாக்டர் கிருஷ்ணசாமியும் வந்ததால் அங்கு பதட்டம் அதிகமானது. டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் சமாதிக்கு செல்ல அனுமதிக்கப்படும்போது, ஜான் பாண்டியன் அனுமதிக்கப்படாததால் அவரது ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். சாலை மறியல் தீவிரமானது.
கலவரக்காரர்கள் வண்டியில் இருந்த டாக்டர் கிருஷ்ண சாமியின் ஆதரவாளர்களை வெளியே இழுக்க முற்பட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது அடையாறு துணை கமிஷனர் செந்தில் வேலனின் சட்டையை கலவரக்காரர்களில் ஒருவர் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டார்.
இது காவல் துறையினர் தடியடி நடத்த வழிவகுத்தது. கலவரக்காரர்கள் எல்லா திசைகளிலும் கலைந்து சென்று மீண்டும் கூடி போலீஸ் மீது கற்கள், செருப்புகள், மரக்கட்டைகள் கொண்டு தாக்கினர். இதைப்பார்த்த கமுதி தாசில்தார் சிவக்குமார் அவர்களை கலைந்து செல்லும்படி ஒலிபெருக்கி மூலம் ஆணையிட்டார்.
ஆனால் தொடர்ந்து அங்கு தகராறுகள் நடக்க தொடங்கியது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. பொது சொத்துக்ளுக்கு சேதம் ஏற்படுத்தினர். பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் தாக்கப்பட்டனர்.
நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஆனாலும் கலவரக்காரர்கள் கலைந்து செல்லாமல் வன்முறையில் ஈடுபட்டனர். பரமக்குடி பெண் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தவர்களை பூட்டி கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
இதனால் வேறு வழியின்றி கமுதி வட்டாச்சியர் சிவகுமார் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டார். இதன்படி துப்பாக்கி சூடு நடத்தினர். வன்முறையை கட்டுப்படுத்தவும், எதிர் ஜாதியினர் அதிக அளவு வசிக்கும் பகுதிகளுக்கு வன்முறை பரவாமல் தடுக்கவும் இந்த துப்பாக்கி சூடு முற்றிலும் அவசியம் என்று விசாரணை ஆணையம் கருதுகிறது.
துப்பாக்கி சூடு நடத்தாமல் இருந்திருந்தால் இப்பகுதியில் பேரழிவு ஏற்பட்டு இருக்கும். இது காவல்துறையின் தற்காப்பு குறித்த வழக்காகும். கலவரம் செய்தவர்களின் நடத்தை விலங்கு நடத்தையின் எல்லையை எட்டியதுடன் பண்பாட்டிற்கு முரணாகவும், எல்லை கடந்ததாகவும் உள்ளது. இது முற்றிலும் மன்னிக்கதக்கது அல்ல.
இத்தகைய சூழ்நிலையில் காவல்துறையினர் நடந்து கொண்ட மெச்சத்தக்க முறையை இந்த கமிஷன் பாராட்டுகிறது. துப்பாக்கி சூடு நடத்தும் முன்பு போலீசார் அளவற்ற பொறுமையை கடைபிடித்தனர். மரணம் அடைந்தவர்களை பொறுத்த வரையில் கலவரங்களில் ஈடுபட தவறான வழி நடத்தப்பட்டு பலியானவர்களின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணை அடிப்படையில் தகுதிக்கேற்ப குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலையும், இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டதன் மூலம் அரசு அளவில்லா கருணை காட்டியுள்ளது.
காவல்துறை துணை தலைவரில் தொடங்கி கீழ் நிலை பதவிகளில் உள்ளவர்கள் பலர் கடுமையான காயம் அடைந்தனர். இது தொழில் சார்ந்த அபாயமாகும். அவர்களது மருத்துவ செலவை மாநில அரசு முறையாக ஏற்கும் என்று கருதப்படுகிறது.
இந்த சமயத்தில் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 10–ம் வகுப்பு மாணவன் சத்திய மூர்த்திக்கு காயம் ஏற்பட்டது. அவன் தன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டாம் என்று பரிந்துரைக்குமாறு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டான். சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டாம்.
இந்த கலவரத்தின்போது காவல் துறையினர் மிகவும் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் சில காவல்துறையினர் காவல்நிலை உத்தரவுகளுக்கு மாறாக கலவரத்துக்கு பிறகு சூழ்ந்து கொண்டவர்களை அடித்தது மனதுக்கு உகந்ததாக இல்லை என்று ஆணையம் கருதுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் பரமக்குடி மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும், எப்படிபட்ட பாதுகாப்பு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளும் கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை மொத்தம் 1500 பக்கங்களுடன் 3 புத்தகமாக தயாரிக்கப்பட்டு இருந்தது.

செவ்வாய், 15 அக்டோபர், 2013

திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் ஒன்றியம், இராமசாமியாபுரம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், பாறைக்குளம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், வீரசிகாமணி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், வடக்குப்புதூர் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், புன்னைவனம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், நொச்சிகுளம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், அரியநாயகிபுரம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், முத்துச்சாமியாபுரம் கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், பந்தப்புளி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், வடநத்தம்பட்டி கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ஒன்றியம், பொய்கைமேடு கிராமத்தில் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு.

திங்கள், 14 அக்டோபர், 2013

தென் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் விடிய விடிய சுற்றுப்பயணம்...

ஓட்டபிடாரம் தொகுதியில் அங்கன்வாடி மையம்....

ஓட்டபிடாரம் தொகுதியில் சமுதாய நல மன்றம்...

ஓட்டபிடாரம் தொகுதியில் உள்ள வல்லநாடு கிராமத்தில் அரசு மருத்துவ மனை...

புதிய தமிழகம் கட்சி....

சனி, 12 அக்டோபர், 2013

ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும்....



நெல்லையில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு முதல் தற்போது வரை இளநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 29 ஆயிரம் பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதித்தேர்வில் 60 சதவீதம் மார்க் பெற்றவர்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளனர். 69 சதவீத இடஒதுக்கீடு முறை இங்கு பின்பற்றப்படவில்லை. இது சமூக நீதிக்கு எதிரானது. பின்னடைவு ஆசிரியர் காலிப்பணியிடங்களை தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு அளித்து நிரப்ப வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 29ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.

தாதுமணல் அள்ளுவதற்கு அரசு நிரந்தரத்தடை விதிக்க வேண்டும். இயற்கை வளத்தை கொள்ளையடிப்பவர்கள் மீது அரசு இரக்கம் காட்டக்கூடாது. தாதுமணல் அள்ள தடை விதித்ததால் பல ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்பதை ஏற்க முடியாது. கிரானைட் தொழில், தாமிரபரணி மணல் கொள்ளை, கடத்தல் மூலமாகவும் பலர் வேலைவாய்ப்பு பெறலாம். தொழில் சட்டப்பூர்வமாக நடக்கிறதா என பார்க்க வேண்டும்.
தாதுமணல் அள்ளுவதற்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்து அரசியல் ஆதாயத்திற்காக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. இப்பிரச்னையில் தன் நிலைப்பாட்டை அரசு தெரிவிக்க வேண்டும். ககன்தீப்சிங் பேடி அறிக்கையை வெளியிட வேண்டும். தாதுமணல் விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வல்லநாட்டில் தனியார் இன்ஜி., கல்லூரி முதல்வரை மாணவர்கள் கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. மாணவர்களுக்கு ஒழுக்கம், கட்டுப்பாடு வேண்டும். கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் பொறுப்பு கல்லூரி நிர்வாகத்திற்கும் உண்டு.
ஏற்காடு இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு திமுக தலைவர் எழுதிய கடிதத்தை நான் பார்க்கவில்லை. இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து சென்னையில் வரும் 18ம் தேதி நடக்கும் மாவட்டப்பொறுப்பாளர்கள், அரசியல் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். பார்லிமென்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும். கட்சித்தலைவர் என்ற முறையில் தென்காசி தொகுதியில் மக்களை சந்தித்து வருகிறேன்.
இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார். மாநகர் மாவட்டச்செயலாளர் செல்லப்பா, மேற்கு மாவட்டச்செயலாளர் அரவிந்தராஜா உடன் இருந்தனர்.