எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 21 செப்டம்பர், 2015

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

..தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் டாக்டர் .அய்யா அவர்களின் எழுச்சி உ ரை...20 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தமிழகம் கட்சி சார்பில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இவ்விழா இன்று உலக அளவில் பேசப்படுகிறது. இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அல்லது நினைவு தினத்தை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என 20 வருடங்களாக கோரி வருகிறோம். சட்டப்பேரவையில் தொடர்ந்து வலியுறுத்தியும் எந்த பயனும் இல்லை.
2010 இல் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியபோது, பிரிந்து கிடக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே இனமாக அறிவிக்க வேண்டும். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு இமானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும் என வலியுறுத்தினோம்.
இந்த 3 கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்ததால் கூட்டணி வைத்தோம். ஆனால் இதுவரை அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு

மாவீரன் இம்மானுவேல் சேகரன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்திய பின்னர் ... டாக்டர் அய்யா அவர்களின் உ ரைவீச்சு :.......தொல்காப்பியத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். அதனுடைய அடிப்படையில் தான் மக்களையும் பார்த்தார்கள். குறிஞ்சி என்று அழைக்கப்படக்கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மலைவாழ் மக்கள். முல்லை என்று அழைக்கப்படக்கூடிய மலையினுடைய அடிவாரத்திலே வாழ்ந்த மக்கள் இடையர்கள். ஆறுகள், ஆறுகளுடைய படுகைகள், எங்கே நீர்ப்பகுதி இருக்கிறதோ அங்கே வாழ்ந்தவர்கள் மருதநில மக்கள், அவர்கள் தான் தேவேந்திரகுல வேளாளர்கள், அவர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்கள்.
இந்த அரசு இந்த தமிழ் மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டுமென்று சொன்னால் நீங்கள் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டுமென்று சொன்னால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு சமமான அங்கீகாரம் கொடுக்காமல் நீங்கள் தமிழகம் என்று சொல்லிக்கொள்வதிலோ தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அல்லது திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதிலோ அர்த்தமே கிடையாது என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன்.
எனவே இந்த அரசு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது, வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த தினம் வரப்போகிறது, அதற்குள்ளாக நிச்சயமாக இந்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்று நான் கருதுகிறேன். இல்லையென்றாலும் புதிய தமிழகம் அதைப் போராடிப் பெறும் என்பதையும் இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். புதிய தமிழகத்திற்கு போராட்டம் என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால் போராடாமல் கொடுக்க வேண்டியதுதான் அரசுக்கு அழகு என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.
நீங்கள் கிலோ கணக்கிலே எதோ தங்கமெல்லாம் கொடுக்கிறீர்கள். ஆனால் நாங்கள் இப்போது கேட்பது ஒரு சிறிய அடையாளம் மட்டும் தான். நாங்கள் வேறொன்றும் புதிதாகக் கேட்கவில்லை, தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற ஒரு சிறிய அடையாளம், தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுதல் மற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாருடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவை மூன்று தான் நாம் கேட்கக் கூடிய மிக முக்கியமான கோரிக்கைகள்.
எனவே இந்த மூன்று கோரிக்கைகளையும் இன்றைய அரசு எஞ்சி இருக்கக்கூடிய காலகட்டங்களில் நிறைவேற்றித் தரும், இல்லையென்று சொன்னால் நிறைவேற்றித் தரக்கூடிய அரசை உருவாக்கித் தரக்கூடிய சக்தி புதிய தமிழகத்திற்கு உண்டு என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!...

செப் .11... மாவீரர் மண்ணில் தேவேந்திர குல மக்களின் மாற்றங்கள் ...!!!!!... எந்த ஒரு வன்முறை சம்பவத்திற்கும் இடம் தராமல் அமைதியாக .வீர வணக்க நாள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் .. "தேவேந்திரர் பண்பாட்டு கழகம் " ஏற்பாடு செய்த சீருடை அணிந்த தொண்டர்கள் அலைகடல் என வந்த கூட்டத்தை கட்டுபடுத்தினர் ... காவல் துறை வெறும் பார்வையாளர்களாக இருந்தனர் ... கட்டுப்பாடு , சுய ஒழுக்கம் , அமைதியான முறையில் கோரிக்கை முழக்கங்கள் , தலைவர்களின் சிறப்பான வழிகாட்டல்கள் ,தேவேந்திரர் சமுகத்தின் நடவடிக்கைகளை அனைத்து தமிழ் சமூகமும் பாராட்டித்தான் ஆக வேண்டும் ... நேர்மையான காவல்துறை அதிகாரிகள் இப்படிப்பட்ட மக்களையா 2011ல் சுட்டு கொன்றோம். என்று நினைக் கிறார்கள் .... அன்று காலை முதல் மாலை வரை காவல்துறைக்கு வேலையே இல்லை .. இது ஒன்று போதாதா அரசு விழாவாக அறிவிக்க ...பல்வேறு அமைப்பினர் வரவேற்பு பதாகைகள் வைத்து இருந்தனர் .. அதில் பெரும்பாலும் "தேவேந்திரகுல வேளாளர் அரசு ஆணை ".. மதுரை விமான
நிலையத்திற்கு "இம்மானுவேல் சேகரன் பெயர் ".. தியகியாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் நிறைவை தருகின்றன .... இறுதியாக பல்வேறு தடைகளை தாண்டி வீர வணக்கம் செலுத்திய குரலற்றவர்களின் குரல் .. டாக்டர் . க .கிருஷ்ணசாமி .. M .D .M .L .A ., அவர்கள் நம் மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றும் வகையில் நிறைவுரை ஆற்றினார்

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் .

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் விவாதம் .டாக்டர் கிருஷ்ணசாமி:- பட்டியல் இனத்தில் 6 உட்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவினரை ஒரே பிரிவினராக தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க உத்தரவிட வேண்டும்.
அமைச்சர் ந.சுப்பிரமணியன்:- இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி இப்போது பேசமுடியாது.
டாக்டர் கிருஷ்ணசாமி:- தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்ததினம், மறைந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும். அவரைப் பற்றி இந்த அவையில் அண்ணா, “இம்மானுவேல் சேகரனை ஒரு வீரனாக கருத வேண்டும். அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும்” என்று பேசியிருக்கிறார். மதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு ..... "திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!!

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!! (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி:

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..செப். 17–ராமநாதபுரம்,.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. [மதியம் 2.00 மணி }.அவர் அந்த நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து காட்டுபரமக்குடி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் விசாரணை நடத்தி டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?.....பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல், தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது பரமக்குடி போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினமான செப்.11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மாலையில் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நினைவிடத்தின் முன்பாகவே கூட்டம் நடத்தி அதில் ஒலிபெருக்கியிலும் பேசினார். ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக வந்தமைக்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் மீது பரமக்குடி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

காலச்சுவடுகள் .......இந்திய முதல் குடிமகன் பிரணாப் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறிய முதல் தமிழக அரசியல் கட்சி தலைவர் ... டாக்டர் . க . கிருஷ்ணசாமி .. M.D .M .L .A ., அவர்கள் ..

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் ..தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளத்தில் 1995 ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காவல் துறையினரால் தேவேந்திரகுல மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
கொடியங்குளம் கிராமத்திற்க்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.அதன் காரணமாக அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது.
அச்சமயத்தில் தென் தமிழகத்தில் பெரும் பாலான கிராமங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு திரட்டினார்.சுற்றுப் பயணத்தின் இருந்த எழுச்சி, பலரது கவனம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பக்கம் திரும்பியது.
இந்த கொடியங்குளம் கலவரத்திற்க்கு பிறகு தான் தென்தமிழகத்தில் உள்ள தேவேந்திரகுல மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராட துவங்கினார்கள்.

ஆகஸ்ட்31 தேவேந்திரகுல மக்களின் தன்னெழுச்சி நாள் !!!!!


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் 1995, ஆகஸ்ட் 31-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம், கொடியங்குளம் எனும் குக்கிராமத்தில் தமிழக காவல்துறையினர் குற்றவாளியைப் பிடிக்கப் போகிறோம் என்று கூறி ஒட்டுமொத்த கிராமத்தையே சூறையாடிய கொடிய சம்பவம் நிகழ்ந்த கொடியங்குளம் கறுப்பு தினம் இன்று. கடந்த ஒராண்டு காலமாக வட தமிழகத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதி ஆதிக்கத்தின் தொடக்கப் புள்ளியான 2012 நவம்பர் 7 அன்று நிகழ்ந்த தருமபுரி கலவரத்துக்கான விடை, விடுதலை கொடியங்குளத்தில் தான் இருக்கிறது. உண்மையில் இந்தக் ‘கொடியங்குளம் கலவரத்தில் தான்’ தாழ்த்தப்பட்ட மக்கள் ஆதிக்க சாதியினரின் சமூக வன்முறைக்கு எதிராக தலைவணங்காத உறுதியினைக் காண்பித்தார்கள். அதுவரையில் சமூக நல்லிணக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சாதி ஒடுக்குமுறைகளை கடைப்பிடித்து வந்த ஆதிக்க சாதியினர் 1995-க்குப் பிறகு சமூக உரிமையை, சம நீதியை ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.
1995, ஆகஸ்ட் 31--இல் குற்றவாளியை பிடிக்கப்போகிறோம் என்று கூறி தமிழக காவல்துறையினர் கொடியங்குளம் கிராமத்தில் புகுந்தனர். ஆனால் சென்றது காவல்துறையினர் அல்ல, காவல்துறையினர் போன்று வேடமிட்ட காட்டுமிராண்டிகள் என்பது பின்புதான் தெரிய வந்தது. கிராமத்திற்குள் புகுந்தவர்கள் குற்றவாளிகளை தேடுவதை விட்டுவிட்டு வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்க ஆரம்பித்தனர். வீடுகளில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. பணமும், நகைகளும் களவாடப்பட்டன. பின்புதான் தெரிந்தது அந்த காவல்துறையினர் அனைவரும் கள்ளர்கள் என்று. சூறையாடப்பட்ட கிராமத்திற்கு நீதிகேட்டு அன்றைய தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தனது போராட்டத்தை ஆரம்பித்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பதிக்கப்பட்ட கிராமத்தை பார்வையிட அன்றைய முதல்வர் நேரில் வந்த போது ஒட்டுமொத்த கிராமமே முதல்வர் சந்திப்பை புறக்கணித்தது. அவர் கொண்டு வந்த நிவாரண நிதியையும் அம்மக்கள் திருப்பினர். அவர்கள் தன்மானம் மிக்கவர்கள் என்பதை நிரூபித்தார்கள். மாறாக தென் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களையும், நிவாரண நிதியையும் வண்டி வண்டியாக அனுப்பி வைத்தனர். இதற்குமேல் நிவாரண பொருட்கள் வேண்டாம் என்று கூறி, வந்த நிவாரண பொருட்களை பக்கத்து கிராமங்களுக்கும் பகிர்ந்து கொடுத்த வரலாறு கொடியங்குளத்தில் தான் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் சுயமரியாதையோடு வாழ்கிறோம் என்பதை நிரூபித்துக் காட்டினர். தேவேந்திரர்குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒருங்கிணைத்து நடத்திய தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்தது. ஆதிக்க சாதியினரின் சாதி ஆதிக்க கொட்டம் அடக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் தலைநிமிர்வு உண்டானது. ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக புதிய தமிழகம் எனும் அரசியல் கட்சி உருவானது. 1995 முதல் 2000 முதல் தேவேந்திரகுல மக்கள் முன்னெடுத்த சமூக சமநீதிக்கான போராட்டத்தில் பல உயிர்கள் களபலியாயின. அவர்களின் உயிர் தியாகத்தால் தான் இன்று தென்தமிழகம் யாருக்கும் தலைவணங்காமல் தலைநிமிர்ந்து நிற்கிறது. கொடியங்குளம் கறுப்பு தினமான இன்று சமூக சம உரிமைப் போராட்டத்தில் களப்பலியான தியாகி பிலிப் அந்தோணி, தியாகி ஆலந்தா சண்முகம் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் நமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம்.

கருத்துக்கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் .... புதிய தமிழகம் கட்சித் தலைவர். டாக்டர் .க .கிருஷ்ணசாமி M .D .,M .L .A .,அவர்கள் ..


கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வு மையம் தேர்தல் குறித்து கருத்துக்கணிப்பை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 5.5 கோடி வாக்காளர் கள் இருக்கும்போது, வெறும் 3 ஆயிரம் பேரிடம் மட்டும் கருத்துக் கணிப்பு நடத்துவது யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. எனவே, இது ஒட்டுமொத்த வாக்காளர்களின் கருத்துகளை பிரதிபலிக்காது.
தமிழகத்தில் இருக்கும் மதங்கள், சாதிகள் மற்றும் பிராந்திய கட்சிகளின் செல்வாக்குகள் இதில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் எண்ணங்களை பதிவு செய்வதைவிட, ஆய்வு மேற்கொள்பவர்களின் கருத்துகளை மக்கள் மனதில் திணிப்பதுபோல இக்கருத்துக் கணிப்பு முடிவுகள் உள்ளன.

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31..

டாக்டர் . க . கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் தேவேந்திரர்களின் போர் பிரகடனம் தேவேந்திர குல மக்களுக்கு விடுதலை களம் அமைத்து கொடுத்தது கொடியங்குளம் - அதுவே ஆகஸ்ட்31.. 
புராதன கால பொதுவுடைமை
சமுதாயத்திற்கு பிறகு குடும்பம், தனிச் சொத்து அரசுகள் உருவாகின. ஆண்டான் அடிமை, ஜமீன் முறைகள் எதேச்சதிகார அரசு, குடியரசு, முடியரசு, பாட்டாளி வர்க்க
சோசலிச அரசு, பாசிஸ்ட்ட அரசு என பல வகை அரசுகள் தோன்றின. இவற்றில் குடியரசே பெரும்பாலான நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசு அமைப்பாக
இருக்கிறது. மக்களுக்காக மக்களே மக்களால் உருவாக்கப்பட்ட அரசு குடியரசு ஆகும். பாட்டாளி வர்க்க சோசியலிஸ அரசு மற்றும் குடியரசு தவிர அரசு
இயந்திரம் பெரும்பாலான மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறை கருவியாக இருந்து வந்திருகிறது.
விதி விலக்குகளாக முடியரசு குடியரசை போல செயல்படலாம். சர்வாதிகாரி கூட ஜனநாயக
வாதியாக செயல்படலாம் அதை உலகம் ஏற்றுக்கொள்ளும் ஆனால் ஒரு ஜனநாயக
குடியரசு சர்வாதிகார பாசிஸ அரசைப் போல செயல்படுவதை அந்நாட்டு மக்கள்
ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மக்கள் எத்தனை பிளவுகளாக இருந்தாலும் அரசு
இயந்திரம் எச்சார்பற்றதாக நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்பதே நியதி ஆகும். அண்மையில் ஈராக், லிபியா, சிரியா, துனிசியா, எகிப்து, ஏமன் போன்ற
நாடுகளில் அதிபர்கள் அந்நாட்டில் உள்ள ஒரு குழுவுக்கு ஆதரவாக இன்னொரு குழுவை அடக்கி ஒடுக்கிட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர்களின் ஆட்சி
அதிகாரம் பறிக்கப்பட்டது மட்டுமல்ல அவர்களை மக்களே கண்முன்னே கண்டித்த சம்பவங்களையும் உலகறியும்.
1991 முதல் 1996 வரையிலும் தமிழகத்தினுடைய
இன்று முதல்வராக இருக்கக் கூடிய ஜெயலலிதா அவர்கள் தான் அன்றும் முதல்வர். 1995-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி தேவேந்திர குல சமுதாயத்தை சார்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் , முக்குலத்தோர் சமுதாயத்தை சார்ந்த மாணவர்களால்
தாக்கப்பட்டது தொடர்ந்து நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே உள்ள வடநத்தம் பட்டி மற்றும் வீரசிகாமணியைச் சார்ந்த இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் ஒரு தலைவரின் சிலை சேதப்படுத்தப்பட்டதாகக் கூறி ஜூலை 27-ந் தேதி முதல் ஒரே நேரத்தில் தென் தமிழகம் முழுமைக்கும் தேவேந்திர குல வேளாளர்களை கொச்சைப்படுத்தியும், சிறுமைப்படுத்தியும் எண்ணற்ற போஸ்ட்டர்கள்
ஒட்டப்பட்டன. தேவேந்திர மக்களை கொச்சைப்படுத்தி சுவரொட்டி ஓட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அரசு ஆதரவோடு ஒவ்வொரு மாவட்டமாக பந்த்கள் நடைபெற்றது. தென் தமிழகம் முழுமைக்கும் பல்வேறு இடங்களில் முக்குலத்தோர் தேவேந்திர குல வேளாளர் மோதல்கள் உருவாகின. நெல்லையில் ஜங்சனை சார்ந்த ராமர், லட்சுமணர் என்ற தேவேந்திரர்கள் படு கொலைக்கு ஆளானார்கள். துத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் பேருந்துகளில் தனியாக பயணம் செய்த ஆண்,பெண் இருபாலரும் தாக்குதலுக்கு ஆளானார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் அருகே உள்ள ஆலந்தா என்ற கிராமத்தைச் சார்ந்த பலவேசம் மற்றும் துணைவியார் இருவரும் பட்டப்பகலிலே கொலை செய்யப்பட்டார்கள். தேவேந்திர மக்களின் நடமாட்டம் முடக்கப்பட்டது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீர்குலைந்தது. அவருடைய நிலம் மற்றும் புலங்களில் முக்குலத்தோரின் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு அழியாட்டம் செய்யப்பட்டன. எஞ்சியவைகளை விட்டு வைக்காமல் கூட்டம் கூட்டமாக வந்து கொள்ளையடித்து சென்றனர். மணியாட்சி சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட
கிராம மக்கள் வாழ்வா?சாவா? என்ற நிலைக்கு
தள்ளப்பட்டார்கள்.
கொடியங்குளத்தை சுற்றி உள்ள 80-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல ஊர் நாட்டாமைகளின் கூட்டம் நடைபெற்றது. அடுத்து இரண்டாவது நாளில் பெண்கள் போல மாறு வேடம் அணிந்த ஒரு கூலிப்படை மீண்டும் ஆலந்தாவிற்குள் நுழைந்தது. எச்சரிக்கையோடு இருந்த தேவேந்திரர்கள் கொலைகார கூலி கும்பலை 5 கிலோமீட்டருக்கு மேலாக விரட்டினார்கள். மூன்று பேர் தப்பி ஓடி விட்டனர். மரணம் அடைந்த மூன்று பேரினுடைய வீட்டுக்கு துக்கம் விசாரிக்க அன்று மாவட்ட ஆட்சியர் பன்னீர் செல்வம் சென்றார். இந்த சம்பவம் நடந்த நாள் ஆகஸ்ட் -30.
BLOOD IS THICKER THAN WATER- இரத்தம் தண்ணீரைவிட கெட்டியானது என்று சொல்வார்களே அது போலதான்
பன்னீர் செல்வம் இரத்தம் துடித்தது. ஏறக்குறைய ஒருமாத காலத்திற்கு மேலாக தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிராக நடைபெற்ற எந்த தாக்குதலுக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் அந்த மூன்று மறவர்களின் 
மரணம் மட்டும் அவர்களுக்கு நெஞ்சை உறுத்தி விட்டது. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நான்கு ஐந்து மாவட்ட ஒட்டுமொத்த காவல்துறை கொடியங்குளத்தில் குவிக்கப்பட்டது. சென்னையை மையமாக வைத்து இயங்கிய அழகு செக்யுரிட்டி எனும் தனியார் நிர்வன அடியாட்களும் வரவழைக்கப்பட்டார்கள். காவல் துறையிடத்திலே லத்தியும், துப்பாக்கியும் தான் இருக்கும் என்பதையே பெரும்பாலான மக்கள் அறிவர். ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி நவீன ஆயுதங்கள் உட்பட்ட கோடாரி, வேல்கம்பு, அரிவாள்கடப்பாறை போன்ற கற்கால ஆயுதங்களுடன் கொடியங்குளம் சுற்றி வளைக்கப்பட்டது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அடியாட்களாக வந்த செக்யுரிட்டி ஆட்களாலும் அடியாட்களைப் போல மாறிய காவலர்களாலும் விரட்டியடிக்கப்பட்டனர். வீடு வீடாக சென்று அவர்கள் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் நிர்மூலமாக்கினர். 10-15 ஆண்டுகள்
அரேபிய நாடுகளுக்கு சென்று அல்லும் பகலும் பாடுபட்டு வாங்கிய தங்களுடைய ஆசைப் பொருட்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கினார். டிவி, ரேடியோக்கள், பேன், மிக்சி, கிரைண்டர் டேப்ரெக்கார்டுகள், இருசக்ர வாகனங்கள், பண்டபாத்திரங்கள் அனைத்தும் அந்த
இடத்தில்தூள்தூளாகின. பீரோக்களும், கட்டில்களும் கோடாரியால் துண்டாக்கப்பட்டன. வீடுகளின்
கதவுகள், ஜன்னல்கள் அத்தனையும் நொறுக்கிப் போடப்பட்டன. அவர்கள் மொசைக் தளங்களைக் கூட விட்டு வைக்க வில்லை. அரசு தபால் மற்றும் ரேசன் கடைகளையும் சூறையாடினர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, நாய்களையும் சுட்டுப் பொசுக்கினர் . வீட்டில் வைத்திருந்த சொற்ப தொகைகளையும், துணி மணிகளையும் விட்டு வைக்க வில்லை. உச்சக் கட்டமாக பொதுக் கிணற்றில் பெட்ரோலையும் ஊற்றினார். எதிர்த்தவர்கள் கை கால்கள் உடைக்கப்பட்டன. இளம்பெண்களின் என்று கூட பார்கவில்லை. மக்களை கட்டிக் காக்க வேண்டிய அரசு மக்களின் சொத்துக்களை சூறையாடியது. சட்டப்படி நடக்க வேண்டிய உயர் அதிகாரிகளே சட்டத்தை காலில் போட்டு உதைத்தார்கள்.
தேவேந்திர குல மக்கள் மீதான தங்களுடைய நீண்ட நெடுநாளைய வன்மத்தை காவல் துறையின் மூலம் தீர்த்து கொண்டார்கள். கொடியங்குலத்தின் மீது நடத்திய தாக்குதல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மகிழ்விப்பதற்காகவும் மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்காகவும் இன்னொரு பிரிவினரின் மீது ஏவி விடப்பட்ட அரச பயங்கரவாதமே அதுவாகும். கொடியங்குளம் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதன் முதலாக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்து வைத்தது நாம் தான்.
நீதி மன்றம் சென்று நீதியை நிலைநாட்டினோம் 
மக்கள் மன்றம் சென்று மக்களை தட்டி எழுப்பினோம். வெகுண்டெழுந்த தேவேந்திரர்கள் அடுத்து வந்த தேர்தலில் ஆட்சியை அகற்றிக் காட்டினார்கள். 
அரச பயங்கர வாதம் அம்பலப்பட்டது.