எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 12 அக்டோபர், 2016

..புதிய தமிழகம் வெளிநடப்பு.

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் விவாதம் .

16..09.2015 ..சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் . டாக்டர் .க . கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் விவாதம் .டாக்டர் கிருஷ்ணசாமி:- பட்டியல் இனத்தில் 6 உட்பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவினரை ஒரே பிரிவினராக தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க உத்தரவிட வேண்டும்.
அமைச்சர் ந.சுப்பிரமணியன்:- இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி இப்போது பேசமுடியாது.
டாக்டர் கிருஷ்ணசாமி:- தியாகி இம்மானுவேல் சேகரனின் பிறந்த தினம், மறைந்த நாள் ஆகியவற்றை அரசு விழாவாக கடைபிடிக்க வேண்டும். அவரைப் பற்றி இந்த அவையில் அண்ணா, “இம்மானுவேல் சேகரனை ஒரு வீரனாக கருத வேண்டும். அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும்” என்று பேசியிருக்கிறார். மதுரை விமான நிலையத்துக்கு இம்மானுவேல் சேகரனின் பெயரை வைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

சட்டபேரவையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் .. டாக்டர் .க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., "

 டாக்டர் . க .கிருஷ்ணசாமி M .D .M .L .A ., பட்டியல் இனத்தில் 6 உ ட்பிரிவுகள் { பள்ளர் , குடும்பர் , காலடி , மூப்பன் , பண்ணாடி , தேவேந்திர குலத்தான் } உ ள்ளன .அந்த பிரிவினரை " தேவேந்திர குல வேளாளர் " என்று அழைக்க உ த்தரவிட வேண்டும் .. அமைச்சர். ந .சுப்ரமணியன் ...இது தொடர்பாக மதுரை உ யர் நீதிமன்றத்தில் கலியபெருமாள் என்பவர் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உ ள்ளது . எனவே அது பற்றி பேச முடியாது ... டாக்டர் . க .கிருஷ்ணசாமி M .D .M .L .A :.,..தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பிறந்த தினம் , நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் . அவரை பற்றி இந்த அவையில் அண்ணா '"இம்மானுவேல் சேகரனை .. .உலகம் போற்றும் ஒரு வீரனாக கருத வேண்டும் . அவரை நாட்டு சரித்திரத்தில் குறிப்பிட வேண்டும் . என்று பேசியிருக்கிறார் .. மதுரை விமான நிலையத்திற்கு இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை வைக்க வேண்டும் .இது தொடர்பாக மேலும் சில கருத்துக்களை .. டாக்டர் .க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A . அவர்கள் குறிப்பிட்டார் ..அதற்க்கு உசிலம்பட்டி எம் .எல் .ஏ., கதிரவன் சில பதில் கருத்துக்களை கூறினார் .. அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது . ஆனால் டாக்டர் .க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A அவர்கள் ஆட்சேபனை தெரிவித்தார் . அதற்க்கு பதில் அளித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் . அண்ணா அவர்கள் கூறிய கருத்து அவை குறிப்பில் இடம் பெறும் என்றார் .

Dr_க_கிருஷ்ணசாமி MD.MLA அவர்கள்

#Dr_க_கிருஷ்ணசாமி MD.MLA அவர்கள்
"திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு .

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் , மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் . டாக்டர் . க . கிருஷ்ணசாமி .M .D .M .L .A ., அவர்களின் சட்டமன்றஉ ரை முழு தொகுப்பு ..... "திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும்" - பேரறிஞர் அண்ணா.
நேற்று (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்.
ஆனால் குறிக்கிட்டுப் பேசிய அமைச்சர் ‘ஏதோ வழக்கு இருக்கிறது’ என்று தவறுதலாக சுட்டிக்காட்டினார். நீதிமன்றத்திலே பலர் வழக்கு தொடுத்திருக்கிறதற்கெல்லாம் ‘இதுபோன்ற பள்ளர், குடும்பர், காலாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் என்று ஆறு பெயர்களில் அழைக்கப்படக்கூடியவர்களை ஏன் ஒரே பெயரில் தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்று தான் நீதிமன்றங்கள் கேட்டிருக்கின்றனவே தவிர வேறு எதுவும் நீதிமன்றங்கள் சொல்லவில்லை.
மேலும் 1957-ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தின்போது தியாகி இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்ட பின்பு அக்டோபர் 30-ஆம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியபொழுது, ‘திரு.இம்மானுவேல் படுகொலை செய்யப்பட்டதைப் பற்றி இங்கு பேசினார்கள். உண்மையிலேயே அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல. தமிழ்நட்டிற்கே ஒரு பெரிய தியாகம் செய்திருக்கிறார். திரு.இம்மானுவேல் இராமநாதபுரத்து மண்ணிலே மறைந்த மாவீரன் மட்டும் அல்ல. உலகமே புகழும் ஒரு வீரனாகவே அவரைக் கருத வேண்டும். நாட்டில் ஒற்றுமைக்காக பாடுபட்டு தன்னையே பலியாக்கிக் கொண்ட ஒரு தியாகியை இழந்தோம். அவர் பெயர் இந்நாட்டு சரித்திரத்திலே பொறிக்கப்பட வேண்டியது. திரு.முத்துராமலிங்கத் தேவர் மறவர்களுக்கு தலைவராக இருந்தார்’ என்று கூறியிருக்கிறார்.
அப்படியெல்லாம் பேரறிஞர் அண்ணா அவர்களால் புகழாரம் சூட்டப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்கள் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதில் எந்தவிதமான தவறுமில்லை; அவர் தகுதியானவர், என்ற அடிப்படையிலே நான் பேசினேன். அதேபோல இம்மானுவேல் சேகரன் அவர்களுடைய பிறந்த நாள், நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற மூன்று முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினேன்.
மேலும் இன்று காலையிலே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றத்தில் அரசினுடைய தனித் தீர்மானம், அதாவது, ஈழ மக்களுக்கு எதிராக 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போரின்போது நடந்த போர் விதிமுறை மீறல்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து “ International Independent Investigation” என்று அழைக்கப்படும் சர்வதேச சுதந்திரமான விசாரணை தான் நடத்தப்பட வேண்டுமே தவிர, அந்த விதிமுறைகள் குறித்து இலங்கை அரசே விசாரிக்கலாம் என்ற அமெரிக்காவினுடைய மாறுபட்ட நிலைபாட்டை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளக்கூடாது.
இந்திய அரசு ஐ.நா.வில் சர்வதேச சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்த வேண்டும் என்று சட்டமன்றத்திலே இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நாங்கள் ஆதரித்துப் பேசினோம். அதற்கு சான்றுகளாக இப்பொழுது சேனல் 4 என்ற ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் துப்பாக்கிச்சூடுகள், அதேபோல “No Fire Zone” என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கிச்சூடுகள் எங்கெங்கெல்லாம் நடத்தப்படக்கூடாதோ அங்கெல்லாம் அதாவது மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட நடத்தப்படக்கூடாத இடங்களிலெல்லாம் நடத்தப்பட்டிருக்கின்றன என்ற ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல ஈழ விடுதலைப் போரில் மிகப்பெரிய தியாகம் செய்திருக்கக்கூடிய பிரபாகரன் அவர்களுடைய புதல்வர் பாலச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பாட்டார் என்ற ஆதாரத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. எனவே இப்படிப்பட்ட பல போர் விதிமுறை மீறல்கள் எல்லாம் இப்பொது மெல்ல மெல்ல வெளியே வந்துகொண்டிருக்கின்றன. எனவே இதற்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும், ஈழத்தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று சொன்னால் சர்வதேச அளவிலான நேர்மையான, நியாயமான, சுதந்திரமான விசாரணை வேண்டுமென்பதை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!!

தேவேந்திர குல மக்களின் எதிர்பார்புகளை நிறைவேற்றிய டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ..!!!! (16.09.2015) தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டி!
“இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியபோது முக்கியமான மூன்று கோரிக்கைகளை இந்த மானியக் கோரிக்கை விவாதத்திலே வலியுறுத்திப் பேசினேன்.
அதாவது “பட்டியலினத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய ஒரே பிரிவு மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அழைப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலே கடந்த நான்கு ஆண்டு காலமாக பல்வேறு தருணங்களில் வலியுறுத்தி வந்திருக்கிறேன் என்பதை சுட்டிக்காட்டி, மேலும் இந்த ஆறு பிரிவினர் தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருவதை அறிந்து பாரதிய ஜனதா கட்சியினுடைய தேசியத் தலைவர் அமித்ஷா அவர்கள் ஒரு தொண்டு நிறுவனம் நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு அந்த மக்கள் முற்பட்டோராக விரும்புகிறார்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியிருக்கிறது.
தமிழ், தமிழர், திராவிடம் பேசக்கூடிய இந்த மண்ணில் ஒரு தமிழ் மக்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு இந்த ஆட்சியே தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம். எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, ஆனால் நாங்கள் கெளரவமாக நடத்தப்பட வேண்டுமென்று ஒரு சமுதாயம் குரல் கொடுக்கின்ற போது அதை அரசு கவனிக்காமல் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பிறப்பிக்க நடவடிக்க எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினேன்

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?..செப். 17–ராமநாதபுரம்,.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த ஒவ்வொருவருக்கும் தனித் தனியே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இதன்படி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. [மதியம் 2.00 மணி }.அவர் அந்த நேரத்தில் வராமல் சற்று தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து காட்டுபரமக்குடி கிராம நிர்வாக அலுவலர் தீர்த்த ரத்தினேஸ்வரன் போலீசில் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் சந்திர சேகர் விசாரணை நடத்தி டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?...

செப் :11,இம்மானுவேல் சேகரன் வீர வணக்க நாளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டிச்சென்று அஞ்சலி: மாண்புமிகு சட்டமன்ற உ றுப்பினர் .டாக்டர் .க .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,அவர்கள் உள்பட 2 பேர் மீது வழக்கு..?.....பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தாமல், தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தியதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது பரமக்குடி போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.
இமானுவேல்சேகரன் நினைவு தினமான செப்.11-ஆம் தேதி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலி செலுத்தும் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பகல் 1.30 மணி முதல் 2 மணி வரை என நேரம் ஒதுக்கப்பட்டிருந்தும் மாலையில் தாமதமாக வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நினைவிடத்தின் முன்பாகவே கூட்டம் நடத்தி அதில் ஒலிபெருக்கியிலும் பேசினார். ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் காலதாமதமாக வந்தமைக்காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்கள் மீது பரமக்குடி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்

சட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு வெளிநடப்பு!

சட்டப்பேரவையிலிருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு வெளிநடப்பு!
திருச்செங்கோடு காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய செல்வி விஷ்ணு பிரியா அவர்களுடைய மரணம் குறித்து பேச இரண்டுமுறை அனுமதி கேட்டும் பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததையடுத்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளிநடப்பு செய்தார். அப்போது சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
"திருச்செங்கோடு காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய செல்வி விஷ்ணு பிரியா அவர்களுடைய மரணம் குறித்து இன்று சட்டசபையிலே கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டுமென்று இன்று காலை அவை கூடிய உடனேயே பிரச்சினையை எழுப்பினோம். அதற்கு பேரவைத் தலைவருடைய அனுமதி கிடைக்கவில்லை. கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்திலும் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க அனுமதி கேட்டிருந்தேன். அதற்கும் பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. எனவே பேரவைத் தலைவருடைய இந்த சர்வாதிகார போக்கைக் கண்டிக்கக்கூடிய வகையிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையைக் கண்டிக்கக்கூடிய வகையிலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வெளிநடப்பு செய்திருக்கிறோம். கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரைச் சார்ந்த கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டார். அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு விஷ்ணுபிரியா தலைமை வகித்திருந்தார். ஆனால் எங்களுக்குக் கிடைத்த செய்தியெல்லாம் அவர் எப்பொழுதெல்லாம் குற்றவாளிகளை மிக அருகில் நெருங்கினாரோ அப்பொழுதெல்லாம் அவர் உயர் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அலைக்கழிக்கப்பட்டுள்ளார். அவர் ஒருமுறை கர்நாடக மாநிலம் சிற்றூர் அருகே குற்றவாளியை கைது செய்யக்கூடிய தருவாயில் இருக்கின்றபொழுது கூட, அந்த மாவட்ட காவல்துறைக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி, உடனடியாக நீ பின்வாங்கி வா என்று அழைத்தது, அதேபோல பலமுறை அந்த யுவராஜ் என்ற குற்றவாளியை நெருங்கிய பொழுதெல்லாம் உயர் அதிகாரிகள் அந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை தன்னுடைய கடமையைக் கூட ஆற்றுவதிலிருந்து தடுத்து நிறுத்தியதன் விளைவாக, காவல்துறையில் தான் எடுத்திருக்கக்கூடிய பணியை நிறைவேற்ற முடியவில்லை என்ற மன வருத்தத்திற்கு ஆளாகி அல்லது ஆளாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு அவருடைய மரணம் நிகழ்ந்திருக்கிறது. இது தற்கொலை என்று குறிப்பிடப்பட்டாலும் இதனை தற்கொலையாகக் கருத முடியாது. இது கொலையா?அல்லது தற்கொலையா? என்று விசாரிக்க வேண்டுமென்று சொன்னால் மத்திய புலனாய்வுக் குழு தான் விசாரிக்க வேண்டும். இல்லையென்று சொன்னால் இதில் உண்மை வெளிவராது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழுவே கடந்த நான்கு மாத காலமாக செயல்படாமல் செயலிழந்து கிடக்கின்ற பொழுது, இன்னொரு குழு மீண்டும் இருவருடைய மரணத்திற்குண்டான உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கூண்டில் நிறுத்தும் என்ற நம்பிக்கை சிறிதும் கிடையாது. தமிழ்நாடு காவல்துறை முற்றாக செயலிழந்து நிற்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு அங்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. எனவே இதற்கு ஒரு தீர்வு வேண்டுமென்று சொன்னால் இதுகுறித்து நல்லமுறையில் சட்டமன்றத்திலே சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகளைச் சார்ந்த நாங்கள் விடுத்த கோரிக்கையை அவைத்தலைவர் உதாசீனப்படுத்தினார், மறுத்தார். எனவே அவரைக் கண்டித்து நாங்கள் இன்று வெளிநடப்பு செய்திருக்கிறோம். மேலும் விஷ்ணுபிரியாவினுடைய தற்கொலைக் கடிதத்தின் 15 பக்கங்களில் 9 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இது மிகப்பெரிய மோசடியும் அந்த சம்பவத்தை மூடி மறைப்பதற்குண்டான நடவடிக்கையுமாகும். ஒருபக்கம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் சாவுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மொத்தத்தில் இங்கு எலும்புக்கூடுகள் மீதும் பிணங்களின் மீதும் தான் ஆட்சி நடத்துகிறார்கள் என்று நான் குற்றம் சுமத்துகிறேன்" என்று கூறினார்.
புதிய தமிழகம் சட்டப்பேரவையிலிருந்து 2-வது முறையாக வெளிநடப்பு!
கோவை அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் சரியான விளக்கம் அளிக்க பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததைக் கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையிலிருந்து இரண்டாவது முறையாக இன்று வெளிநடப்பு செய்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
"கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. அதில் பல்வேறு விசயங்கள் தொய்விலே இருக்கின்றன. அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்று நான் அந்த அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை குறித்து பேச முற்பட்டபோது அதற்கு பேரவைத்தலைவர் அனுமதி மறுத்தார். எனவே அதை கண்டிக்கக்கூடிய வகையிலே அவையினுடைய நடவடிக்கைகளிலிருந்து இன்று இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்திருக்கிறேன். குறிப்பாக கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் மத்திய அரசினுடைய நிதி உதவியால் 1988-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரக்கூடிய பல்கலைக்கழகமாகும். 2010-ஆம் ஆண்டு மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையும் பல்கலைக்கழக மானியக் குழுவும் இணைந்து ஒருசில விதிமுறைகளை வகுத்தன. அதாவது மத்திய அரசின் நிதி உதவியால் செயல்பட்டு வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுடைய வேந்தர்களாக இருக்கக்கூடியவர்கள், துணைவேந்தர்களாக இருக்கக்கூடியவர்கள் அந்த பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் அறக்கட்டளையைச் சார்ந்தவர்கள், அதேபோல அதனுடைய உறவினர்கள், சொந்தபந்தங்கள் மற்றும் அந்த அறக்கட்டளைக்கு தலைமை தாங்கக் கூடியவர்களாக இருக்க கூடாது. ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக அவினாசிலிங்கம் அறக்கட்டளையின் தலைவராக இருக்கக்கூடிய மீனாட்சிசுந்தரம் தான் இதுவரையிலும் அந்த பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக இருக்கிறார். இதுதான் இப்போது இருக்கக்கூடிய பிரச்சினை. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டும் அவர் அந்தப் பதவியிலிருந்து இறங்க மறுக்கிறார். அவர் அந்த பதவியிலிருந்து விலகினால் தான் ஒரு கல்வியாளரை அந்தப் பதவியில் நியமிக்க முடியும். இந்த இடைவெளி நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகத்தான் மத்திய அரசு தனது நிதியுதவியை நிறுத்தியிருக்கிறது. எனவே தான் இந்த பல்கலைக்கழகத்தை மெல்ல மெல்ல சுயநிதி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குண்டான வேலைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். எனவே மத்திய அரசு சிறிதளவு கூட விட்டுக்கொடுக்காமல் தற்போது இருக்கக்கூடிய வேந்தரை நீக்கிவிட்டு ஒரு கல்வியாளரை புதிய வேந்தராக நியமிக்க வேண்டும். அதற்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்குமா? என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது. இந்தக் கேள்விக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பதிலளிப்பதற்கு பேரவைத்தலைவர் மறுத்தார். தொடர்ந்து பேரவைத் தலைவர் இந்த சட்டமன்றத்தை அ.தி.மு.க.வின் அவைக்குழுவாகவே நடத்தி வருகிறார். எனவே அவருடைய ஜனநாயக விரோதப்போக்கைக் கண்டிக்கக்கூடிய வகையிலே இன்று இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழக சட்டப்பேரவைக்கு சபாநாயகரை கண்டிக்கும் பதாகையுடன் சென்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் . டாக்டர் .கிருஷ்ணசாமி .M .D .M .L .A .,, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
......பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
கடந்த 2015-க்குப் பிறகு தமிழகத்தில் சாதியப் படுகொலைகளுக்கு ஆட்பட்டு உயிர்நீத்த பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த எவருடைய குடும்பத்திற்கும் இந்த அரசு அரசு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் எல்லா விதமான அரசு சலுகைகளையும் வழங்குகிறார்கள். இது குறித்து பேசுவதற்கும்,
அதேபோல கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மரணமடைந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் மர்மமான மரணம் குறித்து பேசுவதற்கும், கோகுல்ராஜ் கொலைக்குற்றவாளிகளை கைது செய்வது குறித்து பேசுவதற்கும் இந்த அவையிலே நேரமில்லா நேரத்திலே பேசுவதற்கு நான் அனுமதி கேட்டேன். ஆனால் அவைத் தலைவர் அனுமதி மறுத்தார். சட்டசபையில் பேச அனுமதி மறுத்த பேரவைத் தலைவரைக் கண்டிக்கும் வகையிலே “DOWN DOWN DICTATOR SPEAKER DOWN DOWN” என்ற வாசகம் அடங்கிய பதாகையை பேரவையிலே காட்டினேன். எனவே அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பதாகக் கூறி என்னை சட்டமன்றத்திலே வெளியேற்றியிருக்கிறார்கள். அதற்குண்டான பலனை இந்த அரசு விரைவிலே அனுபவிக்கும்..

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

.... வெள்ளை அறிக்கை வேந்தர் . மாண்புமிகு டாக்டர் அய்யா அவர்கள் வெளிநடப்பு ..........புதிய தமிழகம் கட்சி நிறுவனர் ..டாக்டர் .க .கிருஷ்ணசாமி ...M .D .M .L .A ., அவர்கள் 
பேசும் போது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 2.42 லட்சம் கோடி முதலீடு வந்ததாக தீர்மானத்தில் கூறப் பட்டுள்ளது.
இந்த முதலீட்டில் தென் மாவட்டங்களில் அதிக தொழில் தொடங்கப் பட வேண்டும். எந்த எந்த நிறுவனம் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்பட வில்லை. (அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்) 4 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றார்.
இதில் இட ஒதுக்கீடு உண்டா என்று தெரிவிக்க வேண்டும். இந்த தீர்மானத்தை வரவேற்க ஒன்றுமில்லை. எனவே எதிர்க்கிறேன் என்றார். பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் 

தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றம் குறித்து மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் .க.கிருஷ்ணசாமி M .D .M .L .A ., அவர்களின் கருத்து ..!!!

. (19:05:2014 )ஞாயிறு அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்காணலில் பட்டியலில் இருந்து விடுபடுவது குறித்து டாக்டர்
க.கிருஷ்ணசாமி அவர்கள் விரிவாக பேசி உள்ளார்.
அவர் கூறியதாவது:-
தேவேந்திர குல வேளாளர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வோரு சமுதாயமும் தங்களுடைய அடையாளத்திற்க்கா போராடி வருகின்றனர். அது போலவே காலாடி, பண்ணாடி, வாதிரியான், தேவேந்திர குலத்தான், பள்ளன் போன்ற பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக அழைக்கக் கூடிய ஒரே சமுதாய மக்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்று இந்த சமூக மக்கள் தொடர்ந்து 60 வருடங்களுக்கு மேலாக போராடியும், குரல் கொடுத்தும் வருகிறார்கள்.
அது எந்த விதத்திலும் தவறு இல்லை. இதை ஒரு அரசாங்கம் ஒரு சின்ன ஒருசொட்டு மையுங்கூட செலவாகாது அதற்க்கு உத்தரவு போடுவதற்க்கு. இன்றைக்கு இருக்கும் திராவிட இயக்கங்களுக்கு மனசு வரவில்லை.
இதனால் வெறுப்புற்ற அச் சமூக மக்கள், திராவிட கட்சிகளின் அரசாங்கமும் , திராவிட இயக்கங்களும் நம்மை இன்னும் பள்ளர்/ மள்ளர் என்று கூப்பிட்டு என்று கூப்பிட்டு சிறுமைப் படுத்தி பார்ப்பதில் தான் அதிமுக , திமுக விரும்புகிறது என்பதை நினைத்து , வெறுப்புற்ற மக்கள் , அப்படியானால் இந்த பாட்டியலில் இருந்தே விடு பட வேண்டும் என்று நினைக்க துவங்கி விட்டனர்.
பட்டியலே வேண்டாம் என்றும் சொல்ல
ஆரம்பித்து விட்டனர். இதில் நியாயம் இருகின்றது.
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்ல முடியாது. அதே நேரத்தில் அந்த மக்களுடைய பார்வை இப்போழுது ; இந்த அரசாங்கம் தங்களை ஒரு கெளரவத்தோடு அழைப்பதற்க்கு தயங்குகிற காரணத்தினால் இந்த ஒதுக்கீடு- தாழ்த்தப் பட்ட பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வுகள் தேவேந்திர குல மக்கள் எல்லோருக்கும் இருக்கின்றது.
இட ஒதுக்கிடே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்த இழிவோடு பட்டியலுக்குள் இருக்க வேண்டாம் என்று நினைக்கிறார்கள்.
பொதுவாக தங்களை பட்டியலில் இருந்து விடுவித்து, எம்.பி.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக படித்தவர், படிக்காதவர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது.
இவ்வாறு கூறினார்

DSP விஷ்ணுபிரியா தற்கொலையும் , S .G . முருகையன் M .P படுகொலையும் ...... புதிய தலைமுறை நேர்பட நிகழ்ச்சியில் புதிய தமிழகம் நிறுவனர் .. டாக்டர் . க . கிருஷ்னசாமி ..M .D .M .L .A ., அவர்கள் ....!!! ...


புதிய தலைமுறை நேர்பட நிகழ்ச்சியில் .... DSP விஷ்ணுபிரியா அவர்களின் தற்கொலை குறித்து டாக்டர் அய்யா அவர்கள் .... ஜெயா தொலைகாட்சியில் யார் ஒருவர் இறந்தாலும் அனுதாபமும் , அஞ்சலியும் செலுத்துகின்ற முதல்வர் ஏன் . DSP விஷ்ணுபிரியா அவர்களின் தற்கொலை குறித்து கருத்து எதுவும் சொல்லவில்லை ...இதன் பின்னணியில் சாதியையும் , அரசியலும் இருக்கிறது ... கோகுல்ராஜ் படுகொலை குறித்து விசாரணை செய்த DSP விஷ்ணுபிரியா அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன , அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் ... கடந்த 40 வருடமாக தமிழகத்தில் { anti dalidh movement ) பட்டியல் சமுக மக்களுக்கு எதிராகதான் செயல்படுகின்றனர் .... உ தாரணமாக திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த முன்னால் நாகை நாடாளுமன்ற உ றுப்பினர் .. தோழர் ..S .G . முருகையன் அவர்களை படுகொலை செய்த வழக்கின் குற்றவாளிகள் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டனர் ..

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம் .டி .,எம்.எல்.ஏ., அவர்கள் சென்னையில் அளித்த பேட்டி:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம் .டி .,எம்.எல்.ஏ., அவர்கள் சென்னையில் அளித்த பேட்டி:
தமிழக சட்டபேரவை, கடந்த 4 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் பேரவை மரபு, மாண்பு, சட்டத்துக்கு முரணாக செயல் படுகிறது. பேரவை தலைவர் பாரம் பரிய மிக்க சட்ட பேரவையின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கிறார். சட்டபேரவை கூட்டம் தொடங்கிய நாளில் இருந்து எதிர் கட்சிகள் கொடுக்கும் எந்த ஒரு தீர்மானத்தையும் எடுத்து கொள்வதில்லை. மாறாக புகழ் பாடுபவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது ஜனநாயகத்துக்கு விளைவிக்க கூடிய ஊறு.
காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது எதிர்க் கட்சி தலைவர்களுக்கு வாய்ப்பு தரப்பட வில்லை. சட்டமன்றம் அதிமுகவின் ஆட்சி மன்ற குழு கூட்டமாக மாறியுள்ளது. 7 கோடி மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்க முடிவதில்லை. இதை சுட்டி காட்டும் வகையிலும், சட்டப் பேரவையில் ஜனநாயக விரோத போக்கை கண்டித்தும் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தப் படும். மேலும், கிராமம் தோறும் சென்று ஜனநாயகத்தை மீட்டெடுப்பது குறித்து மக்களிடம் விளக்கப்படும்.
1989ம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டம் விதிகளின் படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு வேலை மற்றும் போதிய நிவாரணங்கள் வழங்கப் பட வேண்டும் என்பது விதி. ஆனால், 2011க்கு பிறகு சாதி கலவரத் தால் இறந்தவர்களுக்கு எந்த நிதியும், அரசு வேலையும் வழங்கப்படவில்லை. சட்டப் பேரவை நடக்கும் நேரத்தில் சிபி சி ஐடி போலீசார் நடத்தும் விசாரணை வேகத்தை காட்டும். அதன் பிறகு வேகம் குறைந்து விடும். டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலையில் அரசியல் பின்னணி உள்ளது. தற்கொலை விஞ்ஞானரீதியில் நடந்துள்ளது. தற்கொலையில் கூலிப்படை பங்கு உள்ளதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. எனவே, நியாயமான விசாரணை நடைபெற உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!.. ..

தேவேந்திர குல வேளாளர்களின் வலிமையான கோரிக்கைகள் ....!!!!.. புறக்கணிக்கும் திராவிட ஆட்சிகள் ..!!!!.. .........................................பிறவி போராளி .டாக்டர் . க . கிருஷ்ணசாமி ..M .D .M .L .A அவர்கள் 1993 ம் ஆண்டு தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பை - தொடங்கினார் ..
மதுரையில் தொடக்கம் - கூட்டமைப்பின் தலைவராக தலைவர் தேர்வு.
1994 தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு எனப் பெயர் மாற்றம்.
1995 கொடியன்குளம் தேவேந்திர் கிராமம் அழிப்பு - வன்முறைக்கு எதிராக முதல் குரல் - பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராடுதல் - இழப்பீட்டுத் தொகை வழங்க கோரிக்கை - நீதிமன்றத்தில் வழக்கு - டெல்லியில் போராட்டம்...சென்னையில் அன்றைய அதிமுக அரசின் அடக்குமுறைகளை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்து சென்னையில் மாபெரும் கண்டன பேரணி ... தேவேந்திரர் சமுக தலைவர்கள் , பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு ...
1996 தமிழக சட்டமன்றத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் தனித்து போட்டி ஒட்டப்பிடாரம் தொகுதியில் - வெற்றி. (1996 - 2001 சட்டமன்ற உறுப்பினர் பணி)... போட்டியிட மற்ற 5 தொகுதிகளில் 15,000க்கும் மேற்பட்ட வாக்குகள் ..
1997 டிசம்பர் 15, புதிய தமிழகம் அரசியல் கட்சி தொடக்கம்... இதில் மிக முக்கியமான விடயம் அதிமுக அரசுக்கு எதிராக தேவேந்திர குல மக்கள் திமுகவை ஆதரித்தனர் ... தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தனித்து போட்டியிட்டது ...டாக்டர் அய்யா அவர்களை திமுக கூட்டணியில் சேர்த்துக்கொள்ள திராவிடர் கருணாநிதி விரும்பவில்லை .. ஆனால் நமது கோரிக்கைகளை நிறைவேற்றினாரா கருணாநிதி..?



28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை அருகே, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ..

28.09.2015....ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி சென்னை விருந்தினர் மாளிகை அருகே, அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் ...... இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் .கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, புதிய தமிழகம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காரணமான கோகுல்ராஜ் கொலைவழக்கு குற்றவாளிகளையும், பள்ளிப்பாளையம் மில் அதிபர் கொலைவழக்கு குற்றவாளிகளையும் கைது செய்து விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
குற்றவாளிகளுக்கு துணை போகும் காவல்துறையைக் கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.