எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 17 ஜனவரி, 2013

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் பொருட்கள் வினியோகம் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ஓட்டப்பிடாரம் தாலுகாவில் பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு திட்டத்தை டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பொங்கல் பரிசு
தமிழக அரசு அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.100 பணம் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க உத்திரவிடப்பட்டு உள்ளது.  ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 84 ரேசன் கடைகளில் 33 ஆயிரத்து 906 ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு திட்டம் வழங்கும் விழா பாஞ்சாலன்குறிச்சி ரேசன் கடையில் நடந்தது. விழாவுக்கு பாஞ்சாலன்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் லதா தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் தாசில்தார் ராமசுப்பிரமணியன், பொதுவிநியோகத்திட்ட சார்பதிவாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி
சிறப்பு அழைப்பாளராக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பொங்கள் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசுக்கு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து ஓட்டப்பிடாரம், குலேசெகரநல்லூர். முறம்பன், சங்கம்பட்டி. மலைபட்டி, புளியம்பட்டி ஆகிய கிராமங்களில் பொங்கள் பரிசுத் தொகுப்பு திட்டத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் பட்டவராயன் (தூத்துக்குடி), கதிரேசன் (ராமநாதபுரம்), அய்யப்பன் (திருச்சி), செல்லப்ப (நெல்லை), ராமராஜ் (விருதுநகர்), மாநில தொண்டரணி அமைப்பாளர் பூவாணி லட்சுமணபாண்டியன், ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், மாவட்ட பொருளாளர் கண்ணன், நெல்லை மாநகர இணை செயலாளர் எட்வர்ட், திருச்சி மாநகர செயலாளர் சங்கர், வீராபாண்டிய கட்டப்பொம்மன் நேரடி வாரிசு வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராமதாஸ் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரக்கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

ராமதாஸ் போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி தரக்கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் பருவ மழை பொய்த்துள்ளதால், டெல்டா மாவட்டங்களை போல, தென் மாவாட்டங்களிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்ட விவசாயிகளுக்கும் ரூ.13 ஆயிரம் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி, 18-ந்தேதிக்கு பின் போராட்டம் நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான மின்சாரம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு 8 மணி நேரமாவது மின்சாரம் வழங்க வேண்டும்.

ஏழைகளுக்கு இலவச பொங்கல் பொருள் ரூ.110 அடக்கத்தில் வழங்குகின்றனர். அரசு ஊழியர்களுக்கு போனஸ் ரூ.3000 வரை வழங்குகின்றனர். இந்த பாகுபாட்டை நீக்க வேண்டும். பட்டியல் இனத்தில் உள்ளவர்களில், அருந்ததியினருக்கு மட்டும் உள் ஒதுக்கீடு வழங்கியது கண்டிக்கத்தக்கது. 5 ஜாதிகளை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்ககோரி பிப்ரவரி 6-ந்தேதி திருநெல்வேலியில் போராட்டம் நடத்தப் படும்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அரசியலில் உச்சத்திற்கு சென்றார். தற்போது கீழே இறங்கி, மீண்டும் ஜாதி என்ற பாலர் பாடம் படிக்கிறார். தலித் மக்களுக்கு எதிராக, மற்ற ஜாதியினரை தூண்டி விடுவது கண்டிக்கத்தக்கது. தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தை, மாற்றி அமைக்க வேண்டும் என வருகிற 24-ந்தேதி ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளார்.

இதற்கு போலீசார் அனுமதித்தால், தலித் அமைப்புகள் சார்பில் அதே இடத்தில், அதே நாளில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

பா.ம.க.வை எதிர்த்து புதிய தமிழகம் போராடும்: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி


கரூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவுகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாததால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.13 ஆயிரம் வழங்கவேண்டும். டெல்டா பகுதியில் அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள்.

இதுபோல தமிழகத்தில் மேற்கு மற்றும் மத்திய மாவட்டகளிலும் ஏற்பட்டுள்ள வறட்சி பகுதிகளை அமைச்சர்கள் குழுவினரை பார்வையிட அனுப்பி வைக்க வேண்டும். தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

டெல்டா மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகை மற்ற மாவட்டங்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். சென்னையில் 2 மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் 14 மணிநேரம் முதல் 16 மணிநேரமும் மின்வெட்டு இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களுக்கும் சமமாக மின்சாரம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.

உட்பிரிவு சாதிகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அமைக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அபற்றி எந்த நடவடிக்கைகளும் இல்லை. எனவே அடுத்த மாதம் 6-ந்தேதி அனைத்து ஒன்றியங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் பேச்சு சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பதாக உள்ளது. அவர் மதுரையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட கலெக்டர் அத்தகைய நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு ராமதாஸ் நடந்து கொண்டது முறையல்ல. வன்கொடுமை சட்டத்தை வாபஸ் பெறகோரி பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதுபற்றி அவர்கள் போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் பா.ம.வை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.