எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

ஞாயிறு, 26 ஜூன், 2011

புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழுக் தீர்மானங்கள்

 


புதிய தமிழகம் கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம்  திருநெல்வேலி மாவட்டம்,சங்கரன்கோவில் பொன்விழா மைதானத்தில் ஜுன்,25,26 நாட்களில் கட்சியின் நிறுவனர்-தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடபட பொதுக்குழு உறுப்பினர்கள் 1200 பேர் கலந்து கொண்டனர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:-

1)குடும்ப ஆட்சி,அனைத்து துறைகளிலும் ஊழல்,அபரிவிதமான விலைவாசி ஏற்றம்,அனைத்து அரசு துறைகளும் செயல்படாத தன்மை போன்றவற்றிலிருந்து 2011 சட்டமன்ற தேர்தல் மூலம் தாய் தமிழகத்தை விடுவித்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான புதிய தமிழகம்,தே.மு.தி.க, சி.பி.ஐ(எம்),சி.பி.ஐ,சமத்துவ மக்கள் கட்சி,மனித நேய மக்கள் கட்சி,பார்வர்டு பிளாக்,அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்,இந்திய குடியரசு கட்சி,கொங்கு இளைஞர் பேரவை ஆகிய கட்சிகளின் தலைவர்கள்,அனைத்து மட்ட பொருப்பாளர்கள் அனைவருக்கும் புதிய தமிழகம் மாநில பொதுக்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

2)2011-ல் மக்கள் விரோத தி.மு.க ஆட்சியை அகற்றி, ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள அ.இ.அ.தி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டுவது பாராட்டுக்குரியது. இதே வேகத்தை தொடர்ந்து காட்டிட புதிய தமிழகம் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

3)தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு செப்டம்பர் மாதத்தில் மாநில மாநாடு நடத்த புதிய தமிழகம் பொதுக்குழு முடிவு செய்கிறது.


4)இந்திய  மக்களின் அனைத்து அவலங்களுக்கும் அடிப்படை காரணமாக விளங்குகின்ற ஊழலை வேரோடு களைய புதிய தமிழகம் கட்சி மக்கள் இயக்கம் ஒன்றை நடத்துவதென புதிய தமிழகம் பொதுக்குழு முடிவு செய்கிறது.

5) தென் தமிழகத்தின் கல்வி,தொழில் உட்பட அனைத்து துறைகளிலும் அனைத்து சமுதாயத்தினரும் சமமான வாய்ப்பை பெற்றிடும் பொருட்டு அனைத்து சமுதாய மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் பொருட்டு அனைத்து கிராமங்கள் நகரங்களில் அடுத்த மூன்று மாதத்தில் சமூக நல்லினக்க குழுக்கள் உருவாக்குவதென புதிய தமிழகம் பொதுகுழுக் முடிவு செய்கிறது.

6)1982 ஆம் ஆண்டு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்கான அந்தந்த மாநில பட்டியலின மக்களின் ஜனத்தொகைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது விதி அந்த அடிப்படையில் வரும் நிதிநிலை அறிக்கையில் 18% நிதியை உட்கூறு சிறப்பு திட்ட நிதியாக ஒதுக்கிட தமிழக அரசை புதிய தமிழகம் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

7)தி.மு.க ஆட்சியில் அனைத்து துறைகளிலும் மலிந்துவிட்ட ஊழல் குறித்து துறை வாரியாக தனி தனியாக விசாரணைக் கமிஷன் மேற்கொள்ளப்பட  புதிய தமிழகம் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மழைக் காலத்திற்குள் அனைத்து குளங்கள், கால்வரத்துக்கள் சரி செய்ய நடவடிக்கை- டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. பேட்டி

 


"பொதுமக்கள் கூலிக்கு வேலை செய்வதாக நினைத்து இதனை செய்யக் கூடாது. நமது கிராமத்தின் விவசாயம் செழிக்கவும்குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்று எண்ணி வேலை செய்ய வேண்டும்"
ஓட்டப்பிடாரம் தொகுதியில் மழைக் காலத்திற்குள் அனைத்து குளங்கள், கால்வரத்துக்கள் சரி செய்ய நடவடிக்கை-
 ஓட்டப்பிடாரம் அருகே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.  குளங்கள் தூர்வாரும் பணியினை ஆய்வு செய்தார். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் அதனைத் தொடர்ந்து அனைத்து பாசன குளங்கள் மற்றும் கால்வரத்துக்களை கடந்த இரண்டு வார காலமாக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.கிருஷ்ணசாமி பார்வையிட்டு பொதுப்பணித்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
 அதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை குலசேகரநல்லூர்  ஊராட்சிக்கு உட்பட்ட ஓசநூத்து துக்கன்குளத்தில் குளங்கள் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். 
துக்கன்குளத்தில் இருந்து ஆரம்பிக்கும் கால்வரத்து குணவங்குளம், செவல்குளம், மலர்குளம், பெரியகுளம் உள்ளிட்ட ஏழு குளங்கள் நிரம்பும் வகையில் சங்கிலித் தொடர்போல் அமைந்துள்ளது. ஆகவே இந்த கால்வரத்துகளையும், குளங்களையும் தூர்வார வேண்டும் எனவும், நான்கு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத துக்கன்குளம் சீரமைக்கப்படவும் டாக்டர்.கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகம் இந்தக் குளத்தினை சீரமைத்திட  ஐந்து லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
அதனைப் பார்வையிட்டு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மண்வெட்டி எடுத்து மண் தோண்டிய டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களது குறைகளையும் சம்பள விபரங்களையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொதுமக்கள் கூலிக்கு வேலை செய்வதாக நினைத்து இதனை செய்யக் கூடாது. நமது கிராமத்தின் விவசாயம் செழிக்கவும், குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படவும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்று எண்ணி வேலை செய்ய வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள அளவிற்கு வேலை செய்து 120 ரூபாய் சம்பளத்தினை எல்லோரும் பெற வேண்டும். நமது கிராமம் நன்றாக இருக்க வேண்டும் என எண்ணி வேலை செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயத்தினை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
 அதனை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குளங்கள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டால்தான் விவசாயம் செழிக்கும். இப்பகுதியில் புதியம்புத்தூர் மலர்குளம், ஓட்டப்பிடாரம் பெரியகுளம் உள்ளிட்ட குளங்கள் பெருகினால் ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பயன்பெறும்.
இன்னும் சிலநாட்களில் மழைக்காலம் துவங்கி விடும் அதற்கு முன்பு குளங்கள்கால்வரத்துக்கள் தூர்வாரப்பட்டுமறு சீரமைப்பு செய்து விவசாயத்திற்கான தண்ணீர் தேவைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது" என்றார்.  ஆய்வின் போது ஓட்டப்பிடாரம் ஒன்றிய ஆணையாளர் ராஜாமணிபொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன்ஒன்றிய உதவிப் பொறியாளர் எஸ்.ஜே.ரவிஊராக வேலை வாய்ப்பு திட்டத்தின் ஒன்றிய பணி  மேற்பார்வையாளர்  மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகளும்ஒன்றிய கவுன்சிலர் கண்ணன்புதிய தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் கனகராஜ்ஒன்றிய செயலாளர் பாபுமாவட்ட விவசாய அணி செயலாளர் பட்டவராயன்மாவட்ட இணை செயலாளர் எல்.கே.முருகன்புதூர் பாண்டியாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் முனியசாமிஓட்டப்பிடாரம் நகர செயலாளர் மனோகரன்சுடலைமணிசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர். 



ஸ்டெர்லைட் கழிவுகளால் கோரம்பள்ளம் குளம் மாசுபடுகிறது: டாக்டர் கிருஷ்ணசாமி

 

புதிய தமிழகம் கட்சி நிறுவனரும் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவுமான டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்கள் விரோத திமுக ஆட்சியை திரண்டெழுந்து விரட்டிய தமிழக மக்களுக்கு நன்றி கூறும் விதமாகவும், உள்ளாட்சி தேர்தல்களில் புதிய தமிழகம் போட்டியிடுவது குறித்தும் கட்சியின் மாநில மாநாடு விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக கட்சியின் மாநில பொதுக்குழு வரும் 25, 26ம் தேதிகளில் சங்கரன்கோவிலில் நடைபெற உள்ளது. 

இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து 1200 பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். தற்போதைய வறுமைகோட்டிற்கு கீழுள்ளோர் உள்ளோர் பட்டியல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகும். புதிய அரசு அறிவித்துள்ள முதியோர், விதவை, உடல் ஊனமுற்றோர் சலுகைகளைப் பெற புதிதாக வறுமைகோட்டிற்கு கீழுள்ளோர் பட்டியல் எடுக்க அரசு உத்தரவிட வேண்டும். 

சமச்சீர் கல்வி அமலாக்குவதைவிட அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, தனியார் பள்ளிகளுக்கு இணையாக கொண்டுவர அரசு முன்வர வேண்டும். உலக வெப்பமயமாதல் காரணமாக சீதோஷ்ணநிலை மாறி, மனிதர்கள் வாழ தகுதியில்லாததாகிவிட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை காற்று, நீர், நிலம் ஆகியவற்றை மாசுபடுத்துகிறது. புதுக்கோட்டை பகுதியில் ஸ்டெர்லைட் கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் கோரம்பள்ளம் குளத்தின் தண்ணீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். நீர், நிலம், காற்று மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அமைய வேண்டும்.

இத்தகைய தொழிற்சாலைகள் தங்கது தேவைக்காக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. இதற்காக ஓட்டப்பிடாரம் தொகுதியில் எனது வேண்டுகோளுக்கு இணங்க அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்து பாரத் போன்ற தொழிற்சாலைகள் அரசின் அனுமதி கோரி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளது. 

மாவட்ட ஆட்சியர் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று நான் வலியுறுத்தியுள்ளேன். 7.5 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு அனுமதி கேட்டு 7.5கோடி லிட்டர் தண்ணீரை அவர்கள் உறிஞ்சுகிறார்கள். தொழிற்சாலைகள் கடல்நீரை நன்னீராக மாற்றி தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி-திருநெல்வேலி மாவட்டங்களுக்கு கழிக்கப்பட்ட பஸ்களே இயங்குகிறது. புதிய பஸ்கள் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பஸ்கள் அறிவிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்வதில்லை. தனியார் பஸ் நிர்வாகிகள் பயணிகளை அடியாட்கள் கொண்டு மிரட்டுகிறார்கள். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் 

செவ்வாய், 21 ஜூன், 2011

புதிய தமிழ்கம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி சமக தலைவர் சரத்குமார் சந்திப்பு

 



புதிய தமிழகம் கட்சி தலைமை அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்களை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். அவர்களை புதிய தமிழகம் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வே.க.அய்யர், துறைமுகம் கண்ணன், பாஸ்கர் மதுரம்  ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ஓட்டப்பிடாரம் தொகுதி பாசன குளங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்

 


புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் கருத்தரங்கை ஒட்டி விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில் பல குளங்கள், கால்வரத்துகள், ஓடைகள் தூர் வாரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான உப்போடை பல ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. அதனை ஒட்டி டாக்டர். கிருஷ்ணசாமி கோரம்பள்ளம் குளம், காலான்கரைகுளம், அத்திமரப்பட்டி தாம்போதி பாலம், குலையன்கரிசல்  48 கண் மதகு, கூட்டாம்புளி குளம், பேய்க்குளம் குளம், பாசன விவசாய மடையான ஆறுமுகமங்கலம் குளம், தருவைக்குளம் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டையில் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான உப்போடை பல ஏக்கர் பரப்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மணல் மற்றும் ஸ்டெர்லைட் தொழிற்சாலை வெளியேற்றும் 'ஸ்லாக்' எனப்படும் அபாயக் கழிவுமண்  கொட்டப்பட்டு மேடாக்கி வைத்திருப்பதை நேரில்  பார்வையிட்டு  உடனே நடவடிக்கை எடுத்திட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பாசன குளங்களுக்கு நீர்வரத்தை தடுப்பது சட்ட விரோத செயல் எனவும் உடனே அதற்கு நோட்டிஸ் வழங்கவும் அறிவுறுத்தினார். உடன் உதவி செயற்பொறியாளர் விஜயராஜன், தாமிரபரணி வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் துரைசிங் கங்காதரன், தாமிரபரணி வடிநில பாசன பிரிவு அலுவலர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வில் கலந்து கொண்டனர்.    





திங்கள், 20 ஜூன், 2011

ஓட்டபிடாரம் தொகுதியில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் வங்கி முலம் பயிர்கடன்கள் பெற்று தருவதற்கு நடவடிக்கை என்று MLA டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்

 

ஓட்டபிடாரம் தொகுதியில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் வங்கி முலம் பயிர்கடன்கள் பெற்று தருவதற்கு நடவடிக்கை என்று MLA டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். புதுகோட்டை சத்யா மகாலில் ஓட்டபிடாரம் தொகுதி விவசாய வளர்ச்சி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.ஓட்டபிடாரம் தொகுதி MLA டாக்டர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.ஒன்றிய அ தி மு க விவசாய அணி செயலாளர் VPR சுரேஷ் முன்னிலை வகித்தார்.வேளாண்மை துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் தோட்ட கலைத்துறை உதவி இயக்குனர்கள் அல்பர்ட்,கனகராஜ்,வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் சங்கர்ராஜ்,இளநிலை பொறியாளர் சிதம்பரம்,கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் அசோகன் ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.புதிய தமிழகம் மாவட்ட செயலர் கனகராஜ்,ச ம க ஒன்றிய செயலர் ஜெகன் விவசாய சங்க தலைவர்கள் நிகோலஸ்,பிள்ளை முத்து,முருகேசன்,உட்பட விவசாயிகள் பலர் கருத்தாய்வில் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து MLA கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில் கடந்த 2006 முதல் 5 ஆண்டுகள் விவசாயம் மிகவும் குறைந்து விட்டது.விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளால் விவசாயம் செய்யவில்லை சரியான நேரத்தில் விதைகள் உரமானியம்,வங்கிகள் முலம் பயிர்கடன்கள்,உரமானியம் உட்பட பல்வேறு வசிதிகளை மேம்படுத்துவதற்காக இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது என்றும் கிருஷ்ணசாமி கூறினார்,அதனை தொடர்ந்து மானியவிலையில் உர முடைகள் வழங்கப்பட்டது.

இலங்கை பிரச்சினையில் இணைந்து செயல்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி கடிதம்

 

போர் குற்றவாளி ராஜ பக்சேவை தண்டிக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. போர் குற்றவாளி ராஜபக் சேவை கூண்டில் ஏற்ற தமிழக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட வேண்டும். அதனை வலியுறுத்தி காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு, ம.தி. மு.க., பகுஜன் சமாஜ் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் அமைப்புகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளேன்.
இப்பொழுதும் அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழ் இன உணர்வுகளும், சமுதாய இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும், வணிகத் தொழில் நிறுவனங்களும் அரசியல் மனமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு உலகமே வியக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த போராட்டத்தை நடத்த முன் வர வேண்டும். சாதி, மத, இன, கட்சி பேதங்களை மறந்து 7 கோடி தமிழர்களும் தமிழர்களாகவே எழுவதற்கும் தமிழினத்தை கொத்துக் கொத்தாக கொன்று குவித்த ராஜபக்சேவை தண்டிப்பதற்கும் இதுவே தருணமாகும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்திற்கு தமிழக எம்.எல்.ஏக்கள் குழுவை அனுப்பி உண்மை நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்


சட்டசபையில் நேற்று தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டால்தான் அங்கு தமிழர்கள் உரிமையைப் பெற முடியும்.இலங்கையில் உள்ள நிலைமையை நேரில் கண்டறிய தமிழக எம்.எல்.ஏ.க்கள் குழுவை அனுப்ப வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை குறித்துப் பிரதமருக்கு தெரிவிக்க முடியும் என்றார்.

பாமக சார்பில் கலையரசன் பேசுகையில், தனி ஈழம்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது பா.ம.க.வின் நிலை. இந்தத் தீர்மானத்தை பா.ம.க. முழு மனதாக வரவேற்கிறது. முதல்வருக்கும், அரசுக்கும் வெகுவாக பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், பொருளாதாரத் தடை விதிப்பது மட்டுமின்றி இலங்கையுடன் தூதரக உறவுகளையும் துண்டிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் இரு மடங்காக உயர வேண்டும்-டாக்டர்.க.கிருஷ்ணசாமி MLA

 



ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி விவசாயிகளுக்கு புதுக்கோட்டையில் விவசாய வளர்ச்சி கருத்தரங்கு  நடைபெறுகின்றது.
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர்.க.கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் யூனியன் வேளாண் உதவி இயக்குனர் மோகன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் விஜயராஜன்,
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கனகராஜ், கருங்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அல்பிரட், விவசாய பொருட்கள் விற்பனை உதவி இயக்குனர் ராஜா, வேளாண்மை பொறியியல் துறை உதவிப் பொறியாளர் சங்கர்ராஜ், இளநிலை பொறியாளர் சிதம்பரம், ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அலாய்சியஸ் மேரி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ராமனுஜம், கள மேலாளர் அமிர்தலிங்கம், , கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனரக வல்லுநர் டாக்டர்.அசோகன் உள்ளிட்ட விவசாயத் துறை அதிகாரிகளும், பிள்ளைமுத்து, அயிரவன்பட்டி முருகேசன், நிக்கோலஸ் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விவசாய மேம்பாடு குறித்து பேசினார்கள்.

கருத்தரங்கில் தலைமையேற்றுப் பேசிய டாக்டர்.கிருஷ்ணசாமி, விவசாயதஹி விட உலகில் உன்னதமான தொழில் ஒன்றும் கிடையாது. இன்று மெல்ல, மெல்ல நசிந்து போய்க் கொண்டு இருக்கின்றது விவசாயம். உழுபவருக்கு பின்தான் மற்றவர்கள் எல்லாம் செல்வார்கள் என இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே திருவள்ளுவர் கூறியுள்ளார். பல்வேறு காரணத்தினால் இன்று நிலைமை மாறிவிட்டது. ஆயிரம் முதல் ஐயாயிரம் ஏக்கர் வரை நில மோசடி நடந்துள்ளது. விவசாயம் சாராத, உபயோகமில்லாத தொழிற்சாலைகள்தான் இங்கு அமைந்துள்ளது. காற்றை மாசுபடுத்தி, நிலத்தடி நீரை மாசுபடுத்தி, மண்ணை மாசுபடுத்தி, மூச்சை முடமாக்கும், மனிதர்களே வாழ முடியாத அளவில்தான் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. காரணம் விவசாயத்திற்கு முன்னிரிமை கொடுக்காமல் முக்கியத்துவபடுத்தாமல் விட்டு விட்டதுதான். இல்லையென்றால் உயிரைவிட அதிகம் நேசித்த மண்ணை மக்கள் இழந்திருக்க மாட்டார்கள். 1996ல் நான் வெற்றி பெற்றபோது ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தினோம். பின்னர் பத்தாண்டுகளில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டது. இப்போது மீண்டும் அரிய வாய்ப்பை எனக்கு அளித்துள்ளீர்கள்.  ஒரு மாத காலத்தில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்துள்ளேன். தூத்துக்குடி திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்து கிராமத்திலும் நின்று செல்கின்றது. அறுபதுக்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தொழிற்சாலைகளுக்கும், பல கிலோ மீட்டர் தூரத்தில் சென்று நெடுஞ்சாலை பணிகளுக்கும் பயன்படுத்தினார்கள். இங்கே குடிநீர் ஆறு ரூபாய் விற்றது. இப்போது புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில் விவசாய நிலத்தில் இருந்து தண்ணீர் வியாபாரம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பத்து தினங்களுக்குள் முற்றிலும் அவை நிறுத்தப்பட்டு விவசாயிகளின் நலன் காக்கப்படும். நள்ளிரவில், அதிகாலையில் திருட்டுத் தனமாக எடுத்து செல்வது தடுக்கப்படும். இல்லையென்றால் கிணறுகள் முழுவதும் வற்றி விடும். விவசாயம் பாழ்பட்டு விடும். விவசாயம் வளர, நிலத்தடி நீர் காக்கப்பட விவசாயிகள் விழிப்புணர்வோடு கண்காணிக்க வேண்டும்.
ஒரு சொட்டு நீர் கூட குடிக்க இல்லாமல், விவசாயத்திற்கு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு அனுமதிக்க கூடாது. அதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக என்னிடம் நேரில் உறுதியளித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சில்லாநத்தம் கிராம மக்கள் மோசடியாக நிலம் பட்டா போடப்பட்டதாக புகார் தெரிவித்தனர். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இனி ஒரு சென்ட் நிலம் கூட போலி பட்டா போட ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனுமதிக்க கூடாது. சட்டசபையில் பதினைந்து நிமிடம் ஒதுக்கினார்கள் அதில் கன்னடியன் கால்வாய் குறித்து பேசினேன். ஒரு பகுதி மக்களின் கண்ணீரை எடுத்து இன்னொரு பகுதி மக்களுக்கு பன்னீரை தெளிப்பதா என்று கூறினேன். கன்னடியன் கால்வாய் உயரத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதிகாரிகள் முழு மனதோடு, நல்லெண்ணத்தோடு உங்களுக்கு உதவ வந்துள்ளார்கள் எனவே விவசாயத்திற்கான உரம் சரியாக வந்து சேரும். உர மூட்டைகள் வேறு எங்கும் மொத்தமாக செல்லாது. கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இன்னும் ஒரு வருடத்திற்குள் பத்தாயிரம் ஏக்கர் அதிகமாக விவசாயம் செய்ய வேண்டும். ஓட்டப்பிடாரம் தொகுதியில் விவசாயம் இரு மடங்காக உயர வேண்டும். சொட்டு நீர் பாசனம் மானியம் பயன்படுத்த வேண்டும்.
குலையன்கரிசல், கூட்டாம்புளி, அத்திமரப்பட்டி பகுதியில் வாழை மட்டும் போடாமல் மஞ்சள், கரும்பு, நெல் என மாற்றுப் பயிர்கள் பயிரிட வேண்டும். ஒருங்கிணைந்த விவசாயம் செய்வதில் ஈடுபட வேண்டும். தண்ணீர் வறட்சியான பகுதியான கோவை, நாமக்கல், ராசிபுரம் பகுதகளில் விவசாயம் சார்ந்த தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். ஒரு வீட்டில் ஐம்பது நாட்டுக் கோழி வளர்த்தால் முட்டை ஆறு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். பெண்கள் வீட்டில் இருந்து இதை செய்யலாம். ஐந்து ஏக்கரில் கோழி பண்ணை வைக்கலாம். ஓட்டப்பிடாரம் பூமி நல்ல வளமான  பூமியாக மாற்ற என்றும் உறுதுணையாக இருப்பேன். வரும் புதன்கிழமைக்கு பிறகு மண் பரிசோதனை செய்கின்றார்கள். நாளை பொதுப்பணித்துறை, யூனியன் குளங்கள் சுற்றிப் பார்க்க உள்ளேன்" என்று பேசினார்.
தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை மத்திய அரசின் உதவியுடன் கூடிய நுண்ணிர்ப்  பாசன திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற இலவசமாக  விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வேளாண்மை விற்பனை மையத்தின் சார்பில் மானிய விலையில் உளுந்து விதைகள் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 19 ஜூன், 2011

சீவலப்பேரியில் ரூ.250 கோடி செலவில் அணை கட்ட தமிழக அரசிடம் வலியுறுத்துவேன்.டாக்டர் க.கிருஷ்ணசாமி

 


தூத்துக்குடி : தூத்துக்குடி, கருங்குளம் மற்றும் ஒட்டபிடாரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் பயன்பெறும் வகையில் சீவலப்பேரியில் 250 கோடி ரூபாய் செலவில் அணை கட்ட தமிழக அரசை வலியுறுத்துவேன் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தெரிவித்தார்.


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்எல்ஏ., தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது; ஒட்டபிடாரம் சட்டசபை தொகுதியில் விவசாயத்தை மேம்படுத்த வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவு பாங்க் உள்ளிட்ட 10 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 1500 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 விவசாயிகளுக்கு அரசு சார்பில் மானிய விலையில் கொடுக்கப்படும் உரம், விதை, பவர் டில்லர், டிராக்டர், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகளை சரியான முறையில் சென்று வழங்கப்படவில்லை என்று கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். இதுபோன்ற தவறுகள் நடைபெறக்கூடாது என்றும், அரசின் நலத்திட்டங்கள் உரிய முறையில் விவசாயிகளுக்கு சென்று சேர வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

 விவசாயிகளுக்கு பாங்குகளில் பயிர்கடன் சரிவர கொடுக்கவில்லை என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய கூட்டுறவு பாங்க், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு பயிர்கடன் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டபிடாரம் தொகுதியில் நீர்மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கோரம்பள்ளம், பேய்குளம், பெட்டைகுளம், ஆறுமுகமங்கலம், தருவைகுளம் ஆகியவற்றில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளோம். கோரம்பள்ளம் மற்றும் பெட்டைகுளம் ஆகிய குளங்கள் தூர்வாரப்பட்டு இருகரைகளும் செம்மைப்படுத்தப்பட்டால் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும், தூத்துக்குடி மாநகர் உட்பட 300 கிராமங்களுக்கு எல்லா நாட்களிலும் குடிநீர் கிடைக்கும், சுற்றுலாத்தலமாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த 62 கோடி ரூபாய் செலவில் பொதுப்பணித்துறை ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற பொதுப்பணித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன்.

20 எம்ஜிடி திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள பெரிய தொழிற்சாலைகளுக்காக தண்ணீர் வழங்கப்பட்டு வருவதால், இனிமேல் வடகால் வாய்காலில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது. வடகாலில் இருந்து இனிமேல் தண்ணீர் எடுக்கபடாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர், விவசாய பணிகளைவிட தொழிற்சாலைகளுக்கு தான் அதிக அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் தொழிற்சாலைகளில் கடல்நீரை சுத்திகரித்து தண்ணீர் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் தொடங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு கடல் நீரில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கபட வேண்டும் என்ற உத்திரவாதத்திற்கு பின்னரே அனுமதி அளிக்க வேண்டும். 

மேலமருதூரில் உள்ள ஒரு தனியார் மின் உற்பத்தி நிலையத்தினர் மிகப்பெரிய ஓடை, சுடுகாடு, வழிபாட்டு தலங்கள், அனந்தமாடன்பச்சேரி என்ற கிராமத்திற்கு செல்லகூடிய பாதை போன்றவற்றை ஆக்ரமித்துள்ளனர். இதுபோன்ற தொ ழிற்சாலைகளால் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 21வது பிரிவில் கூறப்பட்டுள்ள நல்ல தண்ணீர், நல்ல காற்று, இருப்பிட வசதி போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை உப்பாற்று ஓடையில் மிகப்பெரிய அள வில் ஆக்ரமிப்புகள் நடந்து வருகிறது. இது போன்ற ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும்.

 தூத்துக்குடி, கருங்குளம், ஒட்டபிடாரம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் பயன்பெறும் வகையில் 250 கோடி ரூபாய் செலவில் சிவலப்பேரியில் உலக வங்கி நிதியுதவியுடன் ஒரு அணை கட்ட வேண்டும் என்று அரசை வலியுறுத்த உள்ளேன் என்றார்.


 அப்போது புதிய தமிழகம் கட்சியின் மாவ ட்ட செயலாளர் கனகராஜ், தூத்துக்குடி ஒன்றிய அதிமுக., விவசாய அணிச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

வெள்ளி, 17 ஜூன், 2011

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகதேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த அசோகன் நியமனம்

 


















 மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் ஆளுநர் உரையிலே வேண்டிக்கொள்வது , தேவேந்திர குல மக்களுக்கு, ஆதிதிராவிட மக்களுக்கு, அருந்ததிய மக்களுக்குக் கூட கூடுதல் பொறுப்பு கொடுத்து நீங்கள் தான் ஒரு அடையாளத்தை உருவாக்கித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளிலே தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த சமுதாய மதிக்கப்படும். தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு சமுதாய புரட்சி ஏற்பட வேண்டுமென்றுச் சொன்னால் அது அம்மா அவர்களால் தான் முடியும். அதன் காரனமாகத்தான் இந்தப் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறோம்..சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை






















தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கும் கோரிக்கைகள் மற்றும் அரசு சார்பில் மத்திய அரசை தொடர்பு கொள்ள டெல்லி பிரதிநிதி ஒருவரை மாநில அரசு நியமிக்கும். கடந்த தி.மு.க. ஆட்சியில் கம்பம் செல்வேந்திரன் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.






தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. அரசின் டெல்லி பிரதிநிதியாக முன்னாள் எம்.எல்.ஏ. அசோகனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.






பதவி கிடைத்தது பற்றி அசோகன்,






’’புரட்சித் தலைவி அம்மா, என்னை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமனம் செய்துள்ள தகவல் கிடைத்த போது முதலில் நான் நம்பவில்லை. எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அரசியலில் எனக்கு இது பெரிய பதவியாகும்.






தேவேந்திர குல வேளாளர்  சமுதாயத்தை சேர்ந்த என்னை தி.மு.க.வில் அவமானப்படுத்தி வெளியே அனுப்பினார்கள். அப்போது தாயாக ஆறுதல் கூறி எனக்கு அரசியலில் மறு பிரவேசம் அளித்தவர் புரட்சித் தலைவி. இப்போது உயர்ந்த பதவி கொடுத்து எனக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். அம்மாவை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்கள் என்பதற்கு நான் உதாரணம்.






நடந்து முடிந்த தேர்தலில் கீழ்வேளூர் தொகுதியில் போட்டியிட எனது பெயர் முதலில் வந்தது. அதன் பிறகு இந்த தொகுதி கம்யூனிஸ்டு கூட்டணிக்கு சென்று விட்டது. உடனே நான் கட்சி தொண்டன் என்ற முறையில் கம்யூனிஸ்டுக்கு ஆதரவாக வேலை பார்த்தேன்.






























தமிழ்நாடு முழுவதும் சென்று அ.தி.மு.க. பொதுக் கூட்டங்களில் பேசினேன். எனக்கு கிடைத்த பதவி விசுவாசத்துக்கு கிடைத்த பதவி. அம்மாவை என்றென்றும் மறக்க மாட்டேன்’’ என்று கூறினார்.














அசோகன் - தி.மு.க. சார்பில் 1996- 2001-ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.






2006-ம் ஆண்டு சட்டசபைத்தேர்தலில் தி.மு.க.வில் சீட் கிடைக்காததால், அந்தக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். அவருக்கு தலைமை கழக பேச்சாளர் பதவி கிடைத்தது.






சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முதலில் இவருக்கு சீட் கிடைத்தது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டபோது இந்த தொகுதி மார்க்சிஸ்டு கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதனால் அசோகனுக்கு எம்.எல்.ஏ. ஆகும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.






ஆனால் இப்போது அவருக்கு லாட்டரி அதிர்ஷ்டம் போல் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கிடைத்து இருக்கிறது. இந்த பதவி தமிழக அமைச்சர்களின் பதவிக்கு இணையானது. இவர் தேவேந்திர குல வேளாளர்  சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



புதன், 15 ஜூன், 2011

தமிழகத்தில் 3.5 லட்சம் பின்னடைவு பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை .

பட்டியல் வகுப்பினர்   மக்களுக்கு இட ஒதுக்கீடு. கடந்த 50 ஆண்டுகாலாக முறையாக அமலாக்கப்படாததால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் எத்தனை சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் கூட இன்னும் அந்த மக்களுடைய வாழ்க்கைத்தரம் முழுமையாக உயர்ந்தபாடில்லை. நிலமற்றவர்கள் என்ற கணக்கு பார்த்தால், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கக்கூடியவர்கள் என்று கணக்கெடுத்தால் அதில் பட்டியல் வகுப்பினர் மக்களிலே பெரும்பாலானவர்கள். எனவே குறிப்பாக பல்வேறு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள பின்னடைவு பணியிடங்கள், இலட்சக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்கள் அரசு பதவிகள் இருக்கின்றன. எனவே அந்தப் பின்னடைவுப் பணியிடங்களை எல்லாம் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும் அதுவும் குறிப்பாக உயர் பதவிகளிலே வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
      தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒரு பல்கலைகழகத்தில் கூட பட்டியல் வகுப்பினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக இல்லை. அரசு செயலாளர்கள் 34 பேர்களில் ஒரிருவர் மட்டும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் அவர்களிடத்திலேதான் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைக்க முடியும்.. சமுதாய நலனுக்கு எப்படியெல்லாம் அவர்கள் குரல் கொடுக்கிறார்களோ, உற்ற துணையாக விளங்குகிறார்களோ அதேபோல பட்டியல் வகுப்பினர் மக்களுடைய நிலை உயர வேண்டுமென்று சொன்னால் அவர்கள் ஒருவரால் தான் சாத்தியம் ஆகும்.
      இன்னும் கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் ஆளுநர் உரையிலே வேண்டிக்கொள்வது பட்டியல் வகுப்பினர் மக்களுக்கு, தேவேந்திர குல மக்களுக்கு, ஆதிதிராவிட மக்களுக்கு, அருந்ததிய மக்களுக்குக் கூட கூடுதல் பொறுப்பு கொடுத்து நீங்கள் தான் ஒரு அடையாளத்தை உருவாக்கித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளிலே பட்டியல் வகுப்பினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த சமுதாய மதிக்கப்படும். தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு சமுதாய புரட்சி ஏற்பட வேண்டுமென்றுச் சொன்னால் அது அம்மா அவர்களால் தான் முடியும். அதன் காரனமாகத்தான் இந்தப் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறோம்.

செவ்வாய், 14 ஜூன், 2011

சமுதாய நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்



ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறுகையில்,

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட 90 சதவீத கிராமங்களில் சாலைகள் அமைத்து 25 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. பல கிராமங்களுக்கு இணைப்பு சாலைகள் இல்லை.

கீழ கோடாங்கிப்பட்டி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வசதியில்லாமல் இருக்கின்றனர். மம்சாபுரம் பேரூராட்சியில் அம்மச்சியார்புரம் காலனி மக்களுக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.

பாட்டக்குளத்தில் எனது காருக்கு பின்னால் வந்த காரை, சமூக விரோதிகள் தாக்கியதில் பூமுடிராஜன் என்பவர் காயமடைந்தார். அவருக்கு அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் சிகிச்சையளிக்க மறுத்துள்ளனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை போலீசார் இன்று வரை கைது செய்யவில்லை.

மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை உருவாக்க, சுற்றுப்பயணம் செய்ய ஆரம்பித்த நாளில் இருந்து இது போன்ற சம்பவம் நடந்து வருகிறது. சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க கூடாது.

சமுதாய நல்லிணக்கம் வெறும் தேர்தல் கோஷமாக இருந்துவிட கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம். சமுதாய நல்லிணக்கம் இருந்தால் மட்டுமே தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்றார்.

புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி நன்றி



நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ. ராமசாமி வத்தலக்குண்டு தே.மு. தி.க. ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அவரை தே.மு.தி.க. ஒன்றிய செய லாளர் ஜெர்மன்ராஜா வரவேற்றார்.

எம்.எல்.ஏ. தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ய உழைத்த தே.மு. தி.க. ஒன்றிய, நகர நிர்வாகி களுக்கு சால்வை அணி வித்து நன்றி தெரிவித்தார். பின்னர் இந்நிர்வாகிகள் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்தனர். பின்னர் எம்.எல்.ஏ. ராமசாமி நான் தற்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வருகிறேன்.

சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக் காள பெருமக்களுக்கு நன்றி சொல்ல வருவேன். அப்போது அவர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அவைகளை களைய பாடுபடுவேன்.

சட்டசபையில் நான் முதன் முதலில் பேசப்போவது வத்தலக்குண்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பை-பாஸ் சாலை அமைக்க வேண்டும் என்றும், விருவீடு பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது பற்றியும், புதிய வழித்தடங்களில் பஸ்கள் விட வேண்டும் என்றும் வலியுறுத்துவேன் என்று கூறினார்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்திற்கு தமிழக எம்.எல்.ஏக்கள் குழுவை அனுப்பி உண்மை நிலையை நேரில் கண்டறிய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்

 .

சட்டசபையில் நேற்று தமிழர்களைக் கொன்றழித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பேசினர்.

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், ராஜபக்சே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டால்தான் அங்கு தமிழர்கள் உரிமையைப் பெற முடியும்.இலங்கையில் உள்ள நிலைமையை நேரில் கண்டறிய தமிழக எம்.எல்.ஏ.க்கள் குழுவை அனுப்ப வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை குறித்துப் பிரதமருக்கு தெரிவிக்க முடியும் என்றார்.

பாமக சார்பில் கலையரசன் பேசுகையில், தனி ஈழம்தான் இதற்கு நிரந்தரத் தீர்வு என்பது பா.ம.க.வின் நிலை. இந்தத் தீர்மானத்தை பா.ம.க. முழு மனதாக வரவேற்கிறது. முதல்வருக்கும், அரசுக்கும் வெகுவாக பாராட்டு தெரிவிக்கிறோம் என்றார்.

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா பேசுகையில், பொருளாதாரத் தடை விதிப்பது மட்டுமின்றி இலங்கையுடன் தூதரக உறவுகளையும் துண்டிக்குமாறு வலியுறுத்த வேண்டும் என்றார்.

தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்ற கோரிக்கை.சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை

நீண்ட நெடுநாட்களாக தேவேந்திர குல வேளார்கள் தங்களுடைய பெயரை  குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் என்றும்; அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட வேண்டும். பெயரையெல்லாம் ஒரே பெயராக தேவேந்திர குல வேளாளர்கள் என்று வைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளான குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகியவற்றை ஒன்றிணைத்து “தேவேந்திர குல வேளாளர்” என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று நேற்று ஏற்பட்டது அல்ல. ஏறத்தாழ முப்பது வருடங்களாக வைக்கப்பட்டு வரும் கோரிக்கையாகும். தேவேந்திர குல சமூகத்தின் எந்த இயக்கமானாலும், எந்த கட்சியானாலும் நடத்தும் மாநாடு மற்றும் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் முக்கிய தீர்மானமே இதுவாகத்தான் இருக்கும். குறிப்பாக புதிய தமிழகத்தின் சார்பில் பல்வேறு தருணங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்சட்டமன்றத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை!

 மதுரையிலே விமானநிலையத்திற்கு பெயர் வைக்க கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஏனென்று சொன்னால் சுதந்திர போராட்ட காலத்திற்குப் பிறகு அப்பொழுதே ஆங்கிலேயருடைய காலத்திலேயே அந்த மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் சின்ன உடைப்பை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே அரசாங்கத்தினுடைய விதிகளின் படி யார் நிலத்தை அரசாங்கத்தினுடைய கட்டிடங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் விரும்பக்கூடிய பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அந்த அடிப்படையிலேயும், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய வகையிலேயும் ஒரு முனையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் பெயரைச் சூட்ட வேண்டும். என்னுடைய வேண்டுகோளை வைத்து இதிலே பேசுவதற்கு வாய்ப்பு அளித்தத் தங்களுக்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன். வணக்கம்.

திங்கள், 13 ஜூன், 2011

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவித்து டாக்டர் க.கிருஷ்ணசாமி உரை

 


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, 14வது சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைமீது புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கருத்துகளை எடுத்து வைப்பதற்கு வாய்ப்பு கொடுத்திருக்கக்கூடிய உங்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
      இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 200 ஆண்டுகாலத்திற்கு முன்பே தங்களை ஈடுபடுத்திக் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மன், தளபதி சுந்தரலிங்கம், உலகக் கவிஞர் பாரதியார், உமறுப் புலவர், வாஞ்சிநாதன், வ.உ.சி போன்ற சுதந்திர போராட்டத் தியாகிகள், சமுதாயப் போராளிகளையெல்லாம் அடையாளப்படுத்தி, பெருமைப்படுத்தி அவர்களை தந்த ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலே இருந்து என்னையும் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு வெற்றி பெற வைத்து இந்த மாமன்றத்திற்கு அனுப்பி இருக்கக்கூடிய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்கள், குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர்கள், முக்குலத்து பெருமக்கள், நாடார் இன பெருமக்கள், பிள்ளைமார் இனம் என்று அனைத்து சமுதாய மக்களுக்கும், சமுதாய நல்லிணக்கத்திற்கு அடிக்கோலக்கூடிய வகையிலே என்னை வெற்றி பெற வைத்த அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
      2001-க்குப் பிற்கு ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த புதிய தமிழகம் கட்சியின் சார்பாக சட்டமன்றத்திலோ, நாடாளூமன்றத்திலோ வேறு எந்தப் பகுதியிலேயும் ஒரு பிரதிநிதி இல்லாத வேளையிலும்கூட நான் கடந்த 10 ஆண்டுக் காலமாக ஏழையெளிய மக்களுக்கு குரல் கொடுத்து புதிய தமிழகம் கட்சியை நடத்தி வருவதற்கு எனக்கு பல்வேறு வழிகளிலே அவர்கள் இப்போது உயிரோடு இல்லையென்றாலும் கூட என்னை ஈன்றெடுத்து கடந்த 30 ஆண்டுக் காலத்திற்கும் மேலாக பொது வாழ்க்கையிலே ஈடுபடுவதற்கு உற்ற துணையாக இன்னும் விளங்குகின்ற என்னுடைய தாய் தாமரை அம்மாள், தந்தை கருப்பசாமி அவர்களுக்கு இந்த வெற்றியை நான் காணிக்கையாக்குகிறேன். அதுபோல கடந்த 10 ஆண்டுக் காலமாக எல்லா சூழ்நிலைகளிலும் என்னோடு உற்ற துணையாக விளங்கிய புதிய தமிழகம் கட்சினுடைய தொண்டர்கள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அதுபோல தென் தமிழக தேவேந்திர குல மக்களுக்கும் என் நன்றியை காணிக்கையாக்குகின்றேன்.
      சில பேர் வரலாறுகளில் எப்போதாவது இடம் பெறுவார்கள். சில பேர் வரலாறுகளை எழுதி வைப்பார்கள். ஆனால் வரலாற்றை படைப்பவர்கள் ஒரு சிலர் அந்த வரிசையில் 3-வது முறையாக தமிழகத்தினுடைய முதல்வராக பொறுப்பேற்றிருக்கின்ற (மேசை தட்டும் ஒலி) புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பல்வேறு வரலாறுகளுக்கு சொந்தக்காரர். கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தமிழகத்தினுடைய நிலை என்னவாக இருந்தது என்று சொன்னால் ஒரு குடும்பத்தினுடைய ஆட்சி, அரசியல் சமூக பொருளாதார வாழ்விலே கிடைக்குமா? ஆட்சியை மாற்றி அமைக்க முடியுமா? அதற்கு யார் தலைமை தாங்குவார்கள், யாராவது இந்தத் தமிழ் மக்களை விடுதலை செய்வதற்கு முன்வருவார்களா என்று இந்தத் தமிழகத்திலேயிருந்து மட்டும் அல்ல தமிழகத்தினுடைய எல்லையிலிருந்து 10,000, 20,000 மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் எண்ணி ஏங்கின. ஈழத் தமிழ் மக்கள் எண்ணி ஏங்கினார்கள். இதோ தமிழ் மக்களுக்கு தமிழகத்திலே வாழக்கூடிய தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழக்கூடிய  தமிழ் மக்களுக்கும் நான் விடுதலை கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று அந்த மிதமிஞ்சிய பண பலத்தையும், ஆட்சிப் பலத்தினையும் எதிர் கொண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே தமிழக மக்களுக்கு விடிவுகாலத்தை உருவாக்கி இன்று மகத்தான ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கும், அதேபோல என்னுடைய ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலேயும் எங்களுக்கு அளிக்கப்பட்ட நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலேயும் பாடுபட்ட கூட்டணி கட்சியினுடைய அனைத்து வேட்பாளர்களுக்கும், நான் எண்ணி மலைக்கின்ற வகையில் எந்தவிதமான சிறிய எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பாடுபட்ட அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் (மேசை தட்டும் ஒலி) அனைவருக்கும் அதேபோல கூட்டணிக் கட்சியினுடைய முன்னணி செயல்வீரர்கள் தே.மு.தி.க, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, குடியரசுக் கட்சி, பார்வர்டு பிளாக், மனிதநேய மக்கள் கட்சி, ஆகிய கட்சியினுடைய முன்னணி செயல் வீரர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் வேட்பாளர்களான எங்களுக்கெல்லாம் பிரச்சாரம் செய்த அம்மா அவர்களுக்கும், அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சினுடைய மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் தா.பாண்டியன் அவர்கள், அன்பு சகோதரர் சரத்குமார் அவர்கள் அதேபோல முன்னாள் அமைச்சர் திரு.நயினார் நாகேந்திரன் ஆகியோர் எல்லாம் எனக்குப் பிரச்சாரம் செய்தார்கள் அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் உரித்தாக்குகிறேன்.
      இந்த ஆளுநர் உரையைப் பொறுத்தமட்டிலும் தமிழகத்தினுடைய வரலாற்றில் இது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்று நான் கருதுகிறேன். கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு வழிகாட்டி, மாவோஸ்டுகளுக்கு  Red Book  ஒரு வழிகாட்டி, லிபியாவினுடைய அதிபர் கடாபி அவருடைய பச்சைப் புத்தகம் ஒரு வழிகாட்டி அதேபோல இன்றைய ஆளுநர் உரை தமிழ்நாட்டு மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு அல்ல அடுத்த தலைமுறைக்கு (மேசைத் தட்டும் ஒலி) ஒரு வழிகாட்டியாக இருக்க்க்கூடியதாக நான் கருதுகிறேன். இதில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய அனைத்து கருத்துகளையும் பேசுவதற்கு போதிய நேரம் இருக்காது. இருந்தாலும்கூட ஒருசில கருத்துகள் மீது எனது கருத்துக்களை பதிய வைக்க விரும்புகிறேன்.
      குறிப்பாக நான்காவது பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கக்கூடிய மிக முக்கியமானது கடந்த ஆட்சியில் பயமுறுத்தி பலருடைய சொத்துக்கள் பறிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களுக்கு மீண்டும் வழங்க ஏதுவாக புதிய சட்டம் இயற்றப்படும் என்று சொன்னது தமிழகத்திலே எந்த மாவட்டத்திற்கு பொருந்துமோ பொருந்தாதோ ஆனால் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு மிக அதிகமாக பொருந்தும். ஏனென்று சொன்னால் கடந்த ஐந்தாண்டு காலத்தில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஏழை எளிய விவசாய மக்களுடைய விவசாய மக்களுடைய நிலங்கள் பெரிய பெரிய கம்பெனிகளால் போலி பத்திரங்கள் செய்யப்பட்டு பட்டா மாறுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. கோஸ்டல் எனர்ஜெண்ட் என்ற ஒரு கம்பெனி இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்களை வளைத்துள்ளது. 4 கோயில்கள் உள்ளே இருக்கிறது, 4 சமுதாயத்தினுடைய சுடுகாடுகள் உள்ளடங்கி இருக்கிறது, 6 ஏரிகள் உள்ளடங்கி இருக்கின்றன. இவைகள் எல்லாம் அரசாங்கத்தினுடைய சொத்துக்கள். இவற்றையும் சேர்த்து பட்டா போட்டிருக்கிறார்கள். அதே போல இன்பாரத் என்ற கம்பெனி கடந்த ஒரு மாத்த்திற்கு முன்பு வரையிலும் ஏழை எளிய மக்களை ஏமாற்றி பட்டா போடுகிறார்கள். எனவே இது ஒரு சமூக அளவில் மிகப் பெரிய குற்றம். எந்தக் கட்சிக்காரர்கள் இதற்குத் துணை போனாலும் அவர்கள் மீது புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்து அத்தனை சொத்துக்களையும் நீங்கள் மீட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன். அதே போல இப்போது குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிப்புத் திட்டம் (Crime and Criminal Tracking Network System)  என்று ஒட்டுமொத்தமாக சட்டம்  ஒழுங்கை பராமரிப்பதற்காக சொல்லப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் குறிப்பாக கொலை, கொள்ளை இந்த இரண்டும் தடுக்கப்பட வேண்டுமென்று சொன்னால் இதிலே அரசியல் தலையீடு எந்தக் காரனத்தைக் கொண்டும் இருக்கக்கூடாது. அதற்கு நாம் வழிவகை செய்தால் மட்டும் தான் இந்த இரண்டு மிகப் பெரிய சமூகக் குற்றங்களையும் தடுத்துட முடியும். எனவே எந்த அரசியல் தலையீடு இல்லை என்று தெரிந்தாலே அதிகாரிகள் அச்சப்படுவார்கள். அவர்கள் சரியாகப் போகிறார்களா, இல்லையா என்பதை நாம் சரியாகக் கண்காணிக்க முடியும். அரசியல் தலையீடு இருக்கின்ற பொழுது குற்றங்கள் தடுக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே விஞ்ஞான முறைகளை கையாளுகின்ற அதே நேரத்தில் அரசியல் தலையீடும் இல்லாத வகையிலே பார்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது தான் இந்த ஆளுநர் உரையிலே என்னுடைய கருத்தாகும்.
      அடுத்தது தமிழ் மொழியை வளர்ப்பதற்காக கோவையிலே செம்மொழி மாநாடு கூட்டினார்கள். ஆனால் அதே சமயத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தஞ்சையிலே துவக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைகழகத்திற்கு ஒரு பைசா கூட நிதி கொடுக்காமல் முடக்கிய வரலாறும் உண்டு. இன்று அதே தமிழ்ப் பல்கலைகழகத்தை மீட்டெடுக்கக்கூடிய வகையில் போதிய நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி திருவள்ளுவர் அவர்களுடைய உயர்ந்த திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களுடைய கவிதை, கட்டுரைகள் உலக மொழிகளிலே மொழிபெயர்க்கப்படும் என்று அறிவித்திருப்பது உண்மையிலே தமிழை வளர்ப்பதற்குண்டான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாகும்.
      ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அடிக்கடி வறட்சிக்கு இலக்காகும் பகுதி. தூத்துக்குடி மாவட்டம் கடலோர மாவட்டம் விளாத்திகுளம், புதூர், தூத்துக்குடி, கருங்குளம் ஒன்றியங்கள் எல்லாமே நல்ல நிலத்தடி நீர் இல்லாத பகுதி. ஆனால் அங்கே குடிப்பதற்கே இப்பொது எண்ணற்ற கிராமங்களில் கிராமக் குடிநீர் திட்டத்தை நம்பியே குடிநீர் பிரச்சனை சமாளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஸ்டெர்லைட் கம்பெனி, இன்பாரத் கம்பெனி மற்றும் சுற்றி இருக்கக் கூடிய கம்பெனிகளுக்கும் ஆயிரக்கணக்கான லாரிகளிலே ஆழ்துளை கிணறுகளை வைத்து நீர் திருடுகிறார்கள். எனவே இதைத் தடுப்பதற்கு ஏற்கனவே 2003 ஆம் ஆண்டு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் என்று கொண்டுவரப்பட்டு இன்னும் முழுமையாக சட்டமாக்கப்படாமல் இருக்கிறது. எனவே தமிழ்நாடு மேலும் தமிழக அரசு இப்போது பல்வேறு நலத் திட்டங்களை அறித்திருக்கிறது. குறிப்பாக முதியோர் உதவித் தொகை , விதவைகள், ஊனமுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோருக்கு என்று பல சமூகத் திட்டங்கள் வருகின்றன. ஆனால் அந்தச் சமூக திட்டங்கள் எல்லாம் உண்மையிலே பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டுமென்று சொன்னால் 2002 ஆம் ஆண்டு மத்திய அரசினுடைய வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்டிருக்கக் கூடிய B.P.L  என்று சொல்லக்கூடிய வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கக் கூடியவர்களுடைய அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு நிச்சயமாக இந்த திட்டங்களை அமலாக முடியவே முடியாது. எனவே புதிய வழிகாட்டுதலின்படி ஒரு B.P.L  அதாவது வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கக்கூடியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டே தீரவேண்டும். இல்லையேன்று சொன்னால் என்னதான் திட்டங்கள் கொண்டு வந்தாலும் கூட நூற்றுக்கு ஓரிரு பேருக்காவது சென்றடையுமா என்பது கேள்விகுறியாக இருக்கிறது. ஏனென்று சொன்னால் இப்போது முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு 17 பாயிண்ட்ஸ் வேண்டுமென்று சொல்கிறார்கள். இதை பார் தயாரிக்கிறார்கள் என்று சொன்னால் விநோதமாக, விந்தையாக இருக்கிறது. சாதாரண ஒரு சத்துணவு அமைப்பாளர், ஒரு அங்கன்வாடி அமைப்பாளர் வீட்டுக்கு செல்வது ஓட்டு வீடா, காரை வீடா என்று பார்ப்பது, ஆடு இருக்கிறதா, மாடு இருக்கிறதா என்று பார்ப்பது உடனடியாக அவர்கள் வறுமைக்கோடிற்க்குக் கீழே இருக்கின்றவர்களா? இல்லையா என்று முடிவு செய்து விட்டு அறிவித்து போய்விடுகிறார்கள்.
      நாங்கள் கடந்த ஒரு மாத காலமாக நன்றி தெரிவிக்க செல்கின்ற பொழுது பெறக் கூடிய மனுக்கள் 100 என்று சொன்னால் அதில் 90 மனுக்கள் முதியோர் உதவித் தொகை கேட்டே பெறப்பட்டன. எனவே அடுத்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும் நிச்சயாக இந்த அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிலே இருக்கும் (மேசையைத் தட்டும் ஒலி) தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக அம்மா அவர்கள் வீற்றுருப்பார்கள். ஆனால் நிறைய திட்டங்கள் அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்த சமூக நலத் திட்டங்கள், முதியோர், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோர் இதுபோன்ற திட்டங்களை மட்டுமே நூற்றுக்கு நூறு அமலாக்குவதற்கு உண்டான சரியான வழிமுறைகளை கையாண்டாலே இந்த அரசு மிகப் பெரிய வெற்றியை அடைந்து விடும் என்பதே நான் வைக்கக்கூடிய கருத்தாகும்.
      அடித்தது ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியிலே பல்வேறு சமூகப் பிரச்சினைகள் இருக்கின்றன, ஏற்கனவே அந்த பகுதி வறண்ட பகுதியாகும். அரசின் சார்பாக அந்த நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு உடனடியாக சட்டம் இயற்றி அதை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நான் வலியுறுத்துகிறேன்.
      அடுத்தது ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தமட்டிலும் மிக முக்கியமாக தூத்துக்குடி ஒன்றியம் மற்றும் கருங்குளம் பகுதிகளிலே வாழக்கூடிய ஏழை எளிய மக்கள் விவசாய மக்கள் பாதிக்கக் கூடிய வகையிலே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கன்னடியன் கல்வாய் என்ற ஒரு உபரிநீர் கால்வாய் வேறு ஒரு பகுதிக்கு கொண்டு செல்வதற்காக அங்கு ஏற்கெனவே இருந்த கன்னடியன் அணையினுடைய நீர் மட்டம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக தூத்துக்குடி ஒன்றியம், கருங்குளம் ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் பகுதியிலே பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்பிற்கு ஆளாகக் கூடிய நிலை இருக்கிறது. ஒரு பகுதி விவசாயிகளுடைய கண்ணீரை எடுத்து இன்னோரு பகுதிக்கு பன்னிராக தெளிப்பது நியாயமாக இருக்காது. எனவே கன்னடியன் அணைக்கட்டு உயர்த்தப்பட்டதை உடனடியாக உடைத்தெறியப்பட வேண்டும். அப்போதுதான் ஏற்கெனவே அந்தப் பகுதியிலே வளம் பெற்ற  விவசாயிகள் வாழ்வு மலர்ந்து இருக்க முடியும். ஆகவே அதற்கு ஆவன செய்யவேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
      அடுத்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு. கடந்த 50 ஆண்டுகாலாக முறையாக அமலாக்கப்படாததால் இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் எத்தனை சட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், எத்தனை திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும் கூட இன்னும் அந்த மக்களுடைய வாழ்க்கைத்தரம் முழுமையாக உயர்ந்தபாடில்லை. நிலமற்றவர்கள் என்ற கணக்கு பார்த்தால், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கக்கூடியவர்கள் என்று கணக்கெடுத்தால் அதில் தாழ்த்தப்பட்ட மக்களிலே பெரும்பாலானவர்கள். எனவே குறிப்பாக பல்வேறு ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள பின்னடைவு பணியிடங்கள், இலட்சக்கணக்கான பின்னடைவுப் பணியிடங்கள் அரசு பதவிகள் இருக்கின்றன. எனவே அந்தப் பின்னடைவுப் பணியிடங்களை எல்லாம் நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்திட வேண்டும் அதுவும் குறிப்பாக உயர் பதவிகளிலே வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
      தமிழ்நாட்டில் 24 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. ஒரு பல்கலைகழகத்தில் கூட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் துணை வேந்தர்களாக இல்லை. அரசு செயலாளர்கள் 34 பேர்களில் ஒரிருவர் மட்டும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் இரும்பு மங்கையாக இருக்கக் கூடிய அம்மா அவர்களிடத்திலேதான் நாங்கள் இந்தக் கோரிக்கையை வைக்க முடியும்.. சமுதாய நலனுக்கு எப்படியெல்லாம் அவர்கள் குரல் கொடுக்கிறார்களோ, உற்ற துணையாக விளங்குகிறார்களோ அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களுடைய நிலை உயர வேண்டுமென்று சொன்னால் அவர்கள் ஒருவரால் தான் சாத்தியம் ஆகும்.
      இன்னும் கூட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடத்தில் ஆளுநர் உரையிலே வேண்டிக்கொள்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, தேவேந்திர குல மக்களுக்கு, ஆதிதிராவிட மக்களுக்கு, அருந்ததிய மக்களுக்குக் கூட கூடுதல் பொறுப்பு கொடுத்து நீங்கள் தான் ஒரு அடையாளத்தை உருவாக்கித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். எந்த அளவிற்கு உயர்ந்த பதவிகளிலே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு அந்த சமுதாய மதிக்கப்படும். தமிழகத்திலே மிகப்பெரிய ஒரு சமுதாய புரட்சி ஏற்பட வேண்டுமென்றுச் சொன்னால் அது அம்மா அவர்களால் தான் முடியும். அதன் காரனமாகத்தான் இந்தப் பல்வேறு கோரிக்கைகளை வைக்கிறோம்.
      அடுத்து நீண்ட நெடுநாட்களாக தேவேந்திர குல வேளார்கள் தங்களுடைய பெயரை பள்ளர், குடும்பர், காலாடி என்ற பெயரையெல்லாம் ஒரே பெயராக தேவேந்திர குல வேளாளர்கள் என்று வைக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். அதையும் ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
      மேலும் மதுரையிலிருந்து தெற்கு மாவட்டங்கள் மிக மிக பின்தங்கியிருக்கிறது. தென் தமிழகம் முன்னேறவேண்டுமென்று சொன்னால் முதலிலே தொழிற்சாலைகள் எந்தக் காரனத்தைக் கொண்டும் சுற்றுப்புறச் சூழலை பாதிக்கக் கூடிய தொழிற்சாலைகளாக இருக்கக்கூடாது. தூத்துக்குடியிலே ஸ்டெர்லைட் ஆலை இருக்கிறது அந்த ஸ்டெர்லைட் ஆலையால் காற்று மாசுபடுகிறது, நிலத்தடி நீர் மாசுபடுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லுகின்ற காரணத்தினாலே உயிர் இழப்பு ஏற்படுகிறது. இப்படிப்பட்ட தொழிசாலைகள் வரக்கூடாது. கடந்த ஆட்சியில் 30 தொழிற்சாலைகள் கொண்டு வந்தார்கள். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே நின்றுவிட்டன. நம்முடைய ஆட்சியில் இனிமேல் எந்தத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும் ஒன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகரிலே என்று மாறிமாறி இருக்கவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
      மேலும் தென்தமிழகத்துக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டாமென்று சொன்னால் நான் புரட்சித் தலைவி அம்மா அவர்களிடம் கேட்டுக் கொள்வது ஆண்டுக்கு ஒரு முறையாவது சட்டமன்ற கூட்டத்தை மதுரையிலே நடத்திட வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதன் வாயிலாக தென் தமிழகத்துக்கு ஒரு முக்கியத்துவம் கிடைப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படும். மதுரையிலே விமானநிலையத்திற்கு பெயர் வைக்க கடந்த 10 ஆண்டுகாலமாக நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம் ஏனென்று சொன்னால் சுதந்திர போராட்ட காலத்திற்குப் பிறகு அப்பொழுதே ஆங்கிலேயருடைய காலத்திலேயே அந்த மதுரை விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்கள் சின்ன உடைப்பை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள். எனவே அரசாங்கத்தினுடைய விதிகளின் படி யார் நிலத்தை அரசாங்கத்தினுடைய கட்டிடங்களுக்கு கொடுக்கிறார்களோ அவர்கள் விரும்பக்கூடிய பெயரைச் சூட்ட வேண்டும் என்பது அந்த அடிப்படையிலேயும், சமுதாய நல்லிணக்கத்தை உருவாக்கக்கூடிய வகையிலேயும் ஒரு முனையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்கள் பெயரையும் இன்னோரு முனையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரையும் சூட்ட வேண்டுமென்று என்னுடைய வேண்டுகோளை வைத்து இதிலே பேசுவதற்கு வாய்ப்பு அளித்தத் தங்களுக்கு நன்றி கூறிவிடை பெறுகிறேன். வணக்கம்.