எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 30 அக்டோபர், 2014

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

தமிழகத்தில் மணல்,தாது மணல்,கிரானைட் கொள்ளையில் நடந்த முறைகேட்டினை கண்டறிய "நேர்மை நெறியாளர்" சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையில் விசாரனை நடத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பினை உடனடியாக அமுல்படுத்த வலியுறுத்தி 29-10-14 இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைப்பெறும் ஆர்ப்பாட்டம்.

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..

மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கான ஆணையை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, ‘இயற்கை நமக்கு தந்த கொடையை கொள்ளையடித்தவர்கள் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். சகாயத்துக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பால் விலையையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் சென்னை, வேலூர், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க் கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.201410292304083319_In-ChennaiNEWTamil-Nadu-partyDemonstration_SECVPF

கனிமவள கொள்ளை குறித்து சகாயம் விசாரணை குழுவுக்கு அரசு ஆணை வழங்கவேண்டும் சென்னையில், புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம்..



மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கான ஆணையை உடனடியாக தமிழக அரசு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசும்போது, ‘இயற்கை நமக்கு தந்த கொடையை கொள்ளையடித்தவர்கள் குறித்து விசாரிக்க ஐகோர்ட்டு நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தனது விசாரணையை தொடங்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்காவிட்டால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவோம். சகாயத்துக்கு அரசு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். மேலும் சமீபத்தில் உயர்த்தப்பட்ட பால் விலையையும் அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் சென்னை, வேலூர், திருச்சி, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க் கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக அரசே, சாகாயம் விசாரணைக்கு ஆணை வழங்கு! பால் விலை உயர்வை வாபஸ் வாங்கு- டாகடர்.க்.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்..


தமிழகத்தில் நடைபெற்றுள்ள கணிமவள கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சகாயம் (இ.ஆ.ப) சிறப்பு விசாரணை குழுவுக்கு தமிழக அரசு உடனடியாக ஆனை வழங்கிட வலியுறுத்தியும், தமிழக அரசு அறிவித்துள்ள பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர்.டாக்டர்.க.கிருஷ்ணசாமி எம்.டி.எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு திரு.சகாயம் விசாரணைக்கு ஆனை வழங்கவும், பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதில் அனைத்து ஒன்றிய, நகர, மாவட்ட செயலாளர்கள்,மாநில அமைப்பு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் புதிய தமிழகம் கட்சி ஆர்ப்பாட்டம் ..

இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு டாக்டர் கிருஷ்ணசாமி!

இன்று 2014, அக்டோபர் 28. புதிய தமிழகத்தின் சாதனைகளில் என்னை மிகவும் கவர்ந்த சரித்திர சாதனை நிகழ்ந்த நாள்தான் இன்று. ஆம்! இதே அக்டோபர் 28-ஆம் நாளை சுமார் 10 ஆண்டுகள் பின்னோக்கி 2003-ஆம் ஆண்டிற்குச் சென்று புதிய தமிழகத்தின் வரலாற்றுச் சுவடுகளில் பார்த்தால் இன்றைய தினத்தின் சிறப்பு தெரியும்.
1990-களின் மத்தியில் தமிழ்நாடு முழுவதிலும் புரையோடிப்போயிருந்த சாதி என்னும் உயிர்கொல்லி நோயை விரட்டியடித்து, சாதி ஆதிக்க வெறியர்களுக்கு சவுக்கடி கொடுத்து புறமுதுகிட்டு ஓடச்செய்த சரித்திர சாதனைக்கு சொந்தக்காரரான புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் – தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல, இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் கூட… ஆம்! இந்தியா முழுவதும் புரையோடிப்போயிருந்த இந்துத்துவ ஆதிக்கவெறி ‘விசுவ இந்து பரிஷத்’ எனும் பெயரில் தமிழகத்தில் நுழைய முயற்சித்தபோது முதல் ஆளாக போர் தொடுத்து இந்துத்துவ ஆதிக்க வெறியர்களை பின்னிட்டுப் பார்க்காமல் ஓடச்செய்த வரலாற்றுச் சாதனைக்குச் சொந்தக்காரர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் என்பது இங்கே அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் ஏதோ ஒரு அரசியல் தலைவர் என்று மட்டும் தான் இங்கு அநேகர் நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அவருடைய புரட்சிகரமிக்க போராட்ட வரலாற்றுச்சுவடுகளை அறிந்தவர்களுக்குத் தான் அவர் ஒரு “சமூகசமநீதிப் போராளி” என்பது தெரியும்.
இந்துத்துவ ஆதிக்கவெறியர்களின் பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத், தான் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இந்துக்களைப் பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில், ஆர்.எஸ்.எஸ்.-ன் அடையாளமாக திரிசூலம் (சூலாயுதம்) எனும் ஆயுதத்தை தன்னுடைய தொண்டர்களுக்கு வழங்கி இந்துத்துவத்தின் வேரை இந்தியாவெங்கும் பரப்பிக்கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக தனக்கு தொண்டர்களே இல்லாத தமிழகத்தில் வேரொரு ரீதியாக திரிசூலம் வழங்க விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டிருந்தது. ஆண்டுதோறும் அக்டோபர் 30-ல் அணுசரிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவரின் நினைவு நாள் நிகழ்வையொட்டி அந்த குறிப்பிட்ட சாதியின் இன்றைய தலைவர்களில் ஒருவரான முருகன் என்பவரின் ஏற்பாட்டில் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் ஒரு மாபெரும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து, அந்தக் கூட்டத்தில் வைத்து விசுவ இந்து பரிஷத்-ன் அகில உலக தலைவரான ‘பிரவீன் தொகாடியா’ தலைமையில் அக்கூட்டத்திற்கு வரும் தொண்டர்களுக்கு திரிசூலம் வழங்கி இந்துத்துவத்தை தமிழகத்தில் பரவலாக்க திட்டமிட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளும் வெகு மும்முரமாக முடுக்கிவிடப்பட்டன. விழாவுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து திரிசூலத்தை வழங்குவதற்காக தலைவர்களும், வாங்குவதற்காக தொண்டர்களும் தயார் நிலையில் இருந்தனர். இந்துத்துவ ஆதிக்க வெறியின் வாடையே நுகரப்பட்டிராத தமிழகத்தில் அத்தகைய தவறேதும் நடந்துவிடக்கூடாது, இங்கு நிலைகொண்டிருக்கும் சமூகநல்லிணக்கத்துக்கு சீர்குலைவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் முதல் ஆளாக தன்னுடைய அஸ்திரத்தை இந்துத்துவ ஆதிக்கத்திற்கு எதிராக தொடுத்தார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆம்! “அக்டோபர் 28-ஆம் நாள் மதுரையில் விசுவ இந்து பரிஷத் தலைவர் தனது தொண்டர்களுக்கு திரிசூலம் கொடுப்பதற்கு இந்த அரசு அனுமதித்தால் அதே மதுரையில் அதே 28-ஆம் நாள் நான் என்னுடைய தொண்டர்களுக்கு வாள் கொடுப்பேன்” என்பது தான் அந்த அஸ்திரம். அதோடு மட்டுமல்ல, புதிய தமிழகம் கட்சியின் அன்றைய மாவட்டச் செயலாளர் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வாள் கொடுக்கும் விழாவுக்கான அனுமதியும் கோரப்பட்டது. இதனையடுத்து தென்மாவட்டங்களில் அசாதாரண சூழ்நிலை உருவாகக்கூடும் என்பதை உணர்ந்த தமிழ்நாடு அரசு உடனடியாக திரிசூலம் வழங்கும் விழாவிற்கு தடை விதித்தது. ‘விசுவ இந்து பரிஷத்தும், அந்த குறிப்பிட்ட சாதி அமைப்பும் தயார் நிலையிலிருந்த தன்னுடைய விழாவை கைவிட்டன’. மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, மாநிலத்தில் அ.தி.மு.க. என மதவாத அரசுகள் ஆட்சியிலிருந்த காரணத்தால் மத்திய மாநில அரசுகளின் துணையோடு பெரும் துணிச்சலோடு தயார்படுத்தப்பட்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா மூலம் தமிழகத்தினுள் நுழையவிருந்த மதவாதம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிகண்ட இந்த திரிசூலம் வழங்கும் விழா எனும் ‘இந்துத்துவ ஆதிக்கவெறியை’ தமிழகத்தின் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்க்க முன்வராத, துணிந்திராத சூழலில் தனியொரு ஆளாக சாதி ஆதிக்கம், மதவெறி ஆதிக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கே எதிர்த்து நின்று, ஒற்றை அஸ்திரத்தால் இரண்டு ஆதிக்க வெறிகளை தூள்தூளாக்கி ஓடச்செய்த சரித்திர சிறப்புமிக்க சாதனையாளரான டாக்டர் அய்யா அவர்கள் சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடு மட்டுமல்ல… இந்துத்துவ ஆதிக்க எதிர்ப்பின் குறியீடும் டாக்டர் அய்யா அவர்கள் மட்டுமே…
இங்கே ஒன்றை கண்டிப்பாக சுட்டிக்காட்டியே ஆக வேண்டும் என்று நினைக்கிறேன்.
தமிழகத்தின் வரலாற்றுக் காலகட்டங்களில் சங்ககாலம் வரையில் இந்து என்றொரு சமயமே இருந்ததில்லை. சங்ககாலத்தின் இறுதியில் அதுவும் பல்லவர் காலத்தில் தான் இந்து என்கிற மதமே தமிழகத்தினுள் ஊடுருவி உறவாடுகிறது. பண்டைய தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களையும், கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் அழித்தொழித்து தன்னுடையவைளை உட்புகுத்தி தமிழர்களின் அடையாள அழிப்பு நிகழ்ந்ததே இந்த இந்து சமய வருகைக்குப் பின்புதான் என்பது வரலாறு அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். நிலவுடைமையாளர்களாக இருந்த தமிழர்களை குறிப்பாக உழவர்களை நிலமற்றவர்களாக்கி பண்ணை அடிமைகள் என்ற நிலைக்கு கொண்டு சென்றதும் இந்த இந்து மதம் தான்.
"நான் மேலே கூறிய சாதி ஆதிக்கம் மற்றும் இந்துத்துவ ஆதிக்கத்திற்கும் அடுத்து கூறிய தமிழர்களின் சுருக்க வரலாற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அதாவது சங்ககாலத்திற்கு பின்பு தமிழ்நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர்களின் ஆளுகைக்குட்பட்ட பகுதிவரை பரவியிருந்த இந்து மதமானது தமிழ் மன்னர்களை வீழ்த்தி தமிழ்நாட்டுக்குள் ஊடுருவுவதற்கு எந்த தமிழ்ச்சமூகம் அன்று துணையாக இருந்ததோ அதே தமிழ்ச்சமூகம் தான் இன்று அதே தமிழர்களுக்கு எதிராக ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பாக உருவாக்கப்பட்டு விசுவ இந்து பரிஷத் எனும் இந்துத்துவ ஆதிக்கத்தோடு கைகோர்த்து நிற்கிறது. பல்லவர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்த தமிழ்ச்சமூகங்கள் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை எதிர்த்தனவோ இல்லையோ, ஆனால் இந்த இருபத்து ஓன்றாம் நூற்றாண்டில் இந்த சாதி, மத கூட்டு ஆதிக்கத்தை ஒற்றை மனிதனாக அதிவேக நெஞ்சுரத்தோடு எதிர்த்து பண்டைய தமிழர்களின் வீரத்திற்கு இன்றளவும் செயல்வடிவம் கொடுத்து நிற்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் போர்குணமிக்க போராட்டங்களின் வாயிலாக
சாதி, மத பேதமற்ற சமத்துவ சமூகத்தை அமைப்போம்!
புதிய தமிழகம் படைப்போம்!!"

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

புதிய தலைமுறை டிவியில் இன்று இரவு 07:30 மணிக்கு.

புதிய தலைமுறை டிவியில் இன்று இரவு 07:30 மணிக்கு.

புதிய தலைமுறை டிவியில் இன்று இரவு 07:30 மணிக்கு.

புதிய தலைமுறையில் புதிய தமிழகம்!...

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் “தென்திசை உதித்த செஞ்சுடர். டாக்டர் அய்யா” அவர்கள் இன்று (12.10.2014 ஞாயிறு) இரவு 07.30 மணி முதல் 08.30 மணி வரை
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அக்னிபரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார். காணத்தவறாதீர்கள்

வெள்ளி, 3 அக்டோபர், 2014

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு!



அ.இ.அ.தி.மு.க வினர் நீதிபதிகளை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்!
1991 முதல் 1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் பதவி வகித்த காலத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சொத்து குவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அந்த வழக்கு கடந்த 18 ஆண்டு காலமாக 6 நீதிமன்றங்கள் 90 நீதிபதிகள் முன்பாக விசாரணை நடைபெற்று இறுதியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி தீர்ப்பும் கூறப்பட்டுவிட்டது.சிறப்பு நீதிமன்ற நீதிபதி திரு.ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும்,100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பும் கூறியுள்ளார்.இதே போன்று அவரது சகாக்களான சசிகலா,இளவரசி,சுதாகரன் ஆகியோருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சிறப்பு நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், இந்த தீர்ப்பை மறியல்,ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்களில் மேற்கொள்ளப்படும் காவல்துறை நடவடிக்கையைப் போன்று சித்தரித்து அ.இ.அ.தி.மு.க வினர் கடந்த 4 தினங்களாக நடத்திவரும் போராட்டங்கள் அனைத்து ஜனநாயக மாண்புகளையும் தவிடு பொடியாக்குபவையாக உள்ளன.
ஜனநாயகத்தில் நாடாளுமன்றம்-சட்டமன்றமும்,நிர்வாக அமைப்பும்,நீதித்துறை ஆகிய மூன்றும் பிரிக்க முடியாத அமைப்புகளாகும். இதில் எவை ஒன்று தாக்கப்பட்டாலும் அது ஜனநாயகம் ஊனப்படுத்தப்பட்டதாகவே கருதப்படவேண்டும்.அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனுடைய கடைசி புகலிடமாக விளங்குவது நீதிமன்றங்களே! எனவே அதைக் கட்டிக் காப்பது என்பது அனைத்து குடிமகனுடைய கடமையாகும்.
ஆளுங்கட்சியினரே அரசுப் பேருந்துகளை கொளுத்துவது,பொது சொத்துக்களை சேதப்படுத்துவது,சாலை மறியல் செய்வது,உண்ணாவிரதம் மேற்கொள்வது, அந்த உண்ணாவிரதத்தில் தீர்ப்பளித்த நீதிபதி,மற்ற எதிர்க் கட்சி தலைவர்களை வசை பாடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நீதிபதியினுடை பெயரை சொல்லி அவருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டி கொச்சைப்படுத்துவது,உள்ளாட்சி மாமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றுவது,நடிகர்-நடிகைகளை விட்டு உண்ணாவிரதம் இருக்க வைப்பது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையையேச் சாரும்.ஆனால் தமிழ்நாட்டிலுள்ள காவல்துறை மற்றும் பிற நிர்வாக அமைப்புகள் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை தடுத்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த வழக்கானது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரிலேயே கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டதே தவிர அந்த மாநில அரசுக்கும்,அம்மாநில மக்களுக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என்பதை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள எவரும் தெளிவுபடுத்தவில்லை.ஆனால், அ.இ.அ.தி.மு.க வினர் போராட்டங்களில் தேவையில்லாமல் இன்னொரு அண்டை மாநிலத்தோடு மோதல் போக்கை உருவாக்கி,ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளே மேலோங்கி வருகின்றன.
ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் இதே போன்று பல நீதிமன்றங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டு மேல்முறையீடு செய்துள்ளார்.,இப்பொழுது தண்டனைப் பெற்றிருக்கக் கூடிய சொத்து குவிப்பு வழக்கிலும் உயர் மற்றும் உச்ச நீதிமன்ங்களை நாடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர நீதிபதியையோ, நீதிமன்றங்களையோ விமர்சிக்க அனுமதிப்பது எந்த விதத்திலும் பலனளிக்காது.
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது நடைபெற்ற. முறைகேட்டின் விளைவாக போடப்பட்ட வழக்கு அதற்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்பதை அ.இ.அ.தி.மு.க வினரும், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து அமைப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து தமிழத்திலுள்ள எதிர் கட்சிகள் மற்றும் தலைவர்கள், நீதிபதிகள் மீது குறை சொல்லுவது,விமர்சிப்பது,உருவ பொம்மைகளை எரிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.உடனடியாக இது போன்ற ஜனநாயக விரோத செயல்களை தடுத்திட தமிழக காவல் துறையும்,நிர்வாக அமைப்பும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென புதிய தமிழகம் வலியுறுத்துகிறது.