எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நிலத்தடி நீர் விற்பனை ஐகோர்ட் தடையை விலக்கக்கோரி டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ அவர்கள் மனுத்தாக்கல்




ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலத்திலிருந்து தண்ணீர் எடுத்து தனியார்தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோட்டாட்சியர் விதித்த தடை உத்தரவுக்குஎதிராக ஐகோர்ட் கிளை விதித்துள்ள தடையாணையை விலக்கக்கோரி டாக்டர்கிருஷ்ணசாமி எம்எல்ஏ அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் ராட்சத போர்வெல்அமைத்து தண்ணீர் எடுத்துதனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இதற்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்தார்.
 இந்தத் தடையை எதிர்த்து கல்மேடு வடக்கு பகுதியை சேர்ந்த பால்ராஜ் உட்பட 12 பேர்,ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்மனுக்களை நீதிபதி அருணா ஜெகதீசன்விசாரித்துதண்ணீர் விற்பனைக்குத் தடை விதித்து கோவில்பட்டி கோட்டாட்சியர்பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில்இந்த தடையை விலக்கக்கோரி ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏவும்புதிய தமிழகம் கட்சியின்தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்இந்த மனுவைவக்கீல் பாஸ்கர் மதுரம் தாக்கல் செய்தார்அதில் கூறியிருப்பதாவது:
ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாய நிலங்களில் 800 அடி ஆழத்திற்கு போர்வெல் அமைத்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.இதனால்இப்பகுதி நிலங்கள் கட்சி வறட்சிக்குள்ளாகி வருகின்றனபொதுமக்கள் கிராமங்களைக் காலி செய்துவேலைக்காக வெளியூர் சென்று வருகின்றனர்சிலர் விவசாயத்திற்கான இலவச மின் இணைப்புப் பெற்றுதண்ணீர்எடுத்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர்நிலத்தடி நீரைச் சுரண்டுவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுவருகிறதுஇதைத் தடுக்க நான் கோட்டாட்சியரிடம் மனுக் கொடுத்தேன்அந்த மனுவை ஏற்றுவிவசாய நிலங்களில்இருந்து தண்ணீர் எடுத்துதொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய கோவில்பட்டி கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
ஏற்கனவே ஓட்டப்பிடாரம் பகுதியில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்குச் சென்று விட்டதால் குடிநீர் பஞ்சம்தலைவிரித்தாடுகிறதுபொதுமக்கள் ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்குகின்றனர்எனவேகோட்டாட்சியர்உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்இந்த வழக்கில் என்னை எதிர்மனுதாரராகச் சேர்க்கஅனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளதுஇந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

ஐ.நா துணை அலுவலகம் முற்றுகை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாகடர்.க.கிருஷ்ணசாமி MD MLA .,அவர்களுடன் ஆயிரக்கணகானோர் கைது...



தனிஈழம் அமைத்திட ஐ.நா மேற்பார்வையில் ஈழத்தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு உட்பட, கடந்த 60 வருடங்களாக ஈழ தமிழ் மக்கள் மீதும்,மலையகத் தமிழர்கள் மீதும் சிங்களப் பேரினவாத அரசு நடத்திய மனிதஉரிமை மீறல்கள்,போர் விதிமுறை மீறல்கள் அனைத்தும் இனஒழிப்பு நடவடிக்கைகளே.மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை விசாரிக்க அனைத்துலக சுதந்திரமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளப்பட வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது ஐ.நா-வில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் கடந்த ஆண்டைப் போலவே! நீர்த்துப் போய்விட்டது.
இதே சரத்துக்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஈழ தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது.
எனவே இலங்கை அரசுக்கெதிராக அமெரிக்க தீர்மானத்தில் உரிய திருத்தத்துடன் வலுவான தீர்மானம் கொண்டு வர இந்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும்.
மாநில அரசு இன்னும் கூடுதலாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.தமிழர்களுக்கு எதிராக நடந்தேறியுள்ள கொடிய போர்முறை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்ககூடாது என வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று 20.03.2013 காலை 10.30 மணி அளவில் சென்னையிலுள்ள ஐ.நா துணை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது
இப்போராட்டத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்திலிருந்தும் வந்த ஆயிரக்கணக்கான புதிய தமிழகம் கட்சியினர் காவல்துறையினரின் தடையை மீறி ஐ.நா துணை அலுவலகத்தை முற்றிகையிட்டு, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதானார்கள்.