எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 14 ஜூன், 2011

புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏ. ராமசாமி நன்றி



நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற புதிய தமிழகம் கட்சியின் எம்.எல்.ஏ. ராமசாமி வத்தலக்குண்டு தே.மு. தி.க. ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். அவரை தே.மு.தி.க. ஒன்றிய செய லாளர் ஜெர்மன்ராஜா வரவேற்றார்.

எம்.எல்.ஏ. தேர்தலில் தன்னை வெற்றி பெறச் செய்ய உழைத்த தே.மு. தி.க. ஒன்றிய, நகர நிர்வாகி களுக்கு சால்வை அணி வித்து நன்றி தெரிவித்தார். பின்னர் இந்நிர்வாகிகள் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்தனர். பின்னர் எம்.எல்.ஏ. ராமசாமி நான் தற்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டு வருகிறேன்.

சட்டசபை கூட்டம் முடிந்தவுடன் எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக் காள பெருமக்களுக்கு நன்றி சொல்ல வருவேன். அப்போது அவர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டு அவைகளை களைய பாடுபடுவேன்.

சட்டசபையில் நான் முதன் முதலில் பேசப்போவது வத்தலக்குண்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பை-பாஸ் சாலை அமைக்க வேண்டும் என்றும், விருவீடு பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பது பற்றியும், புதிய வழித்தடங்களில் பஸ்கள் விட வேண்டும் என்றும் வலியுறுத்துவேன் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக