எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 10 டிசம்பர், 2014

பேரவையிலிருந்து 3வது முறையாக கிருஷ்ணசாமி வெளிநடப்பு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்றும் வெளிநடப்பு செய்தார்.

சட்டப்பேரவையில் இன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, கனிம மணல் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

ஆனால், தீர்மானத்துக்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால் கிருஷ்ணசாமி இன்று 3வது முறையாக வெளிநடப்பு செய்தார்.
ஏற்கனவே சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி இரண்டு முறை வெளிநடப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக