எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

தி.மு.க.வின் போராட்டம் ஏமாற்று நாடகம்: டாக்டர் கிருஷ்ணசாமி

 



சென்னை, பிப். 16: மீனவர்கள் பிரச்னைக்காக தி.மு.க. நடத்தும் போராட்டம், தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஏமாற்று நாடகம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டினார்.
 இது பற்றி அவர் சென்னையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம்  கூறியதாவது:
 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசில் தொடர்ச்சியாக அங்கம் வகிக்கும் தி.மு.க., மிகுந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளது. தி.மு.க.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களையும் காப்பாற்றி இருக்க முடியும்; நமது மீனவர்கள் மீதான தாக்குதலையும் தடுத்து நிறுத்தியிருக்கலாம்.
 ஆனால், தி.மு.க. அதைச் செய்யத் தவறிவிட்டது. இப்போது, தி.மு.க. வேறு; மத்திய அரசு வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்தி, தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதற்காக போராட்டம் என்ற பெயரில் தி.மு.க. நாடகம் நடத்துகிறது. எனினும், இதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
 தமிழகத்தில் அதிகாரத்தில் உள்ள குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டியது அவசியம். எனவே, ஆட்சி மாற்றத்தை விரும்பும் அனைத்து சக்திகளும் தி.மு.க.வுக்கு எதிராக ஓரணியில் திரள
 வேண்டும்.
 அ.தி.மு.க. அணியில் எங்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பற்றியும், அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது தனி சின்னத்தில் போட்டியிடுவதா ஆகியவை குறித்தும் விவாதித்து,முடிவெடுக்க சென்னையில் இம்மாதம் 19-ம் தேதி கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார் கிருஷ்ணசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக