எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 19 பிப்ரவரி, 2015

சட்டப்பேரவையில் பேச அனுமதி அளிக்காததால் புதிய தமிழகம் வெளிநடப்பு

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறும்போது, ‘‘மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி இடம் மாற்றும் விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேச முயன்றபோது, பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.
வெளிநடப்பு செய்தது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறும்போது, ‘‘வனக்கல்லூரி மாணவர்கள் விவகாரம், சித்தா, ஆயுர்வேத கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், மோசமான சாலைகள் உள்ளிட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்த பேச முயன்றேன். ஆனால், பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக