எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

செவ்வாய், 1 செப்டம்பர், 2015

ஆகஸ்ட்31_தேவேந்திரகுல_மக்களின்_தன்னெழுச்சி _நாள்!


தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் .. டாக்டர் . க கிருஷ்ணசாமி .. அவர்கள் தலைமையில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் ..தூத்துக்குடி மாவட்டம், கொடியங்குளத்தில் 1995 ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி காவல் துறையினரால் தேவேந்திரகுல மக்கள் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
கொடியங்குளம் கிராமத்திற்க்கு டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நிவாரணம் கிடைப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.அதன் காரணமாக அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
சாதிய வன்முறைகளுக்கு சரியான பதிலடி எதிரியின் போர் உத்திகளையே நாமும் கையாள வேண்டும் என்ற டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் வழிகாட்டுதலால் தென் தமிழகத்தில் ‘தாக்கினால் திருப்பித் தாக்குவோம்’ புதிய உத்தி பின்பற்றப்பட்டது.
அச்சமயத்தில் தென் தமிழகத்தில் பெரும் பாலான கிராமங்களில் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு திரட்டினார்.சுற்றுப் பயணத்தின் இருந்த எழுச்சி, பலரது கவனம் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் பக்கம் திரும்பியது.
இந்த கொடியங்குளம் கலவரத்திற்க்கு பிறகு தான் தென்தமிழகத்தில் உள்ள தேவேந்திரகுல மக்கள் தன்னெழுச்சியாக எழுந்து போராட துவங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக