எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. 20ல் ராமநாதபுரத்தில் போராட்டம்

ராமநாதபுரம்: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி டாக்டா் கிருஷ்ணசாமி M.D.M.L.A.,.அவர்கள். ராமநாதபுரத்தில் நேற்று அளித்த பேட்டி: புதிய தமிழகம் கட்சி துவங்கப்பட்டதில் இருந்தே பூரண மதுவிலக்கு கோரி பிரசாரம் செய்து வருகிறது. காந்தியவாதி சசிபெருமாள் மறைவிற்கு பின் மதுவுக்கு எதிரான போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்கள் மதுவிலக்கு குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்.
போராட்டத்தை ஒடுக்கி விடலாம் என அரசு நினைத்தால் அது தவறு. 1971ல் மதுவிலக்கை ரத்து செய்ததை எண்ணி வருத்தப்படுகிறேன் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இதை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். தேவேந்திரகுல மக்களை ஒருங்கிணைந்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வலியுறுத்தி, ஆக. 20ல் ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்தவுள்ளோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக