எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 2 மார்ச், 2015

தொடர் கொலைகளுக்கு காரணமான மணல் கொள்ளை தடுக்க தனி குழு.. டாக்டர் கிருஷ்ணசாமி ..



ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் புதிய தமிழகம் கட்சி நகர செயலாளர் பாஸ்கரன் கடந்த பிப். 22ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரது பெற்றோருக்கு புதிய தமிழக கட்சி தலைவர்  கிருஷ்ணசாமி எம்எல்ஏ நேற்று ஆறுதல் கூறினார்.  பின்னர், கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:  பாஸ்கரன் படு கொலையை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தால் நீதிமன்றத் தின் அனுமதி பெற்று இங்கு வந்துள்ளேன். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சைக்கிள், வேன் மற்றும் டிராக்டர்களில் மணல் கொள்ளை நடக்கிறது. இங்கு மணல் கொள்ளையர்களால்தான் அதிக கொலைகள் நடக்கின்றன. இந்த கொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை தனி புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்படுகின்றனர். நேர்மையான போலீசாரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக