எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

சனி, 13 செப்டம்பர், 2014

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு...


கோவில்பட்டியில் தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
தியாகி இம்மானுவேல் சேகரன்தியாகி இம்மானுவேல் சேகரனின் 57–வது நினைவு நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புது ரோடு அம்பேத்கார் சிலை அருகே அவரது உருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. உருவ படத்துக்கு புதிய தமிழகம் கட்சி ஒன்றிய செயலாளர் பி.அன்புராஜ் தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட பொறுப்பாளர் கே.கருப்பசாமி, மாநில தொண்டர் அணி செயலாளர் பூவானி லட்சுமண பாண்டியன், ஒன்றிய தலைவர் கே.கனகராஜ், நகர இளைஞர் அணி செயலாளர் எம்.மாடசாமி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கே.பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக