எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

திங்கள், 3 பிப்ரவரி, 2014

சட்டப்பேரவையில் இருந்து கிருஷ்ணசாமி வெளிநடப்பு!






சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தொழில் முதலீட்டாளர்கள் மீது தமிழக அரசு அக்கறை செலுத்தவில்லை என புகார் தெரிவித்தார்.

இந்த புகாருக்கு அமைச்சர் உரிய விளக்கம் தராததால் வெளிநடப்பு செய்ததாக கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரை தி.மு.க., தே.மு.தி.க புறக்கணித்துள்ள நிலையில், கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்துள்ளார்.

மேலும், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக