எழுவோம் எழுவோம்.. தமிழராய் எழுவோம் ! விழ விழ எழுவோம்.. வீறுகொண்டு எழுவோம் !

புதன், 25 டிசம்பர், 2013

டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி..............


டிசம்பர்-25 கீழவெண்மணி தியாகிகளுக்கு புதிய தமிழகம் கட்சி வீர வணக்கம் -டாக்டர்.க.கிருஷ்ணசாமி வேண்டுகோள் புதிய தமிழகம் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:- இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும் சமுதாய பொருளாதார ஏற்ற தாழ்வுகள் நீக்கப்படவில்லை. பிறந்த நாட்டில் மூன்று செண்ட் வீட்டு மனையோ, ஒரு ஏக்கர் நிலமோ கூட சொந்தமாக இல்லாமல் இன்னமும் வறிய நிலையில் வாழ்வோர் எண்ணற்றோர். இந்த நிலை போக்க எத்தனையோ போராட்டங்கள் நடந்தி இருப்பினும். 1968ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதி தஞ்சை மண்ணாம் கீழ வெண்மணியில் நடந்த துயர சம்பவத்தை யாராலும் மறக்க இயலாது. உழைத்த உழைப்பிற்க்கு அரைப்பிடி நெல் கூடுதலாக கேட்டதற்காக முதியோர், பெண்கள், குழந்தைகள் என ஒடுக்கப்பட்ட மக்கள் 44 பேர் ஒரே குடிசையில் அடைத்து கொளுத்தப்பட்ட துயர சம்பவம் நடந்த நாள் அது. தியாகம் புரிந்தவர்கள் விவசாய தொழிலாளர்கள் எனினும் அவர்கள் அனைவரும் வீரம் செறிந்த வேளாண் குடிமக்கள் என்ற சமூக அடையாளம் அறவே மறைக்கப்பட்டுவிட்டது. அம்மக்களின் அளப்பரிய தியாகத்தை போற்றும் வகையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கீழவெண்மணி கிராமத்தில் அவர்கள் நினைவிடத்தில் டிசம்பர் 25ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் அஞ்சலி நடைபெறும். அதேபோல அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதிய தமிழகம் கட்சி மாவட்ட நிர்வாகிகள் சார்பாக நினைவஞ்சலி நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக