சட்டசபை கூட்டம்: புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி புறக்கணிப்பு!
இதுகுறித்து, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. கூறும்போது, ''நீலாங்கரை போலீஸ் நிலையத்தில் முஸ்லீம் சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடந்த சம்பவம், செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது உள்பட பல்வேறு பிரச்னைகளை பேசலாம் என்றிருந்தோம். ஆனால், சட்டசபையில் பொதுமக்கள் பிரச்னைகளை பற்றி பேச போதிய அவகாசம் தருவதில்லை.
இதற்கு முன்பு நான் 12 நிமிடம் தான் பேசியிருப்பேன். ஆனால், நான் 28 நிமிடம் பேசிவிட்டதாகவும், இனிமேல் பேச நேரம் ஒதுக்க முடியாது என்றும் கூறி பேச அனுமதி மறுத்து விட்டனர். அமைச்சர்கள் குறுக்கீடு அதிகம் இருப்பதால் எங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை.
முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பிரச்னை, ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு என பல்வேறு விசயங்கள் குறித்து முழுமையாக விவாதிக்க முடியாததால் இன்று சட்டசபைக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளோம்'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக